எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி - தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றிய கழகம் சார்பில் கழக 47வது துவக்க விழா பொதுக்கூட்டம் கோடாங்கிபட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் பேசும்போது, தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி வரலாற்று சிறப்புமிக்க தொகுதியாகும். காரணம் புரட்சித்தலைவர் மறைவுக்கு பின் அதிமுக பிளவுபட்டபோது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் போடி தொகுதியிலே போட்டியிட்டார். அவரை இத்தொகுதி மக்கள் வெற்றி பெற வைத்ததன் காரணமாக ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினரை முதல் எதிர்கட்சி தலைவராக உருவாக்கி மாபெரும் நமது இயக்கத்தை வலுபெற செய்தனர். தற்போது நமது கழகத்தின் ஒன்றரை கோடி உறுப்பினர்களின் பாதுகாவலனாக இருக்கின்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற செய்துள்ளீர்கள். என்றார்.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் பேசும்போது, நமது கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களில் இப்பகுதியை சேர்ந்தவர்கள் உட்பட பலர் மீண்டும் தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் தாய் கழகத்தில் இணைய வேண்டுமென்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் கூறியிருக்கின்றனர். இன்னும் பலர் வர தயாராக உள்ளனர் என்றார்.
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன் பேசும்போது, நமது கழகம் மட்டுமே மக்கள் கட்சியாக உள்ளது. ஊழல் கட்சி என மக்களால் முத்திரை குத்தப்பட்ட கட்சி திமுக. காங்கிரஸ் செல்லாத கட்சியாகிவிட்டது. மற்ற தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் நம் கழகத்தோடு கூட்டணி வைத்ததால் தான் அக்கட்சிகளுக்கு அங்கீகாரமே கிடைத்தது. இக்கட்சியினர் தனியாக நின்று வெற்றி பெற முடியாது. தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களை ஏமாற்றியதுபோல் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.
தலைமை கழக பேச்சாளர் வடுகை சுந்தரபாண்டியன் பேசும்போது புரட்சித்தலைவர் கழகத்தை துவக்கியபோது நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் போது கருணாநிதி வேட்பாளரை அறிவித்து விட்டு எம்.ஜி.ஆருக்கு வேட்பாளரை அறிவிக்க தெம்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப எம்.ஜி.ஆர் மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்தார். மாயத்தேவரின் வெற்றிக்காக கழக தொண்டர்கள் பட்ட கஷ்டம் அதிகம். அதே நேரத்தில் அந்த சோதனைகளை எல்லாம் தாங்கி வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டனர். மாயத்தேவர் 1,80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர் அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தல்களில் 126, 129, 131 என தொகுதிகளில் வெற்றி பெற்றார். அவருடைய மறைவுக்கு பின் கழகம் இரண்டாக உடைந்தது. பின் கட்சியை வழிநடத்தும் திறமை, தகுதி புரட்சித்தலைவியிடமே உள்ளது என்று பிரிந்து இருந்த கழகத்தை ஒன்று சேர்த்து தன்னை விலக்கி கொண்ட ஜானகிராமச்சந்திரனே உண்மையான தியாக தலைவி என்றார். பின்னர் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா அவர்களின் தலைமையின் கீழ் 1991ல் 162, 2001ல் 141, 2011ல் 200, 2016ல் 136 என கழகத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.
தலைமை கழக பேச்சாளர் அன்பழகன் பேசும்போது என்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு புரட்சித்தலைவி அம்மாவே முக்கிய காரணம். நமது கழகத்தை காத்திட புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகயோரின் ஆன்மாக்கள் உறுதுணையாக இருக்கும். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் கழகத்தையும், ஆட்சியையும் பல்வேறு சத்திய சோதனைகளை தாண்டி சிறப்பாக வழிநடத்துகின்றனர். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மயிலைபரமசிவம், பொதுக்குழு உறுப்பினர் டி.டி.சிவக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, உத்தமபாளையம் அழகுராஜ், சின்னமனூர் விமலேஸ்வரன், நகர் கழக செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, போடிநாயக்கனூர் பழனிராஜ், சின்னமனூர் கண்ணம்மா கார்டன் ராஜேந்திரன், கம்பம் ஜெகதீஸ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், தலைவர் குருமணி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்திரன், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் ராஜகோபால், இணை செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பாசறை துணை செயலாளர் முருகேசன், கழக பிரமுகர் குருசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.