எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம், பொங்கல் பரிசு ரூ.1,000 மற்றும் ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் உள்ளிட்ட மக்களுக்கு உதவக் கூடிய திட்டங்களை வழக்கு தொடர்ந்து தி.மு.க. கெடுத்து வருகிறது என்று சேலம் மாவட்டம் கருமந்துறையில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்த்தினார்.
7 கட்டமாக...
பாராளுமன்ற தேர்தல் அறிவி்க்கப்பட்டு நாடு முழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18 -ல் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா, புதிய நீதி கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் சேலம் மாவட்டம் கருமந்துறையில் நேற்று காலை வெற்றி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தமிழக முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தை துவக்கினார். அங்கு நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். கடைகளில் உள்ள வியாபார பெருமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். முதல்வர் வருகையையொட்டி அங்கு ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் குவிந்தனர்.
40 தொகுதிகளிலும்...
தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷை ஆதரித்து பொதுமக்கள் மத்தியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தை நான் சேலம் கருமந்துறையில் இருந்து துவங்குவதை பெருமையாக கருதுகிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு இடம் என 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதே போல் 18 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட சட்டசபை இடைத் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். நம்முடைய வெற்றி வேட்பாளர்கள் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
பிரதமராக்குவோம்...
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால்தான் மக்கள் நலமாக வாழ முடியும். ஆகவே நிலையான ஆட்சியை ஏற்படுத்தும் போது நாட்டிற்கு பாதுகாப்பு கிடைக்கும். இன்றைக்கு பா.ஜ.க. தலைமையில் பிரதமராக இருக்க கூடிய மோடியை மீண்டும் பிரதமராக்க தமிழகத்தில் இருந்து 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் வெற்றி பெற்று அவரை மீண்டும் பிரதமராக்குவோம். நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும். நாம் நிம்மதியாக இருந்தால்தான் நாடு செழிக்கும். ஆகவே பாதுகாப்பு முக்கியம். அந்த பாதுகாப்பை நம் பிரதமர் மோடியால்தான் தர முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார். இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
மோடியிடம் மட்டுமே...
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காஷ்மீரில் நமது ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தில் தீவிரவாதிகள் தாக்கியதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இப்படிப்பட்ட சம்பவம் எந்த ஒரு இடத்திலும் நடைபெறாமல் இருக்க நிலையான ஆட்சி வேண்டும். இந்திய நாட்டின் பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுத்தார். நம்முடைய விமான படை மூலமாக அண்டைய நாட்டில் இருக்கின்ற பயங்கர வாதிகள் முகாமை குண்டுகளை வீசி அழித்தார். எதிரிகள் முகாமை அழிக்கும் பணியில் ஈடுபட்டபோது இந்திய விமானப் படையை சேர்ந்த விமானப் படை வீரர் அபிநந்தன் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டார். உடனடியாக பிரதமர் மோடி அவரை மீட்டார். இந்த பெருமை பிரதமர் மோடியையே சாரும். ஆகவே எதிரிகளின் அச்சுறுத்தலை தூள், தூளாக்கும் திறமை மோடியிடம் மட்டுமே உள்ளது என நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம்.
இரட்டை இலையில்...
இந்திய நாடு மிகப் பெரிய ஜனநாயக நாடு. 130 கோடி மக்கள் வாழ்கின்றனர். இந்த மிகப் பெரிய ஜனநாயக நாட்டிலே வலிமையான தலைமை வேண்டும். அந்த வலிமையான தலைமை நம் பிரதமர் மோடியால் மட்டுமே வழங்க முடியும். எனவே வாக்காள பெருமக்களே சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு முரசு சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
பாடுபட வேண்டும்...
இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தல். முடிவில் தர்மமே வெல்லும். தர்மம் நம்மிடையே இருக்கின்றது. எனவே இந்த தேர்தலில் தர்மத்தை நிலை நாட்டுங்கள். நல்லதொரு ஆட்சி மத்தியில் மலர வேண்டும். தமிழகம் செழிக்க வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம். எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா ஆகியோர் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள் அவர்களுடைய கனவை நினைவாக்க நாம் பாடுபட வேண்டும்.
சந்தர்ப்பவாத கட்சி...
கடந்த 16 ஆண்டு காலம் மத்தியில் தி.மு.க. ஆட்சி பங்கு வகித்த போது மக்களுக்கு எந்தவித திட்டங்களையும் செய்ய தவறி விட்டது. மத்தியில் தற்போது ஆட்சி நடத்தும் பி.ஜே.பி. ஆட்சியை மதவாத கூட்டணி என விமர்சித்து வரும் தி.மு.க. கடந்த 1999-ம் ஆண்டு மத்தியில் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்து ஆட்சி புரிந்தது. அப்போது மதவாத கட்சியாக இல்லாதது தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பின் பி.ஜே.பி. மதவாத கட்சியாகி விட்டதா? சந்தர்ப்பவாதத்திற்காக தி.மு.க. செயல்படுகிறது என்பது தெரிகிறது.
கெடுக்க நினைக்கும்...
மத்தியில் ஒரு ஆட்சியும், மாநிலத்தில் ஒரு ஆட்சியும் நடைபெற்றால் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியாது. நூறு கோடி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைய வேண்டும். தமிழக மக்களின் நலன் கருதி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு கோடி மக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாயும், பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற முயற்சி செய்த கட்சிதான் தி.மு.க. மக்களுக்கு பயன் பெறும் வகையில் எந்த திட்டத்தை செய்தாலும் கெடுக்க நினைக்கும் கட்சி தி.மு.க.
நிறுத்தி வைப்பு...
தற்போது வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த உடனே உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கறிஞர் வழக்கு தொடுத்ததால் அந்த திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவக் கூடிய செயல் திட்டங்களை தி.மு.க. வழக்கு தொடர்ந்து முறியடித்து வருகிறது. கட்சி பாகுபாடு இல்லாமல் இரண்டு கோடி மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அ.தி.மு.க. அரசு உள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றவுடன் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கப்படும். பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். ஏற்கனவே சட்டசபையில் 110 விதியின் கீழ் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதே போல கள்ளக்குறிச்சியை மையமாக கொண்டு தனி மாவட்டமாக செயல்படுத்தப்படும்.
கால்நடை பூங்கா...
தலைவாசல் அருகே 900 ஏக்கர் இடத்தில் 396 கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா அமைக்கப்படும். இதில் மருத்துவக் கல்லூரி கால்நடை ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி செய்வதை போல தி.மு.க. ஒருபோதும் செய்யாது. பொய் வாக்குறுதியை கூறி விட்டு செயல்படுத்தாத ஆட்சியாக தி.மு.க. இருக்கும். மலைவாழ் மக்கள் மற்றும் அனைத்து தரப்பட்ட மக்களின் நலனிற்காக அம்மாவின் அரசு தொடர்ந்து செயல்படும். எனவே மக்களின் நலனின் அக்கறை உள்ள அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் தொடர அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சேலம் மேற்கு ஜி. வெங்கடாஜலம், ஆத்தூர் சின்னதம்பி, கெங்கவல்லி மருதமுத்து, வீரபாண்டி மனோன்மணி, ஏற்காடு சித்ரா, சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர். இளங்கோவன், வேட்பாளர்கள் சேலம் கே.ஆர்.எஸ். சரவணன், கள்ளக்குறி்ச்சி எல்.கே.சுதீஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.