எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் நகரை அடுத்து நடுப்பட்டி என்னும் கிராமத்தில் அருள்மிகு. சிங்காரதோப்பு முனீஸ்வரர் காவல் தெய்வமாக வழக்குகளைத் தீர்க்கும் நீதிபதியாகவும், தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் தண்டல் நாயகமாக மிகப் புகழுடன் விளங்கி வருகிறார். இங்கு துரிஞ்சி மரங்களும், அசோக மரங்களும், கீரி மரங்களும், செவ்வலரிச் செடிகளும் நிறைந்து காணப்படும் தோப்பாக விளங்குவதால் இதனை சிங்காரத்தோப்பு என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 5 ஏக்கர் பரப்பளவுடைய அழகிய வனத்தில் அருள்மிகு. சிங்காரதோப்பு முனீஸ்வரர் என்று எழுந்தருளினார் என்பது யாருக்குமே தெரியாது.
ஆங்கிலேயர்கள் ஆண்ட அந்த காலத்தில் சேலத்திலிருந்து ஜோலார்பேட்டை செல்லும் வழியே புகை வண்டி பாதை அமைத்தனர். மொரப்பூரைத் தாண்டி சிந்தல்பாடி வரை அந்த இருப்புப்பாதை போடும் பணி நடந்து கொண்டிருந்தது. இருப்புப் பாதை அமைக்கும் பணி சிங்காரதோப்பு வழியாகவும் நடைபெற்றது. தோப்பின் அருகே தண்டவாளங்களை பொருத்தி முடிக்கும் போது இரவு வந்தது. பணியாளர்கள் பணிகளை நிறுத்தி விட்டு தங்கும் இடத்திற்குச் சென்றனர். காலையில் வந்து பார்க்கும்போது தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டு இடமாறிக் கிடந்தன. யார் செய்த வேலை என அதிகாரிகள் விசாரித்தனர். தமக்கு எதுவும் தெரியாது என அப்பகுதி மக்கள் கூறினர்.
ஒருநாள் வேலை வீணாகி விட்டதே என்ற கவலையோடும், சினத்தோடும் மீண்டும் தண்டவாளங்களை பொருத்தி முடித்து பின்னர் தங்கள் இருப்பிடம் சென்றனர். அன்று இரவு பணியாளர் ஒருவரின் கனவில் அருள்மிகு. முனீஸ்வரர் தோன்றி, தான் இங்கு குடி கொண்டிருக்கும் சிங்காரத்தோப்பை காட்டி அங்கே தனக்கொரு கோயில் எழுப்ப வேண்டும் எனப் பணிந்தார். அரசுப் பணியாளர்களும் தாம் கனவில் கண்ட சிங்காரதோப்பு அருள்மிகு. முனீஸ்வரருக்கு களிமண்ணாலும், சுண்ணாம்பாலும் ஆன சிலை செய்து மேடை மீது முறைப்படி அமர்த்தி வழிபட்டனர். அதன் பிறகே அவர்கள் இருப்புப் பாதை அமைக்கும் பணி இடையூரின்றி சிறப்பாக நிறைவுற்றது. அதனால் மகிழ்ந்த பணியாளர்கள் அன்று முதல் ஆண்டுதோறும் ஆயுத பூஜை தினத்தன்று முனீஸ்வரர் ஆலயத்திற்கு வருந்து வழிபடுகின்றனர். இப்பூஜைக்கான செலவினங்களை அரசே ஏற்றுக்கொள்கிறது எனவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இங்கு சுமார் 21 அடி உயரமுள்ள நீண்ட மேடை மீது இரண்டு முனீஸ்வரர் சிலைகள் உள்ளன. தென்புறமுள்ள சிலை 11 அடி உயரமும், வடபுறமுள்ள சிலை 7 அடி உயரமுடன் மிக கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. மேடை மீது குதிரைகளம், சிப்பாய்களும், பாம்புபிடாரனும் அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இரண்டு முனீஸ்வரர்களுக்கும் முன்னால் மேடையின் மீது இரண்டு கற்சிலைகள் உள்ளன. அவற்றின் பழமையை பார்க்கும்போது அவை இரண்டும் ஆதியில் இருந்தே முனீஸ்வரர் சிலையாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. இரண்டு முனீஸ்வரர்களுக்கு எதிரில் நிறைய சூலங்களும் வேல்களும் நடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று கிராம மக்கள் சுவாமிக்கு மாவிளக்கு எடுத்து விழா கொண்டாடுகின்றனர். ஆடி மாதம் 18-ம் தேதியன்று பெருக்கன்று சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. ஆவணி மாதம் ஆயுத பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப்பத்திருநாளில் நூற்றுக்கணக்கான அகல் தீபங்கள் ஏற்றி முனீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படுகிறது. மார்கழி மாதம் 30 நாட்களும் விடியற்காலையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது. தை மாதம் பொங்கல் விழாவின் போது பக்தர்கள் பொங்கலிட்டு வழிபடுகின்றனர். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று பவுர்ணமியும் சேர்ந்த நாளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றது. பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று உத்திரப் பெருவிழா நடைபெறுகிறது.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தங்களுக்கு மக்கள் செல்வத்தை தந்தருள வேண்டியும், நிலத்தகராறு மற்றும் குடும்பத் தகராறு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நீதிபதியாகவும், தங்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித்தர மறுப்பவர்கள் போன்றவர்களைத் தண்டிக்கவும் , தங்கள் எதிரியை பழி வாங்கவும் முனீஸ்வரனை வேண்டி முறைப்பாடு செய்கின்றனர். அவ்வாறு வேண்டுபவர்கள் ஒரு கோழியைக் கொண்டு வந்து எதிரிலுள்ள கீரி மரத்தில் கட்டித் தொங்க விடுகின்றனர். அத்துடன் வேலுக்குப் பூஜை செய்து, அதனை தலைகீழாக நட்டும் வைக்கின்றனர். பல தேவைகள், ஏக்கங்கள், தாக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தங்கள் குறைகள் நீங்கிய பிறகு பொங்கலிட்டு, கோழியோ ஆடோ அறுத்து படைக்கின்றனர். பலருக்கும் அன்னதானம் செய்கின்றனர். தலைகீழாக நட்ட வேலை பிராத்தனை தீர்ந்தவுடன் மறுபடியும் பூஜை செய்து மீண்டும் சரியாக நட்டு வைக்கின்றனர்.
தொகுப்பு : குமரவேல்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.