எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- தமிழக மக்கள் அம்மாவின் அரசுக்கு ஆதரவாக உள்ளதால் அம்மா அரசின் ஆயுள் குறித்த ஸ்டாலினின் பேச்சு வெத்து வேட்டு என்று திருமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அதிரடியாக பேசினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள மறவன்குளம்,உச்சப்பட்டி,கப்பலூர்,மேலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டங்கள் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த கூட்டங்களுக்கு திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன் தலைமை வகித்தார்.மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள். ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பூத்கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஆலொசனை கூட்டங்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் குறித்தும்,எதிர்கட்சியினரின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து அ.தி.மு.க.விற்கு 100சதவீத வெற்றியை பெற்றுத் தந்திடுவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மறவன்குளம் கிராமத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்ததாவது: மேடைகளில் பொய்யை மட்டுமே ஸ்டாலின் பேசி வருகிறார்.அவர் சொல்லிடும் பொய் உண்மையாக ஆவதற்கு காலம் எந்தவிதத்திலும் கைகொடுக்காது.தேர்லுக்கு முன்பு அப்படி நடந்துவிடும் இப்படி நடந்துவிடும் என்று.அவர் சொன்னபடி அப்படியும் நடக்கவில்லை இப்படியும் நடக்கவில்லை.அம்மாவுடைய அரசு தான் இன்றும் தொடர்கிறது. தேர்தலுக்கு பின்பு ஐந்து நாட்கள் அமைதியாக இருந்தார்கள்.தற்போது மீண்டும் பொய் பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசு என்பது ஐந்து ஆண்டுகாலம்.அந்த ஐந்து ஆண்டுகாலத்தில் அம்மாவுடைய அரசு மக்களுக்கு முழுமையான சேவை செய்திடும்.ஆனால் அதற்கு முனபாகவே பல்வேறு இடைத்தரகர்களை நியமித்து ஆள்பிடிக்கிற வேலைகளை செய்து கொண்டு மேடையிலே பரிசுத்தமானவர் போல் ஸ்டாலின் பேசுகிறார்.அம்மாவுடைய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் முதல்வர் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.ஒவ்வொரு நாளும் முதல்வர் எடப்பாடியார் மீதான நம்பிக்கை மக்களிடம் பெருகிக் கொண்டே இருக்கிறது.இந்த அச்சத்தினால் தான் அம்மாவுடைய அரசின் ஆயளை பற்றி அடிக்கடி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்.அம்மாவுடைய உண்மை விசுவாசிகள் யாரும் புரட்சித்தலைவர் தீயசக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க.விற்கு போக மாட்டார்கள்.எனவே அம்மா அரசின் ஆயுள் குறித்த ஸ்டாலினின் பேச்சு வெத்து வேட்டு.இந்த பேச்சிற்கு பதிலாக தனது செயலால் முதல்வர் பதிலடி தந்து கொண்டிருக்கிறார்.தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை பொருத்தமட்டில் பவமழை பொய்த்ததால் வந்த விளைவு.இதனால் தான் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதுடன் பல்வேறு கட்ட வரலாற்று சிறப்புமிக்க குடிமராமத்து திட்டங்களை அம்மாவின் அரசுசெயல்படுத்தி வருகிறது.
அத்துடன் முந்தைய தி.மு.க ஆட்சியின் போது கொண்டு வரத்தவறிய நல்லபல திட்டங்களையும் அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது.அம்மா இருந்தபோது இந்த 41சதவீத வாக்கு தற்போது 38.2சதவீதமாக உள்ளது.இதற்கு காரணம் துரோகி டிடிவியின் பொய் பிரச்சாரம் மற்றும் எதிர்கட்சியினரின் கோயபல்ஸ் பிரச்சாரம் அத்துடன் புதுகட்சிகளின் வரவு தான்.இந்த மும்முனை தாக்குதலை சமாளித்து இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை அம்மா அரசு பெற்றுள்ளது.தண்ணீர் பிரச்சனையை முன்வைத்து எதிர்கட்சியினர் பல்வேறு பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.இதனை முறியடித்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் விவசாய கிணறுகள்,கூட்டுகுடிநீர் திட்டங்கள்,கடல்நீரை குடிநீராக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததன் காரணமாகத்தான் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் முழமையடைந்தவுடன் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் பெருமளவு தீர்ந்திடும்.பல்வேறு தடைகளை தாண்டி மக்களின் பேராதரவுடன் அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது.20,22 என்று ஸ்டாலின் கணக்கு போட்டு வருகிறார்.அவரது கணக்கு தப்பு கணக்கு ஒருகாலும் அது கைகூடாது.தமிழக அரசு மேற்கொண்டு வரும் மாற்று நடவடிக்கைகளின் மேல் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தி.மு.க ஆட்சியின் போது இருந்த சட்டம்-ஒழுங்கு பாதிப்பு,நில அபகரிப்பு,மின்தட்டுப்பாடு போன்றவை அம்மா ஆட்சியில் கிடையாது.இதனால் தான் மக்கள் அம்மா அரசுக்கு பாதுகாவலாக உள்ளனர்.எனவே தான் புரட்சித்தலைவி அம்மா அறிவித்தபடி மக்கள் ஆதரவுடன் அம்மாவுடைய அரசு இன்னும் நூறு ஆண்டுகள் அன்னைத் தமிழகத்தை ஆள்வது நிச்சயம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டங்களில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம், போத்திராஜா, திருப்பதி,ஒன்றிய செயலாளர்கள் கள்ளிக்குடி மகாலிங்கம்,கல்லுப்பட்டி ரமாசாமி,பேரூர் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி,திருமங்கலம் ஒன்றிய அவை தலைவர் அன்னக்கொடி,துணை செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம்,பழனிச்சாமி,ஆறுமுகம்,சிவஜோதி தர்மர்,கட்சி வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,சதீஷ்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன், சாமிநாதன்,நாகையாசாமி,எஸ்.பி.எஸ்.ராஜா,ஜெய.சி.செல்வகுமார்,சின்னன்,சாமிநாதன்,அழகர்,கல்லுப்பட்டி துணைச் செயலாளர் மீனாலட்சுமி,சின்னன்,பரமசிவம்,லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்;டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .