எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை, மதுரை, ராமநாதபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ. 185 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் .
கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 56 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் / பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 19 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளை துவக்கியுள்ளது. இதன்மூலம், மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு 48.6 சதவிகிதத்தைப் பெற்று இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது.
உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 9 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், நூலகம், கருத்தரங்கக் கூடம், நிர்வாகப் பிரிவுக் கட்டிடம் மற்றும் இதர கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், கிருஷ்ணகிரி - அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி - அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் பர்கூர் - அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 35 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 8 ஆய்வகக் கட்டிடங்கள், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டிடங்கள், வேலூர் மாவட்டம், நரியனேரி - திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறை கட்டிடங்கள், திருவண்ணாமலை - அரசு கலைக் கல்லூரியில் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள், நூலகம், கழிவறைக் கட்டிடங்கள் மற்றும் வடிகாலுடன் கூடிய அணுகு சாலை,
சென்னை - சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 2 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வியாசர்பாடி - டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஜார்ஜ் டவுன் - பாரதி மகளிர் கல்லூரியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 45 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 10 ஆய்வகக் கட்டிடங்கள், சேப்பாக்கம் - மாநிலக் கல்லூரியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 360 மாணவர்கள் தங்கும் வசதியுடன் 90 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள ஆடவர் விடுதிக் கட்டிடம், ஈரோடு மாவட்டம் - பெருந்துறை அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடங்கள் பணிமனை மற்றும் இதரக் கட்டிடங்கள், கோயம்புத்தூர் - அரசு பொறியியல் கல்லூரியில் 15 கோடியே 50 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்துடன் கூடிய விடுதிக் கட்டிடங்கள், குறைந்த வருவாய் பிரிவினருக்கான 48 குடியிருப்புகள் மற்றும் கலந்தாய்வுக்கூடம், மேட்டுப்பாளையம் - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், கருத்தரங்கக்கூடம், நிர்வாகப் பிரிவுக் கட்டிடம் மற்றும் இதர கட்டிடங்கள்,
கோயம்புத்தூர் - பாரதியார் பல்கலைக்கழகத்தில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மைய கருவிமயமாக்கல் வசதிகள், நீச்சல் குளம், அறிவியல் ஆய்வகம் மற்றும் மகளிர் விடுதிகளுக்கான பொது உணவுக்கூடம், திருப்பூர் மாவட்டம் - அவினாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள், நிர்வாகப் பிரிவுக் கட்டிடம் மற்றும் இதர கட்டிடங்கள், திருப்பூர் - சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் கழிவறைக் கட்டிடங்கள்,
திருவாரூர் - திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 6 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகக் கட்டிடங்கள், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் - அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கும்பகோணம் - அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஒரத்தநாடு - அரசு கல்வியியல் கல்லூரியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 33 கூடுதல் வகுப்பறைகள், 5 ஆய்வகங்கள் மற்றும் கழிவறைக் கட்டிடங்கள், கடலூர் மாவட்டம், சிதம்பரம் - அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கடலூர் - பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 27 கூடுதல் வகுப்பறைகள், 3 ஆய்வகங்கள் மற்றும் கழிவறைக் கட்டிடங்கள்,
நாமக்கல் - அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல் - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குமாரபாளையம் - அரசு கல்வியியல் கல்லூரியில் ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 40 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 10ஆய்வகக் கட்டிடங்கள், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் 4 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், முசிறி - அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 30 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 5 ஆய்வகக் கட்டிடங்கள், திருச்சிராப்பள்ளி - பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 6 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆடவர் விடுதிக் கட்டிடம் மற்றும் மைய கருவிமயமாக்கல் ஆய்வகக் கட்டிடம், கரூர் மாவட்டம், குளித்தலை - அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கரூர் - அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 26 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகக் கட்டிடங்கள், திண்டுக்கல் - எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நிலக்கோட்டை - அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 30 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகக் கட்டிடங்கள்,
மதுரை - ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மேலூர் - அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 25 கூடுதல் வகுப்பறைகள், 8 ஆய்வகங்கள் மற்றும் கழிவறைக் கட்டிடங்கள், சிவகங்கை - இராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சிவகங்கை - அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பூலான்குறிச்சி - வ.செ.சிவ அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காரைக்குடி - அழகப்பா கலைக் கல்லூரியில் ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 43 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகக் கட்டிடங்கள், காரைக்குடி- அழகப்பா பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு கோடியே 41 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியருக்கான கூடுதல் விடுதிக் கட்டிடங்கள்,
ராமநாதபுரம் - சேதுபதி அரசு¬ கலைக் கல்லூரியில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டிடங்கள், நாகப்பட்டினம் மாவட்டம்- புத்தூர், சீனிவாசா சுப்புராய பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனைக் கட்டிடம் என மொத்தம் 185 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விவேகானந்தன், கல்லூரிக் கல்வி இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) ஜோதி வெங்கடேசுவரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல