முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலுக்கு வியூகம் வகுக்க ஒரே நாளில் 1800 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கிய அமித்ஷா

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சிக்காக 1800 புதிய வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கான வியூகம் வகுக்கவும், வதந்திகளை கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாத காலமாக, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியினரை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் போது பா.ஜ.க.வினர்  சமூக வலை தளங்களில் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கண்டித்ததாகவும் இதற்காக பல கட்டுப்பாடுகளை அவர் விதித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்காக இந்தியா முழுக்க 1800 மண்டலம் வாரியாக, வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்க அவர் ஆணையிட்டுள்ளார். அதன்படி தற்போது ஒரே நாளில் 1800 வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்திலும் அமித்ஷா இடம்பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சியினர் விவாதித்து வருகின்றனர். உலகிலேயே அதிக வாட்ஸ் அப் குழுக்களில் இடம்பெற்ற நபர் அமித்ஷாவாக  இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து