எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக அரசியலில் வெற்றிடம் ஏதும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். மேலும், பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்ற எச். ராஜாவின் கருத்துக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியார் குறித்த கருத்துக்கு எச்.ராஜா பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.
மகளிர் தின விழா
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் மகளிருக்கு தையல் மிஷன்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் இருவரும் நிருபர்களுக்கு அவர்கள் பேட்டி அளித்தனர்.
பல்வேறு திட்டங்கள்...
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
மகளிர் தினத்தையொட்டி பெண்கள் அனைவருக்கும் இதயப்பூர்வான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். அவருடைய வழியில் அம்மா இரு வாகனத்திட்டத்தை அண்மையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜெயலலிதாவின் வழியில் தமிழக அரசு தொடங்கிய இந்த திட்டத்திற்காக 3 லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்களை பெண்கள் வழங்கியிருப்பது மிக பெரிய சாதனையாகும். அ.தி.மு.கவில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியவரும் ஜெயலலிதா தான் என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும் முதல்வர் அளித்த பதில்களும் வருமாறு:
*திருச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா:?
இந்த சம்பவம் துர்திர்ஷ்வசமானது. குறிப்பிட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினரின் கோரிக்கை குறித்து அரசு பரீசிலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது காவல்துறை மாநாட்டில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடும் கண்டனம்...
*பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று தனது ட்விட்டரில் எச்.ராஜா பதிவிட்டுள்ளாரே?
தனக்கு தெரியாமல் ட்விட்டரில் தனது உதவியாளர் வெளியிட்டுள்ளதாக எச்.ராஜா கூறியிருக்கிறார். அதற்கு வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறார். அவருக்கு தெரியாமல் உதவியாளர் இப்படிப்பட்ட கருத்தை வெளியிட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். அவரது. சிலை அகற்றப்பட வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது. மேலும் தமிழகத்தில் உள்ள எந்த தலைவர்களின் சிலை சேதப்படுத்தப்பட்டாலும் அது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் சிலைகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தலைவர்களின் சிலைகளை தாக்க முற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில் நடவடிக்கை
*நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் எப்போது நியமிக்கப்படுவார்கள்?
இது குறித்து அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துடன் கலந்து பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
கண்டனத்திற்குரியவை
அதை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பெரியார் குறித்து பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜா கூறிய கருத்துகள் கண்டனத்திற்குரியவை. அவருடைய உதவியாளர் தான் பதிவு செய்தார் என்று எச்.ராஜா கூறும் கருத்தும் அபத்தமாக உள்ளது. தனது தவறுக்கு எச்.ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். திராவிட இயக்கத்தின் தலைக்காவிரியாக இருப்பவர் தந்தை பெரியார். அவரது பகுத்தறிவு கொள்கைகளால் தான் இன்று சாதாரண மனிதன் கூட முதல்வராக, பொதுவாழ்வில் ஏற்றம் பெறுபவர்களாக இருக்க முடிகிறது. தமிழக மக்களுக்கான சமுதாய புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார். அவரைப் பற்றி எச். ராஜா கூறிய கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை.
உண்மைத் தன்மை...
எச்.ராஜா தானே பல்டி அடித்து தான் அந்தப் பதிவை போடவில்லை என்று கூறி இருக்கிறார். அதன் உண்மைத் தன்மை என்ன என்பது கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். துணிச்சலான கருத்துகளை சொல்லக்கூடியவர் பெரியார் தமிழ்ச்சமுதாயம் வளர்வதற்காகவே தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் பெரியார். இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.