முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் கலெக்டரை, குடியரசு தின உரை வாசிக்க கூறிய பெண் அமைச்சர்

சனிக்கிழமை, 26 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

குவாலியர் : மத்திய பிரதேசத்தில் கலெக்டரை குடியரசு தின உரை வாசிக்கும்படி மந்திரி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் 70-வது குடியரசு தினம் நேற்று கோலாகலமுடன் கொண்டாடப்பட்டது. மத்திய பிரதேசத்தில் அமைச்சராக இருக்கும் இமர்த்தி தேவி குவாலியர் நகரில் குடியரசு தின உரையை வாசித்து கொண்டு இருந்தார். அவர் அருகே மாவட்ட கலெக்டர் நின்றபடி இருந்துள்ளார்.

இந்த நிலையில், திடீரென தனது உரையை நிறுத்திய அவர் மீதமுள்ளவற்றை வாசிக்கும் படி கலெக்டரை அழைத்து உள்ளார். இதனை அடுத்து கலெக்டர் தொடர்ந்து உரையை வாசித்து உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுபற்றி பின்னர் இமர்த்தி தேவி செய்தியாளர்களிடம் கூறும் போது, கடந்த 2 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். நீங்கள் மருத்துவரிடம் இது பற்றி கேட்டு கொள்ளலாம். கலெக்டர் உரையை முறையாக வாசித்து உள்ளார் என தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து