எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
துணை ஜனாதிபதி...
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் தமிழக விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019-ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு பேசுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள். இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிறைவுரையாற்றுகிறார்.
12 முன்னணி நிறுவனங்கள்...
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி மற்றும் 10-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. 2-வது முறையாக மீண்டும் நடக்கும் இம்மாநாட்டில் முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். மாநாட்டையொட்டி அமைக்கப்படும் 250-க்கும் மேற்பட்ட பொருட்காட்சி அரங்குகளில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாளர் நாடுகள் ஆகியோரின் தயாரிப்பு மற்றும் சேவைகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதில் மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாய வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற தொடர்புடைய 12 முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
கருத்தரங்கு...
மாநாட்டில் காலையில் ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்த முதலீட்டாளர்கள் கருத்தரங்கும், பகல் 2 மணி அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் கொரியா நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கும் நடக்கிறது. அதன் பின்னர் தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9 மணி முதல் பெயர் பதிவு செய்யப்படும். 10 மணிக்கு மாநாடு துவக்கப்படும். தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி, புதிய வாய்ப்புகளைக் கண்டறிதல், எதிர்பார்க்கப்படும் சவால்களை சமாளித்தல் என்னும் தலைப்பில் கருத்தரங்கு பிற்பகல் 2 மணிக்கு துவங்கும்.
கல்வி-வேலைவாய்ப்பு...
எம்.எஸ்.சண்முகம் (தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக இயக்குனர்) வி.எஸ். பார்த்தசாரதி (மகேந்திரா குரூப்), வெங்கட்ரமணி (ஐ.பி. ரிங்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர்), அனந்த் கோயங்கா (சியாட் லிமிடெட் நிர்வாக இயக்குனர்), மைக்கேல் ப்ரீல்மெயர் (போர்டு மோட்டார்ஸ் தலைவர் நிர்வாக இயக்குனர்), ஆகியோர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் கல்வி முதல் வேலைவாய்ப்பு என்னும் தலைப்பில் 7 பேர் உரையாற்றுகிறார்கள்.
விருப்பமான இடம்...
ஏரோஸ்பேஸ் ராணுவ தொழில்களுக்கு விருப்பமான இடம் தமிழ்நாடு என்னும் தலைப்பில் ரமேஷ் சந்த் மீனா (டிட்கோ தலைவர்), ஆர். சுந்தரம் (சேலம் ஏரோ பார்க் தலைமை செயல் அதிகாரி), ஏர்மார்ஷல் எம். மாதேஸ்வரன் (ஓய்வு: பெனின்சுலா பவுண்டேஷன் தலைவர்), வினோத் சுரானா (சுரானா, சுரானா இன்டர்நேஷனல் அட்டர்னீஸ் தலைமை நிர்வாக அதிகாரி பங்குதாரர்) ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
பயோ டெக்னாலஜி பார்மசூட்டிக்கல்ஸ், மருத்துவக் கருவிகள் தயாரித்தல் என்னும் தலைப்பில் அபயக்குமார் ஜெயின் (வெங்கடநாராயணா ஆக்டிவ் இன்க்ரீடியன்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்), டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு (ட்ரிவிட்ரான் ஹெல்த் கேர் (பி) லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் நிர்வாக இயக்குனர்) உரையாற்றுகிறார்கள்.
சமீபத்திய போக்குகள்...
தமிழ்நாட்டில் தொழில்கள் நடத்துவதை எளிமைப்படுத்திய சமீபத்திய போக்குகள் என்னும் தலைப்பில் சந்தானம் (செயின்ட் கோபைன் கிளாஸ் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் நிர்வாக இயக்குனர்), கே.ராமசுவாமி ரூட்ஸ் குரூப் செயல் தலைவர் உள்ளிட்ட 7 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் முதலீட்டு வாய்ப்புக்காக உருவாகும் தொழில்நுட்பங்கள் என்னும் தலைப்பில் 6 பேர் உரையாற்றுகிறார்கள்.
வாய்ப்புகள் - சவால்கள்...
தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் சவால்களும் என்னும் தலைப்பில் ரமேஷ் சந்த் மீனா (டிட்கோ நிர்வாக இயக்குனர்) உள்ளிட்ட 6 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் உள் கட்டமைப்பு முன்னேற்றம் தனியார் ஈக்குவிட்டி, தனியார் கடன் உள்ளிட்ட முக்கிய நிதி குறித்த அம்சங்கள் பற்றி 6 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான மையம் முன்னோட்டப் பாதை என்னும் தலைப்பில் கார்த்திக் ஆத்மநாதன் (ஈ.வி & ஈ மொபிலிட்டி சொல்யூஷன்ஸ், அசோக் லேலண்ட் லிமிடெட் தலைவர்) உள்பட 7 பேர் உரையாற்றுகிறார்கள்.
2-ம் நாள் மாநாடு...
கொரியா குடியரசு நாடு கருத்தரங்கில் தீபக் பரத்வாஜ் (சாம்சங், இந்தியா துணைத் தலைவர்) உள்ளிட்ட 5 பேர் உரையாற்றுகிறார்கள். அடுத்து 24-ம் தேதி 2-ம் நாள் மாநாடு துவங்குகிறது. தொழில்துறை கட்டமைப்பில் தொழில்துறை காரிடார் கட்டமைப்பில் தமிழ்நாட்டின் புதிய பரிமாணம் என்னும் தலைப்பில் 6 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் மதம் சுகாதாரம் பாரம்பரியம் சுற்றுலா ஆகிய துறைகளில் முதலில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் இந்து, அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் உள்பட 8 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டை எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி கேந்திரமாக மாற்றுதல் என்னும் தலைப்பில் அறிவியல் தொழில்நுட்ப துறை செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு உள்பட 6 பேர் உரையாற்றுகிறார்கள்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்...
தமிழ்நாட்டில் வேளாண் உணவு பதப்படுத்தும் தொழில் துறையில் வாய்ப்புகள் குறித்த உரையாடல் நடைபெறுகிறது. இதே போல தமிழ்நாட்டில் ஜவுளித் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள், கட்டிட நிர்மாணம் ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து 10 பேர் உரையாற்றுகிறார்கள். சேமிப்புக் கிடங்கு துறை மற்றும் சென்னை அடுத்த தலைமுறைக்கான நிதிவள கேந்திரமாக உருமாற்றுதல் என்னும் தலைப்பில் 15 பேர் உரையாற்றுகிறார்கள். பிற்பகல் 3 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. அதையடுத்து நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப