எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- கஜா புயல் கரை கடப்பது தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் டாக்டர்.பி.சந்திரமோகன் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உடனிருந்தார். முதலாவதாக, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசரகால செயலாக்க மையத்தின் செயல்பாடு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின்னர் டாக்டர் சந்திரமோகன் கூறியதாவது:- இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கஜா புயல் தொடர்பான அறிவிப்பின்படி, இப்புயலானது வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கில் 320 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு கிழக்கு - வடகிழக்கே 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் முதல் பாம்பன் (ராமநாதபுரம்) இடையே நாகப்பட்டினத்திற்கு மிக அருகில் கரை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புயல் கரை கடக்கும்பொழுது கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் மிக அதிகமாகவும், கனமழை, மிக கனமழை போன்ற சூழ்நிலை நிலவும் எனவும், அதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்திட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கஜா புயல் தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் எளிதில் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 39 பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வருவாய்த்துறை, ஊரக வளர்;ச்சித்துறை, முதல்நிலை மீட்புப்பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்கும் விதமாக 15 மண்டல அளவிலான பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் கரை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம். குறிப்பாக பலத்த காற்று வீசும் நேரத்தில் வெளியிடங்களுக்கு செல்லுதல், பயணங்கள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை தாழிட்ட நிலையில் வைத்திட வேண்டும். மரத்தடியில் வாகனங்களை நிறுத்துதல், கால்நடைகளை கட்டுதல் போன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். உணவுப்பொருட்கள், மருந்து மாத்திரைகள், கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பு வைத்திடல் வேண்டும். புயல் கரை கடக்கும் பொழுது காற்றின் வேகம் திடீரென்று குறையும். மந்த நிலைக்குப்பின்பு மீண்டும் சூரைக்காற்று பலமாக வீசும். எனவே புயல் கடந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்வரையில் வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும். மேலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் அறிவுரைகளை தொலைக்காட்சி, வானொலி, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் போன்றவற்றில் தெரிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு கூறினார்.
அதன்பின்பு மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:- கஜா புயல் அறிவிப்பினைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கும் விதமாக 15 மண்டல அளவிலான பாதுகாப்புக் குழுக்களும், 429 ஊராட்சிகளில் 5,500 முதல்நிலை மீட்பு பணியாளர்களை கொண்டு முதல்நிலை மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளுக்காக 92 உயர் மின்னழுத்த, 34 ஜெனரேட்டர்கள், 141 ஜேசிபி இயந்திரங்கள், 52 புரொக்கலைன் இயந்திரங்கள், 45000 மணல் மூட்டைகள் போன்றவை தயார் நிலையில் உள்ளன. மேலும், கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சார்ந்த 25 வீரர்கள், மாநில காவல் துறையின் சார்பாக மாநில பேரிடர் மீட்பு குழு பயிற்சி பெற்ற 80 வீரர்கள், இந்திய கடலோர காவல்படை சார்ந்த 90 வீரர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக 30 வீரர்கள், செஞ்சிலுவை சங்கம் சார்பாக மீட்புப் பணிகளில் பயிற்சி பெற்ற 50 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவசர கால சூழ்நிலைக்கேற்ப இவ்வீரர்கள் அனைவரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தற்போதைய நிலவரப்படி ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஷ்கோடி பகுதியில் இருந்து 40 நபர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
விசாரணைக்கு ஆஜராகுவதில் பாபா ராம்தேவுக்கு விலக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 Apr 2024புதுடெல்லி : விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து பாபா ராம்தேவுக்கு விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.