எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டெல்லி ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் பகுதியில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மறைந்த பிரதமர் வாய்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அவருடைய வளர்ப்பு மகள் நமீதா கவுர் பட்டாச்சார்யா எரியூட்டினார். பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
பாரதீய ஜனதா கட்சியை முதன் முதலாக மத்தியில் ஆட்சியில் அமர்த்தியவர் என்ற பெருமை பெற்றவர் வாஜ்பாய். மூன்று முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ள 93 வயதான வாஜ்பாய், முதுமை மற்றும் உடல் நலக் குறைவின் காரணமாக, டெல்லி கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி அங்குள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
வாஜ்பாயின் உடல்நிலை மோசம் அடைந்ததால், பிரதமர் மோடி கடந்த 3 நாட்களுக்கு முன் மாலை மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தார். அதன்பிறகு, வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அன்று இரவு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், ஜிதேந்திர சிங், ஹர்ஷ வர்தன், அஸ்வினி குமார், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, அவரது மகள் பிரதிபா ஆகியோர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தனர்.
வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதால், மத்திய அரசின் சார்பில் நடைபெறுவதாக இருந்த சில நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்படுவதாகவும், சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்றும், இன்றும் நடைபெறுவதாக இருந்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது. வாஜ்பாயின் உடல்நிலை அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் வசிக்கும் அவரது உறவினர்கள், அங்கிருந்து அவசரமாக டெல்லி புறப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, வாஜ்பாய் நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதுபற்றி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டு உள்ளது. தீவிர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும், அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என்றும், அவரது மறைவால் நாடு அடைந்துள்ள துயரத்தில் தாங்களும் பங்குகொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வாஜ்பாயின் உடல் நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரியில் இருந்து, கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இரவு 9.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் அங்கு வந்து வாஜ்பாய் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் முன்னாள் பிரதமர் பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாஜ்பாய் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
வாஜ்பாய் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் அவரது உடலுக்கு நேற்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிப்பட்னர். அதன்பிறகு உடல் அங்கிருந்து, டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஆயிரிக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ என்ற இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஊர்வலத்தின் போது பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் நடந்தே வந்தனர். ராணுவ வாகனத்தில் இருந்து வாஜ்பாயின் உடல் இறக்கப்பட்ட போது பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுதார்.
அங்கு அவருக்கு முப்படை வீரர்களின் தளபதிகள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாயின் நெருங்கிய நண்பர் அத்வானி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். பூடான் மன்னர், நேபாள, வங்கதேச, இலங்கை அமைச்சர்கள், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அமித் கர்சாய் ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
வாஜ்பாயின் உடலுக்கு, வேத மந்திரங்கள் முழங்க குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்குகளை செய்தனர். வாஜ்பாயின் உடல் மீது சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டன. 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அவரின் வளர்ப்பு மகள் நமீதா கவுர் பட்டாச்சார்யா எரியூட்டினார். இறுதிச் சடங்குகள் நடந்த போது அவ்விடம் வாஜ்பாயின் தோற்றம் போலவே அமைதியாகக் காணப்பட்டது. அங்கு ஒரு ஆழ்ந்த சோகம் அப்பிக் கொண்டிருப்பதை பார்ப்பவர்களாலும் உணர முடிந்தது. முன்னதாக இறுதிச் சடங்குகள் தொடங்குவதற்கு முன்பு, வாஜ்பாய் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடியை எடுத்த முப்படை வீரர்கள், அதனை அவரது பேத்தியிடம் ஒப்படைத்தனர். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த வாஜ்பாயின் வளர்ப்பு மகளான நமிதா கவுர் பட்டாச்சாரியாவின் மகள் நிஹாரிகாவிடம் தேசியக் கொடி ஒப்படைக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.