எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : ஐபிஎல் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2018-ம் ஆண்டு சீசனில் கேப்டனாக தமிழரும், சென்னையைச் சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது, 2-வது தமிழர் கொல்கத்தா அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அடுத்தமாதம் தொடங்க உள்ளது. கடந்த மாதம் பெங்களூருவில் நடந்து முடிந்த ஏலத்தில் பல்வேறு அணிகளின் வீரர்கள் மாறினர் என்பதால், கேப்டன்களை நியமிப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வந்தது. கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து வந்த கவுதம் கம்பீரை இந்த முறை ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி எடுத்துக்கொண்டது இதனால், அடுத்த கேப்டனாக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பேச்சு எழுந்தது, இது தொடர்பாக அவரும் விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அனுபவ வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமித்து நேற்று கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை நிர்வாகி வெங்கி மைசூர் கூறுகையில், ‘நீண்ட காலத்தில் ஒரு மாற்றம் அணிக்கு வேண்டும் என்பதால், தினேஷ் கார்த்திக்கை 2018-ம் ஆண்டு சீசனுக்கு கேப்டனாக நியமித்துள்ளோம், அதேசமயம், கவுதம் கம்பீர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பவும், அதை சிறப்பாகச் செய்யவும் இவர் தகுதியான வீரர்.
மேலும், கேப்டன்களாக கிறிஸ் லின், ராபின் உத்தப்பா பெயரும் பரிசீலிக்கப்பட்டதில் தினேஷ் கார்த்திக் தகுதியான நபராக இருந்தார். இதனால், ராபின் உத்தப்பாவை துணை கேப்டனாக நியமித்துவிட்டோம்’ எனத் தெரிவித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த முறை ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை ரூ.7.4 கோடிக்கு விலைக்கு வாங்கியது.
கேப்டனாக அறிவிக்கப்பட்டது குறித்து தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் கூறுகையில், ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு பெருமையாக இருக்கிறது. மிகச்சிறந்த அணிக்கு தலைமை ஏற்கிறேன். புதிய சவாலை எதிர்நோக்கி இருக்கிறேன். அனுபவம் நிறைந்த வீரர்களும், இளம் வீரர்களும் கலந்த அணியுடன் விளையாடுவதில் உற்சாகமாக இருக்கிறேன். தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் காலிஸின் பயிற்சியும் எங்களை சிறப்பாக விளையாட துணை புரியும்’ எனத் தெரிவித்தார்.
இதற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்று இருந்தார்.
இது வரை 10 ஐபில் சீசனில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 152 போட்டிகளில் 2ஆயிரத்து903 ரன்கள் சேர்த்துள்ளார். 14 அரைசதம் அடித்துள்ளார். 88 கேட்சுகள், 26 ஸ்டெம்பிங் செய்துள்ளார். இதற்கு முன் விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டு 2009-10 ஆம் ஆண்டு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். துலீப் டிராபி போட்டியில் கடந்த ஆண்டு இந்தியா ரெட் அணிக்கு கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் அந்தப் போட்டியில் கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார்.
கொல்கத்தா அணியில் இந்த முறை வேகப்பந்துவீச்சாளர்கள் மிட்ஷெல் ஸ்டார்க், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்று மிரட்டல் நாகர்கோட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
கொல்கத்தா அணி விவரம்:
தினேஷ் கார்த்திக்(கேப்டன்), ராபின் உத்தப்பா(துணைக் கேப்டன்), சுனில் நரேன், ஆன்ட்ரூ ரூஷெல், கிறிஸ் லின், மிட்ஷெல் ஸ்டார்க், குல்தீப் சிங் யாதவ், பியூஷ் சாவ்லா, நிதிஷ் ரானா, கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மவி, மிட்ஷெல் ஜான்சன், சுப்மான் கில், ரங்கநாத் வினய் குமார், ரிங்கு சிங், கேமரூன் டெல்போர்ட், ஜேவன் சீர்லெஸ், அபூர்வ் விஜய் வான்கடே, இசாங் ஜக்கி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.