எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம்: கோதாவரி, காவிரியை இணைக்கின்ற மிகப் பெரிய திட்டத்தை நாங்கள் உருவாக்க இருக்கின்றோம். இதன் மூலம் தமிழகத்திற்கு தெலுங்கானா - ஆந்திரா வழியாக 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பேசினார்.
சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் இருந்து குரங்குசாவடி வரை ரூ.82.27 கோடி மதி்ப்பில் கட்டப்பட்ட புதிய பால திறப்பு விழா, ஆட்டையாம்பட்டி - மொசக்காளிப்பட்டியில் புதிய பால திறப்பு விழா, சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையம் மற்றும் தாரமங்கலத்தில் புதிய புறவழிச்சாலைக்கு அடிக்கல், சேலம் மணல்மேடு மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகிய விழாக்கள் ஏ.வி.ஆர்.ரவுண்டானா அருகில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி பாஜிபாகரே வரவேற்று பேசினார். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர் செல்வம்,சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும்,சேலம் மேற்கு தொகுதி எம்.எல்..வுமான ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவிற்கு தலைமை தாங்கி பாலங்கள் மற்றும் காவல் நிலையத்தை திறந்து வைத்தும்,புதிய சாலை மற்றும் உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டியும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
இன்றைக்கு நீரினுடைய அவசியம் மிக முக்கியம். எல்லா நதிகளுமே பக்கத்து மாநிலத்திலிருந்து உற்பத்தியாகித்தான் நம்முடைய மாநிலத்திற்கு வருகிறது. காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகிறது, முல்லைப் பெரியாறு கேரளாவில் உற்பத்தியாகிறது, பாலாறு ஆந்திராவிலிருந்து உற்பத்தியாகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் நான் வலியுறுத்திச் சொன்னேன். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னைக்கு வருகை தந்த பொழுது என்னிடத்தில் சொன்னார், நீங்கள் கடிதம் எழுதினீர்கள், பாரத பிரதமரிடத்திலும் கோரிக்கை வைத்தீர்கள். இன்றைக்கு கோதாவரி, காவிரியை இணைக்கின்ற மிகப் பெரிய திட்டத்தை நாங்கள் உருவாக்க இருக்கின்றோம், ஆகவே, கோதாவரியில் அதிக நீர் வருகின்றது. அந்த நீரை தெலுங்கானா, ஆந்திரா வழியாக நம்முடைய பகுதியாகிய மாயனூர் கேரேஜ் என்னும் இடத்தில் அந்த தண்ணீரை கொண்டு வந்து இணைக்க வேண்டும். அப்படி கோதாவரி தண்ணீர் 125 டி.எம்.சி. நமக்கு கொடுப்பதாக மத்திய அரசால் திட்டம் தீட்டப்படுகிறது. இதன் மூலம் அந்த பகுதி மக்களுக்கு நிலையான நீர் கிடைக்கும். மேட்டூர் அணையில் இருக்கும் அந்த நீர் சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்டம் வரை கால்வாய் வெட்டி அதன் மூலமாக ஆங்காங்கு இருக்கின்ற ஏரிகளை நிரப்புகின்ற பொழுது மூன்று மாவட்டங்களில் இருக்கின்ற விவசாயிகள் பயனடைவார்கள்.
இந்தியாவிலேயே வேளாண் துறை, மருத்துவத் துறை, அனைத்துத் துறைகளிலும் முதன்மையாக விளங்கக்கூடிய நிலை தமிழகத்திலே பார்க்க முடிகின்றது. கல்வித் துறையில் இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கை தமிழகம் தான் முன்னிலை வகிக்கின்றது. சாலை போக்குவரத்திலும் தமிழகத்தில்தான் சாலை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அரசே கூறியிருக்கிறது. அந்த அளவிற்கு அம்மாவினுடைய அரசு எல்லா துறைகளிலும் வளர்ச்சியை காண்பதற்கு திட்டங்களை தீட்டியிருக்கிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த விழாவில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்.பி.ஆர்.சுந்தரம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.காமராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் மேட்டூர் செ.செம்மலை, சேலம் தெற்கு ஏ.பி.சக்திவேல், ஆத்தூர் சின்னதம்பி, கெங்கவல்லி மருதமுத்து, ஓமலூர் வெற்றிவேல், சங்ககிரி ராஜா, ஏற்காடு சித்ரா, மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், சேலம் ஆவின் சேர்மன் சின்னதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ.எம்.கே.செல்வராஜ், முன்னாள்மேயர் எஸ்.சவுண்டப்பன், முன்னாள் துணை மேயர் எம்.நடேசன், சேலம் மாநகர் மாவட்ட பகுதி கழக செயலாளர்கள் தியாகராஜன், சரவணன், யாதவமூர்த்தி, சண்முகம், ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்புத்துறை அதிகாரி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்18 hours 42 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 21 hours ago |
ஆனியன்ப்ரை1 week 21 hours ago |
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்க விபத்தில் 14 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு
15 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.