எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : தமிழகத்துக்கு ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதல் கூட்டம்
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள மத்திய நீர் ஆணையத்தின் சேவா பவனில் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் ஆணையத்தின் உறுப்பினரும், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலருமான எஸ்.கே. பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதேபோல், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
திறக்க உத்தரவு...
இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகா ஜூலை மாதத்துக்காக தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீர் குறித்து இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்துக்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
ஜூலை மாதத்திற்கு...
அனைவரின் ஒத்துழைப்போடு இந்த முதல் கூட்டம் நன்றாக நடைபெற்றது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் கட்ட கூட்டம் என்பதால் அடிப்படை விஷயங்கள் குறித்து விவாதித்தோம். இந்த ஆணையத்துக்கான சட்டதிட்டம், ஆணையத்தின் ஊழியர்கள், தனி அலுவலகம், ஆணையத்தின் பணிகள், தேவையான கட்டுமானம், நீர் இருப்பு, நீர் திறப்பு அளவு குறித்து விவாதிக்கப்பட்டது. கர்நாடகம், தமிழகத்துக்கு ஜூலை மாதம் தர வேண்டிய தண்ணீர் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் தமிழகத்துக்கு 3 டி.எம்.சி. தண்ணீர் உபரியாக வழங்கப்பட்டுள்ளது. அதனால், வரும் ஜூலை மாதம் அந்த 3 டி.எம்.சி. தண்ணீரை தவிர்த்து மீதமுள்ள தண்ணீரை திறந்துவிட வேண்டும். நீரின் அளவு சரியாக அளவிட்டு தெரிவிக்கப்படும்.
கூட்டங்கள் கூட்டி...
தற்போது கர்நாடகத்தில் மழைக்காலம் நன்றாக உள்ளது. அதனால், இந்த ஆணையம் 1 வருடத்துக்கான தீர்ப்பை ஒரே கட்டத்தில் வழங்காமல், தேவைப்படும் நேரத்தில் கூட்டம் நடத்தி அவ்வப்போது கூட்டங்கள் கூட்டி அனைவரிடமும் கேட்டறிந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். ஆணையத்தின் உத்தரவை 4 மாநிலங்களும் மதித்து ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகிறோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி இந்த ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உத்தரவு என்பது மதிப்பதற்காக. அதனால், எங்களது உத்தரவை மாநிலங்கள் மதிக்க வேண்டும்.
கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. தொடக்கத்திலேயே நம்பிக்கை இழந்து பேச விரும்பவில்லை. காவிரி ஒழுங்காற்று குழு ஆணைய கூட்டம் 4-ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசிதழில்...
தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்காக கர்நாடகம் 34 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 3 டி.எம்.சி. உபரி நீர் வழங்கியுள்ளதால் ஜூலை மாதத்துக்கு 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும். முன்னதாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிக்கை அரசிதழில் ஜூன் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றுக்கு தலைவர், உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் நியமிக்கப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.