எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடிலெய்டு : ஆக்ரோஷமாக ஆடுவதை கைவிட்டால் ஒரு ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலிய அணியால் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
அறிவுறுத்தல்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தற்போது தடையை அனுபவித்து வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர்களின் அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. மைதானத்திலும், வெளியிலும் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
வார்த்தை போரில்...
வழக்கமாக ஆஸ்திரேலிய அணியினர், எதிரணியுடன் வார்த்தை போரில் ஈடுபட்டு சீண்டுவது உண்டு. இதனால் எதிரணி வீரர்கள் கோபத்தில் தவறு செய்வார்கள், அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவர்களது யுக்திகளில் ஒன்றாகும். ஆனால் தற்போது அவர்கள் சற்று சாந்தமாக ஆடுவது போல் தோன்றுகிறது. இது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கை எரிச்சலூட்டியுள்ளது.
ஊறிப்போன ஒன்று...
இது தொடர்பாக கிளார்க் அளித்த பேட்டியில் ‘மற்றவர்கள் நம்மை விரும்புவார்களா? இல்லையா? என்ற கவலையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் விட்டுவிட வேண்டும். மாறாக மதிக்கத்தக்க அணியாக இருக்க வேண்டும். அதன் மீது தான் நம் கவலை இருக்க வேண்டும். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ? ஆக்ரோஷமாகவும், கடினமான முறையிலும் விளையாடுவது தான் ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை. அது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று.
வெற்றி பெற முடியாது...
இந்த பாணியில் இருந்து வெளியேறி, மென்மையான போக்கை கடைபிடித்தால் உலகில் எல்லோருக்கும் பிடித்தமான அணியாக ஆஸ்திரேலியா இருக்கும். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட நிச்சயம் வெற்றி பெற முடியாது. எல்லோரும் வெற்றியைத்தான் விரும்புகிறார்கள்’ என்றார்.
கவலைப்பட்டதில்லை...
‘எதிரணி வீரர்களுடன் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டதை நினைத்து நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. ஸ்டீவ்வாக் போன்ற வீரர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்’ என்றும் கிளார்க் குறிப்பிட்டார்.
விவாதிக்கவில்லை...
கிளார்க்கின் விமர்சனத்துக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘எதிரணியினர் எங்களை விரும்ப வேண்டும் என்று நாங்கள் விவாதிக்கவில்லை. ஆஸ்திரேலிய மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை ரசிகர்கள் நேசிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி தான் பேசுகிறோம். மற்றபடி எதிரணி எங்களை விரும்புகிறார்களா? இல்லையா? என்பது பற்றி சிறிது கூட கவலையில்லை.
எந்த மாற்றம் இல்லை...
மைக்கேல் கிளார்க் கூறுவது போல் தான், நாங்கள் கடினமாகவும், ஆக்ரோஷமாகவும் வரிந்து கட்டி நிற்கப்போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் மிக கடினமாக போராடினோம். அதே போன்று தொடர்ந்து ஆடுவோம். ஹேசில்வுட், ஸ்டார்க், கம்மின்ஸ் போன்ற மூத்த வீரர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் நம்பிக்கை அதிகரிக்கும்’ என்றார்.
மீட்டெடுக்க வேண்டும்...
இதற்கிடையே மைக்கேல் கிளார்க்குக்கு எதிராக குரல் கொடுத்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேடிச், ‘பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நாம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டோம் என்பதை கிளார்க் மறந்து விட்டார். தவறுகளை திருத்திக்கொண்டு முடிந்த வரைக்கும் சீக்கிரமாக ஆஸ்திரேலிய அணி மீதான நல்லெண்ணத்தை மீட்டெடுக்க வேண்டும். அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.