எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்கோ : ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
11 நகரங்களில்...
32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்ளும் முக்கிய விளையாட்டு திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்கி ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
மொத்தம் ரூ.87 ஆயிரம் கோடி செலவில் உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள், விளையாட்டு மைதான வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ரஷிய அரசு செய்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து 1 கோடி ரசிகர்கள இதற்காக பயணம் மேற்கொள்வர் என கணிக்கப்பட்டுள்ளது.
துவக்க விழா...
துவக்க விழா மாஸ்கோவின் லூசினிக்கி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 3 பிரபல கலைஞர்களான ராபி வில்லியம்ஸ், அய்டா கரிஃபுல்லினா, ரொனால்டோ ஆகியோர் பங்கேற்று இசைநிகழ்ச்சி நடத்துகின்றனர். மேலும் உள்ளூரைச் சேர்ந்த 500 கலைஞர்களும் தங்கள் திறமையை சுமார் 30 நிமிடங்கள் வெளிப்படுத்துகின்றனர். இதில் நடனக் கலைஞர்கள், ஜிம்னாஸ்டிக்ஸ், இசைக்கலைஞர்கள் இடம் பெற்றிருப்பர்.
முதல் போட்டி
பின்னர் போட்டியை நடத்தும் ரஷியா-சவுதி அரேபிய அணிகள் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன. நடப்புச் சாம்பியன் ஜெர்மனி 17-ஆம் தேதி மெக்ஸிகோவுடன் மோதும் ஆட்டம் மாஸ்கோவிலும், 5 முறை சாம்பியன் பிரேசில்-சுவிட்சர்லாந்துடன் மோதும் ஆட்டம் 18-ஆம் தேதி ரோஸ்டோவ் ஆன் டான் விளையாட்டரங்கிலும் நடக்கிறது, தொடக்க விழா சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
80 ஆயிரம் ரசிகர்கள்...
உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞர் ராபி வில்லியம்ஸ், ரஷிய கலைஞர் அய்டா கரிஃபுல்லினா, பிரேசில் வீரர் ரொனால்டோ ஆகியோர் துவக்க விழாவில் பங்கேற்று நிகழ்ச்சியை வழங்குகின்றனர். இதுகுறித்து ராபி வில்லியம்ஸ் கூறுகையில்: உலகக் கோப்பை திருவிழாவுக்காக 80 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் இசைநிகழ்ச்சி நடத்துவது பெருமை தருகிறது. நான் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தாலும், பிஃபா உலகக் கோப்பை துவக்க விழாவில் பங்கேற்று நிகழ்ச்சி நடத்துவது என்பது சிறுவயது கனவு என்றார்.
பாதுகாப்பு தீவிரம்...
இதற்கிடையே உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு தீவிரபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் மைதானங்கள் அருகே விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஜாமர் கருவிகள், வைக்கப்பட்டுள்ளன. மேலும் ரஷியாவுக்கு போட்டியைக் காண வரும் ரசிகர்கள் உள்ளூர் போலீஸாரிடம் தங்கள் பெயர்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷியா-சவுதி அரேபியா தொடக்க ஆட்டத்துக்காக 30 ஆயிரம் போலீஸார் மாஸ்கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுவர். மேலும் சந்தேகப்படும்படி வரும் விமானத்தைக் கண்காணிக்க விமானப் படை விமானங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. உலகக் கோப்பை போட்டியை சிறப்பாக நடத்துவதின் மூலம் ரஷியா வல்லரசு நாடு என்பதை மீண்டும் உறுதி செய்ய அதிபர் புதின் திட்டமிட்டுள்ளார் எனக் கருதப்படுகிறது.
2022-ஆம் ஆண்டு...
வரும் 2026 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பது குறித்த பிஃபா வாக்கெடுப்பு நேற்று மாஸ்கோவில் நடந்தது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கான வாய்ப்பு பிஃபா பொதுக்குழுக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி வழங்கப்படும். போட்டியை நடத்த விண்ணப்பித்துள்ள நாடுகள், அவற்றில் உள்ள கட்டமைப்பு வசதிகள், செலவிடும் தன்மை போன்றவற்றை பொருத்து வாய்ப்பு கிடைக்கும். வரும் 2022-ஆம் ஆண்டு போட்டி கத்தாரில் நடக்கிறது.
48 நாடுகளாக ...
இந்நிலையில் 2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்த மொராக்கோவும், அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் இணைந்தும் விண்ணப்பித்துள்ளன. வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பது குறித்த வாக்கெடுப்பு மாஸ்கோவில் நடக்கவுள்ள பிஃபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் நடக்கிறது. உறுப்பினர்களாக உள்ள 207 நாடுகள் இதில் வாக்களிக்க உள்ளன. ஏற்கெனவே பிஃபா ஆய்வுக் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் பல்வேறு அம்சங்கள் வட அமெரிக்க நாடுகளின் விண்ணப்பத்துக்கு சாதகமாக இருந்தன. இந்த போட்டியில் தான் தற்போதுள்ள 32 நாடுகளுக்கு பதிலாக 48 நாடுகளாக அதிகரிக்கப்படுகிறது. மேலும் பிஃபா-கோக கோலா சர்வதேச தரவரிசைப் பட்டியல் மதிப்பிடும் முறையில் மாற்றங்கள் கொண்டு வருதல், போன்றவை குறித்தும் விவாதித்து அறிவிக்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிப்பு
05 May 2024சென்னை : தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
யாரையும் பழிவாங்க வேண்டாம் : நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் சிக்கின
05 May 2024நெல்லை : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்
05 May 2024சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வை தமிழகத்தில் நேற்று 1.50 லட்சம் பேர் பங்கேற்று ஆர்வமுடன் எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 13 மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது : 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
05 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் பதிவுமுறை துவங்கியது
05 May 2024கொடைக்கானல் : சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு முறை நேற்று இரவு முதல் தொடங்கியது.
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டராக இருக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட் கருத்து
05 May 2024புதுடெல்லி : நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக இருக்கக்கூடாது என்று வழக்கு ஒன்றின் தீரப்பில
-
காலவரையின்றி சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா?
05 May 2024புதுடில்லி : ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ) காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்
-
நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
05 May 2024பெங்களூரு : எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று குஜராத்தை வீழ்த்திய பிறகு பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் த
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
மதுரை சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி : 536 மதிப்பெண்கள் பெற்று ஒருவர் சாதனை
06 May 2024மதுரை : நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மதுரை மத்திய சிறையில் உள்ள 15 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
06 May 2024அணிகள் போட்டிகள