எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, தி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
குற்றச்சாட்டுகள்...
கரூரை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான மந்திரி சபையில் கடந்த 2011-ம் ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து அவரை ஜெயலலிதா மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார். அவருக்குப் பதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க.வில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள்...
ஜெயலலிதா மீண்டும் முதல்வரான போதும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. காரணம், போக்குவரத்து துறை அமைச்சராக இவர் இருந்த போது பல இளைஞர்களுக்கு கண்டக்டர் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இதை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அவ்வப்போது குற்றம் சாட்டி வந்தன.
தி.மு.க.வில் இணைத்து...
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு செந்தில் பாலாஜி டிடிவி தினகரன் அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். தினகரனின் அ.ம.மு.க. இயக்கத்தின் அமைப்பு செயலாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களுடன் செந்தில் பாலாஜியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வது தொடர்பாக தினகரனுக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இதனால் அதிருப்தியில் இருந்த செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி தி.மு.க.வில் இணைவது என்று முடிவெடுத்தார். இது தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதை நேற்று ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார் செந்தில் பாலாஜி. தனது ஆதரவாளர்கள் படை சூழ அறிவாலயம் சென்ற அவர் அங்கு ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அதற்கான உறுப்பினர் புத்தகத்திலும் அவர் கையெழுத்திட்டார்.
மாபெரும் துரோகம்...
அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர், அமைச்சர் என பல்வேறு பதவிகளில் இருந்து பதவி சுகம் அனுபவித்தவர்தான் இந்த செந்தில் பாலாஜி. அப்படிப்பட்ட இவர் இன்றைக்கு தி.மு.க.வுக்கு தாவியிருக்கிறார். தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை தோற்றுவித்தார் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் பணியாற்றி தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவும் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்தார். ஒரு கட்டத்தில் கருணாநிதி ஒரு தீய சக்தி என்றும் ஜெயலலிதா விமர்சித்தார். அவரது தலைமையில் பணியாற்றி அமைச்சர் பதவி உள்ளிட்ட பதவிகளில் இருந்து சுகபோகங்களை அனுபவித்த செந்தில் பாலாஜி இன்று தி.மு.க.வுக்கு தாவியிருப்பது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது ஜெயலலிதாவுக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்று அ.தி.மு.க.வினர் கொதித்துப் போயுள்ளனர். இது ஒருபுறமிருக்க, செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த தி.மு.க. இன்று இவரை எப்படி தனது இயக்கத்தில் சேர்த்துக் கொண்டது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மாற்றுக் கட்சியில் இருந்தால் மோசடி பேர்வழி. தி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த கேள்விக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும்.
கவலையில்லையாம்...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அ.ம.மு.க. இயக்கத்தின் மாநில அமைப்பு செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்தவர். இப்போது அந்த இயக்கத்துக்கும் டாடா காட்டி விட்டு இவர் தி.மு.க.வுக்கு சென்று விட்டார். இது பற்றி கருத்து கூறிய டிடிவி தினகரன், நெல் மணிகளோடு களைகளும் வளர்வது நிலத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும்தான் என்று ஆத்திரத்தோடு கூறியுள்ளார். மேலும் போலிகள் போவதை பற்றி கவலையில்லை. போனால் போகட்டும் போடா என்கிற பாணியில் தினகரன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்ததை பற்றி பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
பாதை தவறி விட்டார்...
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இது பற்றி கூறுகையில், செந்தில் பாலாஜி பாதை தவறி விட்டார் என்று கூறியுள்ளார். அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், கடலில் கரைத்த பெருங்காயம் போல பழைய பாசத்தின் அடிப்படையிலேயே அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார். பிரிந்து சென்றவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தால் எதிர்காலம் இருக்கும். தினகரன் கட்சியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். பலம் இல்லாதவர்கள் தான் மற்றவர்களை தங்கள் பக்கம் இழுப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். எது எப்படியோ, மாற்றுக்கட்சியினரை விமர்சிக்கும் தி.மு.க. தங்கள் பக்கம் அவர்கள் வந்தால் பொன்னாடை போர்த்தி வரவேற்கிறது. இதில் என்ன லாஜிக் உள்ளது என்று தெரியவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.