எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர்மாவட்டம் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனத்தினை பயனாளிகளுக்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. பாண்டியன் முன்னிலையில் கலெக்டர் வே.ப. தண்டபானி வழங்கினார்
அம்மா இருசக்கர வாகன திட்டம்
இவ்விழாவில் கலெக்டர் வே.ப. தண்டபானி, தெரிவித்ததாவது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய சிந்தனைத் திட்டமான உழைக்கும் மகளிருக்கு மான்ய விலையில் ‘அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா” தொடக்கம் இன்று ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் தங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகப் போராடி வரும் உழைக்கும் மகளிர் வெகுதூரம் நடந்து சென்றும், பேருந்துகளில் சென்றும் பணிக்குச் செல்வதில் உள்ள இன்னல்களை போக்க வேண்டிய உயர் நோக்குடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள, ஆண்டு வருமானம் ரூ. 2.50 இலட்சத்திற்குட்பட்டு ஊதியம் ஈட்டும் உழைக்கும் மகளிருக்கு உரியது இத்திட்டம்.இவ்வுன்னதமான திட்டத்தின் கீழ் உழைக்கும் மகளிர் வேலைக்குச் செல்லும் பயணத் தொலைவை எளிதில் அடையவும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பணிக்கு சென்றடையவும் மற்றும் தாமாக உற்பத்தி செய்த பொருட்களை வெளி இடங்களுக்குச் சென்று விற்று வாழ்வாதார மேம்பாடு அடையவும், 50மூ அல்லது ரூ. 25,000- இவற்றில் எது குறைவோ அதற்கான மான்யத்துடன் அம்மா இருசக்கர வாகனங்கள் 2017-18 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.கடலூர் மாவட்டத்திற்கு, இந்த ஆண்டு 3705 உழைக்கும் மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் மான்யத்துடன் அம்மா இருசக்கர வாகனங்களுக்கான ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் 2552 மகளிரும், நகர்ப்புறப் பகுதிகளில் 1153 மகளிரும் நடப்பாண்டில் பயன் பெறவுள்ளனர். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 815 மகளிர் பயன்பெறுவார்கள். மாற்றுத் திறனாளிகள் 4மூ மகளிர் பயன் பெறும் வகையில் திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 22.01.2018 முதல் 10.02.2018 முடிய இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 10514 மகளிர், மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அனைத்து விண்ணப்பங்களும் அதற்கென நியமிக்கப்பட்ட அலுவலர்களால் உரிய வகையில் கள சரிபார்ப்பு செய்யப்பட்டு வருகின்றன.பாரத பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 24.02.2018 அன்று சென்னையில் இத்திட்ட தொடக்க விழா நடைபெற்றதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் தொடக்க விழா நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன.கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் தொடக்க விழா இங்கு இனிதாக நடைபெற்று வருவதில் மகிழ்வடைகிறேன். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 110 பயனாளிகள் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுள் இப்பகுதியைச் சார்ந்த 48 உழைக்கும் மகளிருக்கு இன்று மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்குவதில் பெருமகிழ்வு கொள்வதுடன் அத்தனை பயனாளிகளும் தங்கள் வாழ்வில் மென்மேலும் வாழ்வாதார மேம்பாடு காண வாழ்த்துகிறேன்.இவ்வாகனத்தை பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு பிற நபரிடம் விற்கவோ அல்லது உரிமை மாற்றம் செய்யவோ இயலாது. இன்று வழங்கப்படும் இவ்வாகனம் உங்களுக்கானது. அரசின் உதவியுடன் வழங்கப்பட்டது இவ்வாகனம் என்பதை பயனாளிகள் எண்ணி செயல்பட வேண்டும்.கடலூர் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் வழங்கியுள்ள ஒதுக்கீட்டில் எஞ்சியுள்ள 3595 பயனாளிகளும் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவின் ஒப்புதலுடன் விரைவில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கும் மான்ய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளன என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இத்திட்ட பயனாளிகள், அரசின் இந்த சிறப்பு சலுகையினால் பெற்றுள்ள வாகனங்களைக் கொண்டு பயணத்தை எளிமையாக்கி கொள்ளவும், உழைப்பை மேம்படுத்தி வாழ்வில் உயரிய பொருளாதார நிலையை அடைந்திடவும் என் சார்பிலும், இங்கு வந்து வாழ்த்தியோர் அனைவரின் சார்பிலும் மீண்டும் வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று மகளிர் திட்ட இணை இயக்குநர் திட்ட இயக்குநர் இரா. இராஜசேகர் வரவுற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் திட்ட இயக்குநர் பெ. ஆனந்ராஜ், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை. ரவிச்சந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஆறுமுகம், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஜெ.விஜயகுமார், கே. இராஜ்குமார், எஸ். இரமேஷ்பாபு, டி. சத்தியமூர்த்தி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீசன், புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்மந்தம், காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் ராம்குமார், புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) விமலா, கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செல்வராஜ், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுகுமார் மகளிர் திட்ட பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவின் இறுதியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சு. ஆறுமுகம் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.