எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளாமல் அரைகுறை புள்ளி விவரங்களுடன் அறிக்கை விடாமல், தனது அரசியல் பயணத்தை ஆக்கப்பூர்வமாக்கி கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சரும், அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளருமான ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
உண்மைக்கு புறம்பாக...
தமிழக விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, அம்மா வழியில் சிறப்புடன் பணியாற்றிவரும் அ.தி.மு.க. அரசின் நீர்ப்பாசனத் திட்டங்களையும், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அறைகுறை புள்ளி விவரங்களுடன் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை உண்மைக்கு புறம்பானதாகவும், காழ்ப்புணர்ச்சிகளின் மொத்த வடிவமாகவும் உள்ளது.
வீராணம் ஏரி...
சம்பா பயிறுக்கு தேவைப்படும் நீரை முன்கூட்டியே விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வழங்கும் வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
காவேரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் காவேரி நீர் சென்றடையும் வகையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மேற்பார்வையில் தூர்வாரும் பணிகளும், நீர் மேலாண்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, இப்பொழுது காவேரி பாயும் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தங்கு தடையின்றி சென்று கொண்டிருக்கிறது. காவேரி ஆற்றில் மிகுந்த அளவில் வந்துகொண்டிருக்கும் தண்ணீரை முழுமையாக பயன்படுத்தும் வகையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி அதி.மு.க. அரசால் நன்கு தூர்வாரப்பட்டு, அது தனது முழு கொள்ளளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக வீராணம் ஏரியில் இருந்து கடந்த இரண்டு வாரங்களாக சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு மக்களின் தாகம் தணிக்கப்படுகிறது. வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பெறும் விவசாயிகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
அறைகுறை அறிக்கை...
இந்த உண்மையை ஏன் திரையிட்டு மறைக்க முயல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்?கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பெறும் காவேரி ஆறு, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகள் அவற்றின் முழு கொள்ளளவில் நீரை கொண்டு செல்லும் வகையில் வினாடிக்கு 23,000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டிருக்கிறது.
இதனால் இந்த மூன்று பெரும் பாசன ஆறுகளால் பயன்பெறும் விவசாயப் பெருங்குடி மக்கள் அரசை நெஞ்சாரப் பாராட்டிய வண்ணம் உள்ளனர். இதனைப் பொறுக்க முடியாமல் தங்களுக்கே உரித்தான குறுகிய அரசியல் ஆதாய மனநிலையோடு அறைகுறை அறிக்கை ஒன்றினை யாரிடமிருந்தோ எழுதி வாங்கி எதிர்க்கட்சித் தலைவர். ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
7 பாசன வாய்க்கால்கள்...
அதி.மு.க. அரசு மேற்கொண்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் 19 பாசன கால்வாய்களில் வினாடிக்கு 4,200 கனஅடி தண்ணீரும், அணைக்கரை என்று அழைக்கப்படும் கும்பகோணம் அருகில் உள்ள கீழ் அணையில் இருந்து 7 பாசன வாய்க்கால்கள் மூலம் கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் வினாடிக்கு 2,700 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டு, இப்பொழுது அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் வேளாண்மை பணிகளை விரைந்து மேற்கொண்டிருக்கின்றனர்.
அ.தி.மு.க. , அரசுக்கு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கும் பேரன்பைத் தாங்கிக்கொள்ள முடியாத தவிப்பு மு.க. ஸ்டாலின் பெயரில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் தெரிகிறது.
தெரிந்திருக்க வேண்டாமா?
இந்த ஆண்டு வான் மழை வாரி வழங்கி இருக்கும் மிகுதியான நீரை சேமித்து விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் வகையில் அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 924 குளங்கள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
புதிய நீர் மேலாண்மைத் திட்டங்களை அரசுக்கு வகுத்தளிக்க, ஓய்வு பெற்ற பொறியியல் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் முடிவடைந்து அந்தக் குழு அரசுக்கு அளித்த ஆலோசனைகள் சிறப்புடன் செயல்படுத்தப்பட அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த உண்மை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிந்திருக்க வேண்டாமா?
அடிப்படை உண்மைகளை....
தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுகள் கட்டுவதற்காக 1,000 கோடி ரூபாய் மதிப்பில் பெரும் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு அதன் முதற்கட்டமாக, தற்பொழுது 74 தடுப்பணைகளும், 7 அணைக்கட்டுகளும் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு நதிகளிலும், பாசன கால்வாய்களிலும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி உதவியுடன் தொடர் நிகழ்வாக நடைபெற்று வரும் திட்டங்களை தூர்வாரும் பணியோடு ஒப்பிட்டு குழம்பிப்போய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின். ஒரு முன்னாள் துணை முதல்வர் அறிக்கை வெளியிடும் முன்னர் அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?
காரணமாவது தெரியுமா?
அத்திக்கடவு - அவினாசி திட்டம் 1,652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட அ.தி.மு.க. அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் காவேரி ஆற்றினை அக்னியாறு - தெற்கு வெள்ளாறு - மணிமுத்தாறு - வைகை குண்டாறு ஆகியவற்றுடன் இணைக்கும் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்கு சுமார் 6,994 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள், பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
காவேரி ஆறும், அதன் கிளை நதிகளும் இன்ன பிற டெல்டா பாசன நதிகளும் ஒரு வினாடிக்கு 30,000 கனஅடி நீரை மட்டுமே பாசனத்திற்கு கொண்டு செல்ல இயலும். அந்த அளவையும் தாண்டி தண்ணீர் வருகின்ற போது, அது தொடர்ந்து அவற்றின் வழியாக அனுப்பப்பட்டால் அது வெள்ள பெருக்கைத் தான் ஏற்படுத்துமே தவிர பாசனத்திற்குப் பயன்படாது.
எனவே தான் காவேரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடமாக கொள்ளிடம் ஆறு திகழ்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கொள்ளிடம் ஆற்றின் இந்தப் பெயர் காரணமாவது தெரியுமா?
களங்கம் கற்பிக்க முயற்சி...
பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பருவ மழை ஏராளமாக பொழியும் பொழுது, பெருக்கெடுத்து வரும் வெள்ள நீர் கொள்ளிடம் போன்ற ஆறுகள் வழியாக வங்காள விரிகுடா கடலைத்தான் சென்றடையும். இது போல, வரலாற்றில் கடந்த கால கட்டங்களில், தி.மு.க ஆட்சிக் காலம் உட்பட ஏராளமாக வெள்ள நீர் கடலைச் சென்றடைந்துள்ளது. 2000-மாவது ஆண்டில் 385 டி.எம்.சி. தண்ணீர் வங்கக் கடலில் சென்று கலந்தது. 2008-வது ஆண்டில் 114 டி.எம்.சி தண்ணீர் கடலுக்குத் தான் சென்றது. என்னவோ இந்த ஆண்டுதான் தண்ணீர் வழிந்தோடி கடலுக்குப் போவதாக கற்பனை கதை கட்டி, களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார் மு.க. ஸ்டாலின்.
ஆக்கப்பூர்வமாக ஆக்கி...
திருவாரூரில் உள்ள ஐநூற்று பிள்ளையார் கோவில் குளத்தில் இப்பொழுது தண்ணீர் இல்லை என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை கூறுகிறது. இந்த ஐநூற்று பிள்ளையார் கோவில் குளத்தைச் சுற்றிலும் வீடுகள் கட்டப்பட்டுவிட்டதால் கடந்த 25 ஆண்டுகளாக அந்தக் குளத்தில் வரத்துக் கால்வாய்கள் வழியாக எப்பொழுதும் தண்ணீர் நிரம்பியதே இல்லை. வான் மழை மூலம் நேரடியாகப் பெறும் தண்ணீர் தான் அந்தக் குளத்தில் நிரம்பியிருக்கிறது.
இந்த உண்மை தெரியாமல் குளத்தில் தண்ணீர் இல்லை என்று கூப்பாடு போடுகிறது மு.க.ஸ்டாலின் பெயரில் வந்துள்ள அறிக்கை. எல்லாவற்றிலும் அரசியலைக் கலந்து, ஆதாயம் தேட மீண்டும், மீண்டும் முயற்சித்து தோல்வி பள்ளத்தாக்கில் துவண்டு விழும்.
மு.க.ஸ்டாலின் தன்னுடைய அரசியல் பயணத்தை ஆக்கப்பூர்வமாக ஆக்கிக் கொள்வது அவசியம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.