முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் தோல்வி மம்தா மழுப்பல்

வியாழக்கிழமை, 23 மே 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அதே சமயம், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி முடிக்கும் வரை காத்திருப்போம். வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் தோல்வியடைந்தவர்கள் யாரும் தோல்வியாளர்கள் அல்ல என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தோல்வி குறித்து மழுப்பலாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து