எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : தமிழ் நாட்டில் மணல் குவாரிகளை 6 மாதங்களில் மூட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆற்று மணல் விற்பனையை குவாரிகள் அமைத்து தமிழக அரசே நடத்தி வருகிறது. ஆனால் முக்கிய ஆற்றுப் படுகைகளில் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதாகவும், விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் எனவே ஆற்றில் மணல் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழக அரசு முடிவு
இதனையடுத்து மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆன்லைன் முன்பதிவு மூலம் மேற்கொள்ளும் புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மணல் விற்பனை செய்யும் குவாரிகள் எண்ணிக்கையை மேலும் 70 இடங்களில் உயர்த்தவும் தமிழக அரசு முடிவு செய்தது. மணல் தங்கு தடையின்றி, குறைந்த விலையில் கிடைப்பதற்கு அரசின் இந்த நடவடிக்கைகள் உறுதுணையாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் மணல் கிடைப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் மணலுக்கு தட்டுப்பாடு நீடித்தது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்து விற்கலாம் என்று தனியாருக்கு அனுமதி கிடைத்தது.
படிப்படியாக மூட...
அதன் பேரில் ராமையா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு மணலை கொண்டு வந்தது. ஆனால் அதை துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐகோர்ட்டின் மதுரை கிளை, “தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் படிப்படியாக மூட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
மேல் முறையீடு...
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் சார்பில் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், “தமிழ்நாட்டில் தற்போது மணல் விற்பனை ஆன்-லைன் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மணல் கடத்தல் குறைந்துள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது. மேலும், “வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் தொழிலக பயன்பாட்டுக்கான மணலாக உள்ளது. மாநில விதிக்குள் அது இல்லை. எனவே மணல் குவாரி மீதான தடையை விலக்க வேண்டும் என்றது. இதை ஏற்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இடைக்கால தடை...
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. தமிழக அரசு தனது மனுவில், “மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் தமிழ்நாட்டில் சுமார் 3 லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகள் முடங்கி உள்ளன” என்று குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. தமிழக அரசின் வாதங்களை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், “தமிழ் நாட்டில் மணல் குவாரிகளை 6 மாதங்களில் மூட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம்” என்று அறிவித்தனர்.
மீண்டும் 20-ம் தேதி...
இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசு மணல் குவாரிகள் மூலம் மணல் விற்பனை செய்யப்படுவது மீண்டும் பழையபடி தொடங்கி நடக்க உள்ளது. மணல் குவாரி மீதான ஐகோர்ட்டின் தடையை சுப்ரீம்கோர்ட்டு நீக்கியதை அறிந்ததும் மணல் குவாரி தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு மீண்டும் 20-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது.
மணல் குவாரி தடையை நீக்கி சுப்ரீம்கோர்ட்டு அளித்த உத்தரவு குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-
தமிழக மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மணல் கிடைக்க வேண்டும், அதே நேரத்தில் மலிவு விலையிலும் மணல் கிடைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழகத்தில் இருக்கும் மணல் குவாரிகளை படிப்படியாக 6 மாதத்தில் மூட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. அதை எதிர்த்து போடப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் அந்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது. உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து சுப்ரீம கோர்ட்டில் மேல் முறையீடு செய்து இரண்டு நீதிபதிகளுடைய உத்தரவுக்கு இன்றைக்கு (நேற்று) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் முயற்சிக்கு...
இந்த தடை உத்தரவால் மணல் குவாரிகளை மூடுகின்ற நிலை ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு தங்கு தடையின்றி மணல் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த முதல்வரின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 2 வாரங்களில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வைத்து அனைவருக்கும் தங்கு தடையின்றி மணல் கிடைக்க செய்வதுதான் அரசின் கொள்கை. அதற்காக இனி வரும் காலங்களில் அந்த வழக்கை தீவிரப்படுத்தி கண்டிப்பாக வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்.
அரசின் கொள்கை ....
எம் சாண்டின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை. அதற்காக எம்சாண்டை தயாரிக்கின்ற தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார். எனவே எம்சாண்ட் தயாரிப்பதில் தமிழக அரசு முனைப்பாக இருக்கிறது. திறக்கப்பட்டுள்ள மணல் குவாரிகள் அனைத்துமே சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்றுத்தான் திறக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் திறக்கப்பட உள்ள மணல் குவாரிகள் அனைத்துமே சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்றுத் தான் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.