முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண்-2 ஏற்றம்.

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

   ராமேசுவரம்,- : பாம்பன் கடலோரப்பகுதியில் பலத்த சூறாவளி  காற்று வீசி வருவதால் பாம்பன் பகுதியிலுள்ள துறைமுகத்தில்  நேற்று 2 ஆம் எண்  புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டது. 

 வங்க கடலில் பலத்த காற்றழுத்தத் தாழ்வு மண்டல நிலை உருவாகியுள்ளது.இதனால்   வட சென்னை,தென் சென்னை ஆகிய பகுதியில் தென் கிழக்கு ஆழ் கடலோரப் பகுதியில் 930 கி.மீ வேகத்தில்  ராட்சச அலையுடன் பலத்த சூறாவளி காற்று உருவாகியுள்ளது.அதுபோல ஆந்திர பிரதேசம் தென் கரிகோடா கடலோரப்பகுதியில் 980 கி.மீ வேகத்திலும்,அந்தமான்  வடக்கு,தென் கிழக்கு போர்ட் ப்ளைர் கடலோரப்பகுதியில் 430 கி.மீ வேகத்திலும்  காற்று வீசி வருகிறது.இதனால் அப்பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது.இதனையொட்டி  பாக்ஜலசந்தி கடலோரப்பகுதியான இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்,பாம்பன்,ராமேசுவரம் ஆகிய கடலோரப்பகுதியில் பலத்து  சூறாவளி காற்றுடன் கூடிய அலைகள்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி  தொடர்ந்து நேற்றும்  வீசி வருகிறது.  இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 நேற்று க்கு முன் தினம் ஏற்றப்பட்டிருந்தது.இந்நிலையில் காற்றின் வேகம் அப்பகுதியில் அதிகரித்துள்ளதாள் நேற்று மாலையில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 2 ஏற்றப்பட்டுள்ளது.  மேலும் அப்பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும்,கடலோரப்பகுதியில் வசிக்கு மீனவர்கள் பாதுகாப்பாகவும்,முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என துறைமுக அதிகாரிகள் அறிவிறுத்தியுள்ளனர்.                   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து