எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், திட்ட செயலாக்க அலகு சார்பில், மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்தியபாமா, சட்டமன்ற உறுப்பினர்கள் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் (பெருந்துறை), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), ஆகியோர் முன்னிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்து, 134 உழைக்கும் பெண்களுக்கு ரூ.33.50 இலட்சம் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனத்தினை வழங்கினார்கள்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாவது
‘பெண்கள் நினைத்தால், தங்கள் தலையெழுத்தை மட்டுமல்ல மற்றவர்களின் தலையெழுத்தையும் மாற்ற முடியும். அவர்களுக்கு தேவை, வாய்ப்புகள்! அந்த வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதே எனது இலட்சியம்” என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அமுதமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கான வாய்ப்புகளை அளித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் 16.02.2017 அன்று பதவியேற்றவுடன் முதலில் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களில் முதல் திட்டமான ‘அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்திற்கு” கையெழுத்திட்டு, புரட்சித் தலைவி அம்மா பிறந்த நன்நாளான 24.02.2018 அன்று பாரத பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோரால் இத்திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டது.
உழைக்கும் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, 50 சதவீத மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் 2017-18 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் முற்றிலும் மகளிருக்கான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஊரகம், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளை சார்ந்த உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க (யுரவழ பநயச / புநயசடநளள 125உஉ க்கு மிகாமல்) மானியத்தொகை, ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை அரசு மூலம் மானியமாக வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்திற்கு 2017-18ம் நிதியாண்டில் “அம்மா இருசக்கர வாகனம்” வழங்கும் திட்டமானது, 14 ஊராட்சி ஒன்றியங்களில் 1,550 வாகனங்களும், ஈரோடு மாநகராட்சியில் 746 வாகனங்களும், 4 நகராட்சிகளில் 213 வாகனங்களும், 42 பேரூராட்சிகளில் 703 வாகனங்களும் என மொத்தம் 3,212 வாகனங்கள் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 134 பயனாளிகளுக்கு ரூ.33.50 இலட்சம் மானிய விலையில் ‘அம்மா இருசக்கர வாகனம்” வழங்கப்படுகிறது. புரட்சித்தலைவி அம்மா ஏழைகள், தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகிய அடித்தள மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தியுள்ளார்கள். ஏழை எளியோர், ஆதரவற்றோர், முதியோர், விதவைகள், நலிவுற்ற பிரிவினர் ஆகிய சமுதாயத்தின் அடிதள மக்களுக்கு கைகொடுத்து, அவர்களை உயர்த்த வேண்டும் என்பதில் அளவற்ற அக்கறை கொண்டு, தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர் புரட்சித்தலைவி அம்மா .
ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியாக பத்தாவது படித்த பெண்களுக்கு ரூ.25,000 திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கமும், பட்டம் மற்றும் பட்டையம் படித்த பெண்களுக்கு ரூ.50,000 திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கியுள்ளார்கள். மாணவ மாணவியருக்கு 14 வகையான கல்வி உபபொருட்கள், கட்டணமில்லா பேருந்து வசதி என புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பல்வேறு கல்வித் திட்டங்களால் கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம், விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், விலையில்லா கறவைப்பசு வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி வழங்கும் திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் என எண்ணற்ற நலத்திட்டங்களை ஏழைகளுக்காக வாரி வழங்கியவர் புரட்சித் தலைவி அம்மா .
இத்திட்டத்தினால் உழைக்கும் மகளிர் சுதந்திரமாகவும், விரைவாகவும் தங்கள் பணியிடங்களுக்கு சென்று வரவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் செல்லவும், யாரையும் சார்ந்து இருக்காமல் தங்களது அனைத்துப் பணிகளையும் குறித்த நேரத்தில் செய்யவும் இயலும்.
எனவே உழைக்கும் பெண்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இச்சிறப்பு திட்டத்தினை பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தினைத்தினையும், பொருளாதாரத்தினையும் உயர்த்திக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது.
புரட்சித்தலைவி அம்மா பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் பிறந்த நாளில் உழைக்கும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தை துவக்கி வைத்தார்கள். ஈரோடு மாவட்டம் மகளிர் திட்டம் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்ட ஏழை எளிய மகளிரின் நீடித்த நிலைத்த வாழ்வாதாரத்தை மேம்பாடுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கி, குடும்ப வருமானத்தை பெருக்கி வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
புரட்சித்தலைவி அம்மா அரசு பெண் ஊழியாகளுக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு, ஏழை, எளிய பெண்கள் கர்ப்பகாலத்தில் யாரையும் சாராமல் இருக்க பேறுகாலத்தில் வழங்கி வந்த ரூ.12,000 நிதியுதவியினை ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கியதோடு, குழந்தை பிறந்தவுடன் 16 வகை பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகத்தினை வழங்கியுள்ளார்கள். பச்சிளங்குழந்தையுடன் பெண்கள் வெளியூர் செல்ல நேரிட்டால் சிரமப்படக்கூடாது என்பதற்காக பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, பெண்களுக்கென காவல் நிலையம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 12,076 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,70,000 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் மொத்த சேமிப்பு ரூ.215 கோடி. 2017-18-ம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனாக இதுவரை ரூ.160 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு துவங்கப்பட்டு ரூ.2.25 கோடி ஊக்க நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் துவங்கப்பட்டு இதுவரை ரூ.18 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் 3,298 மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு தனி நபர் கடனாக ரூ.3.20 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் 1105 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆதார நிதியாக ரூ1.68 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 671 புதிய மகளிர் சுய அமைக்கப்பட்டு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி நடத்திட ரூ.80 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 403 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது மகளிராகிய நீங்கள் அரசு வழங்குகின்ற பல்வேறு நலத்திட்டங்களை பெற்று பயன்பெறுவதோடு, தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வதோடு, எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், மகளிர் திட்ட இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் ஆர்.சீனிவாசன், உதவி திட்ட அலுவலர்கள் இரா.சாந்தா, சுப்பிரமணியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல