எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி சதம் விளாசினார்.
168 ரன்கள்...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்களில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து 168 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (33 ரன்), கேப்டன் விராட் கோலி (8 ரன்) களத்தில் இருந்தனர்.
3-வது நாள் ஆட்டம்
இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நடந்தது. கோலியும், புஜாராவும் அவசரம் காட்டாமல் பொறுமையாக ஆடினர். ‘ஸ்விங்’ தாக்குலை திறம்பட சமாளித்த இவர்கள், வெளியே சென்ற நிறைய பந்துகளை தொடவே இல்லை. ரன்வேகம் மந்தமாக இருந்தாலும் இந்திய அணி வலுவான நிலையை நோக்கி பயணித்தது. நிலைத்து நின்று ஆடிய இவர்களை உணவு இடைவேளை வரை இங்கிலாந்து பவுலர்களால் அசைக்க முடியவில்லை.
தாக்குப்பிடிக்கவில்லை
அணியின் ஸ்கோர் 224 ரன்களாக உயர்ந்த போது, புஜாரா (72 ரன், 208 பந்து, 9 பவுண்டரி) பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற குக்கிடம் கேட்ச் ஆனார். அடுத்து துணை கேப்டன் ரஹானே வந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய விராட் கோலி பவுண்டரி அடித்து தனது 23-வது சதத்தை நிறைவு செய்தார். ஆனால் சிறிது நேரத்தில் விராட் கோலி (103 ரன், 197 பந்து, 10 பவுண்டரி) கிறிஸ் வோக்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (1 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக மட்டையை சுழட்டி அரைசதம் கண்டார். இதற்கிடையே ரஹானே 29 ரன்களிலும் (94 பந்து, 3 பவுண்டரி), முகமது ஷமி 3 ரன்னிலும் வெளியேறினர்.
521 ரன்கள் இலக்கு...
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 110 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பாண்ட்யா 52 ரன்களுடன் (52 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும். இந்த டெஸ்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.
முக்கிய அம்சங்கள்...
*இங்கிலாந்து மண்ணில், ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய சாதனையை விராட் கோலி வசப்படுத்தியுள்ளார். அவர் இந்த தொடரில் இதுவரை 2 சதம், 2 அரைசதம் உள்பட 440 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு தொடரில் இந்திய கேப்டனாக முகமது அசாருதீன் 426 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
*டெஸ்டில் அதிக சதங்கள் எடுத்த இந்தியர்களின் பட்டியலில் தெண்டுல்கர் (51 சதம்), டிராவிட் (36), கவாஸ்கர் (34) ஆகியோருக்கு அடுத்தபடியாக உள்ள ஷேவாக்கை (23) கோலி சமன் செய்துள்ளார்.
*முதல் டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து (149 ரன், 51 ரன்) 200 ரன்கள் எடுத்த கோலி, இந்த டெஸ்டிலும் அதே போன்று மொத்தம் 200 ரன்கள் (97 மற்றும் 103 ரன்) எடுத்துள்ளார்.
* முதல் இன்னிங்சில் 97 ரன்களில் ஆட்டம் இழந்த இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இன்னிங்சிலும் 90 ரன்களை கடந்ததும் கொஞ்சம் பதற்றத்திற்குள்ளானார். 93 ரன்னில் இருந்த போது ஆண்டர்சனின் பந்து வீச்சில் கேட்ச் வாய்ப்பை ‘கல்லி’ திசையில் நின்ற ஜென்னிங்ஸ் கோட்டை விட்டார். பந்து எல்லைக்கோட்டிற்கு ஓடியது. அதன் பிறகு மேலும் ஒரு பவுண்டரி அடித்து கோலி சதத்தை எட்டினார். சதம் அடித்ததும் கேலரியில் இருந்த தனது மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.