எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பாலில் கேடு விளைவிக்கும் கலப்பட பொருள் சேர்ப்பதை கண்டறியவும் 103 பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு ரூ. 2.06 கோடி மதிப்பீட்டில் பால் கலப்படம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும் என்று பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தரமான பால் உற்பத்தி செய்ய ஏதுவாக நடைமுறையில் உள்ள பால் பரிசோதனை முறைகளில் உள்ள இடர்பாடுகளை களையும் பொருட்டும், உற்பத்தியாளர்களின் பாலுக்கு சரியான விலை கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டும் 701 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8.76 கோடி மதிப்பீட்டில் தானியங்கி பால் பரிசோதனை கருவிகள் நிறுவப்படும்.
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் ஆரம்ப நிலையில் பாலின் தரத்தினை உறுதி செய்திடவும், பால் மற்றும் பால் உப பொருட்களை உற்பத்தி செய்ய ஏதுவாகவும் காஞ்சிபுரத்தில் 4 அலகுகள், தருமபுரியில் 15 அலகுகள், புதுக்கோட்டையில் 3 அலகுகள், விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி ஒன்றியங்களில் தலா 2 அலகுகளும் மற்றும் திருச்சி ஒன்றியத்தில் ஒரு அலகும், தலா 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மொத்தம் 34 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
350 மொத்த பால் குளிர்விப்பு மையங்களின் பால் கொள்முதல், பால் பரிசோதனை மற்றும் பால் குளிர்விப்பு செயல்பாடுகளை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும், கண்காணிப்பு வசதிகள் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். எளிய முறையில் பால் கலப்படத்தை கண்டறியவும், தரமான பால் உற்பத்தியை உறுதி செய்யவும், பாலில் கேடு விளைவிக்கும் கலப்பட பொருள் சேர்ப்பதை கண்டறியவும் 103 பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு ரூ. 2.06 கோடி மதிப்பீட்டில் பால் கலப்படம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும்.
பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான தீவனம் வழங்கும் பொருட்டும், அதன் மூலம் பாலின் தரத்தினை உயர்த்திடவும் ஈரோடு கால்நடை தீவன தொழிற்சாலையின் உற்பத்தி திறனை நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன் ஆக உயர்த்திட ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் 1982-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்டதாக நிறுவப்பட்டது. தற்போது நாளொன்றுக்கு ரூ.2 லட்சம் லிட்டராக பால் உற்பத்தி உயர்ந்து வருவதை கையாளுவதற்கு ஏதுவாக மேலும் நெய், வெண்ணெய், தயிர் ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்புகள் உள் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ.1.26 கோடி மற்றும் இயந்திர தளவாடங்கள் ரூ.5.19 கோடி உள்பட மொத்தம் ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மதிப்பு கூட்டப்பட்ட பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரித்து கூடுதல் வருவாய் பெற ஏதுவாகவும் உயர்ந்து வரும் நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாகவும் பன்னீர், லஸ்ஸி, தயிர் ஆகிய பால் உபபொருட்கள் உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் மேம்படுத்தும் பொருட்டு ரூ.3.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
திருநெல்வேலி பால் பண்ணையில் கையாளும் திறனை நாளொன்றுக்கு ஒரு லட்சத்தில் இருந்து 1.5 லட்சம் லிட்டராக உயர்த்திடவும், குல்பி, நறுமணப்பால் ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி பிரிவில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தவும் அதன் மூலம் ஒன்றியத்தின் வருவாயை பெருக்கிடவும் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய நலன்கள் கிடைத்திடவும் ரூ.3 கோடி மதிப்பீட்டில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் புதிய பால் பண்ணை தொழிற்சாலை மற்றும் பால் உபபொருட்கள் உற்பத்தி துவங்கும் வரை தாராபுரம், அவினாசி மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தி்யாளர்களி டமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை குளிர்விக்க ஏதுவாக மொத்த பால் குளிர்விப்பான்களும், பால் விற்பனை செய்ய பால் குளிர்விப்பு அறைகளும் மற்றும் சேமிப்பு கிடங்குகளும் ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் பரிசோதனை ஆய்வகம், தீவன கிடங்கு மற்றும் தூய முறையில் பால் கொள்முதல் மையத்துடன் கூடிய சொந்த கட்டடங்கள் அமைத்து, சங்கங்கள் திறம்பட செயல்படவும், பால் உற்பத்தியாளர்கள் தரத்துடன் பால் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும், கால்நடை தீவனத்தை சேமிக்க வசதி ஏற்படுத்தவும், 250 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் அலகு ஒன்றிற்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 250 அலுவலக கட்டடங்கள் கட்டுவதற்கு மொத்தம் ரூ.37.50 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும்.
தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் உற்பத்தி, உள்ளீடு பிரிவு அலுவலக கட்டடங்களை ஒருங்கிணைக்கவும், செயல்திறன் மேம்பாட்டுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அதிகரித்து வரும் வாழ்வாதார செலவினத்தை நிறைவு செய்வதற்காக கருணை ஓய்வூதியம் ரூ.3500-ல் இருந்து ரூ.4000 ஆகவும், கருணை குடும்ப ஓய்வூதியம் ரூ.1750-ல் இருந்து ரூ.2000 ஆகவும், உயர்த்தி ரூ.2.99 கோடி செலவில் வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மற்றும் களக்காடு பகுதிகளில் நுகர்வோர்களிடையே அதிகரித்து வரும் ஆவின் பால், பால் பொருட்கள் மற்றும் உப பொருட்களின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டும் விற்பனையை அதிகரித்து மாவட்ட ஒன்றிய வருவாய் உயர்த்திடவும், ஒன்றியம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் நலனுக்காகவும், நுகர்வோர்களுக்கு சிறந்த சேவையை அளிக்கும் பொருட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆவின் அதிநவீன பாலகங்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ரூ.50 லட்சம் செலவிலும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ரூ.25 லட்சம் மற்றும் களக்காட்டில் ரூ.50 லட்சம் செலவிலும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
தங்கம் பவுன் விலை 640 ரூபாய் அதிகரிப்பு
02 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.920 குறைந்து பவுன் ரூ.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...