எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சேதமடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ. 4,100 மற்றும் முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ. 5,000 உடனடியாக நிவாரணம் வழங்கவும், முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித் தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டதையடுத்து உடனடியாக மீட்பு மற்றும் நிவராணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டேன். நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையின் அடிப்படையில், கூடுதலாக மாநிலப் பேரிடர் மீட்புக் குழுக்கள், தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, அனைத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் மற்றும் 66 ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 456 நபர்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 400 நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும், 720 தூய்மைக் காவலர்களும், 160 மின்துறை ஊழியர்களும் ஆக மொத்தம் 1280 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 60 ஜே.சி.பி. இயந்திரங்கள், முப்பது 108 ஆம்புலன்சுகள், 16 ஜெனேரேட்டர்கள் மற்றும் 70 மரம் அறுப்பான்கள் பயன்படுத்தப்பட்டு மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.
எனது உத்தரவின் பேரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் முனைவர் சத்யகோபால் ஆகியோர் உடனடியாக நீலகிரி மாவட்டத்திற்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், 13-ம் தேதி அன்று துணை முதல்வர் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு அப்பணிகளை துரிதப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு கீழ்க்கண்ட உத்தரவுகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 6910 நபர்கள் மீட்கப்பட்டு 67 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு பால் பவுடர் வழங்கப்பட வேண்டும். வயது முதிர்ந்தோர் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ வசதி செய்து தரப்பட வேண்டும். தொற்று நோய்கள் ஏதும் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி மற்றும் குளோரின் ஆகியவை தெளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களில் இதுவரை 23 நிரந்தர மருத்துவ முகாம்கள் மற்றும் 13 நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 9,333 நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் தேவைக்கேற்ப இம்முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு அவர்களது குடும்பச் சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு தலா 10 லட்சம் ரூபாய் எனது உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது. அதே போல் காட்டுக்குப்பை, நஞ்சநாட்டை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் சஜீவ் என்ற நபரின் குடும்பத்தினருக்கும் 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த 11 நபர்களுக்கும் மற்றும் 2 கால்நடைகள் இழப்பிற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். பகுதியாக சேதமடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ. 4,100 மற்றும் முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ. 5,000 உடனடியாக நிவாரணம் வழங்கவும் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித் தர உத்தரவிட்டுள்ளேன். சேதமடைந்த தோட்டக்கலைப் பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணியினை 16-ம் தேதிக்குள் முடித்து, வேளாண் பெருமக்களுக்கு இடுபொருள் மானியம் வழங்கிட உரிய முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளேன்.
சேதமடைந்த 153.34 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக சீர் செய்யப்பட்ட நிலையில் அவற்றை முழுமையாக சீரமைக்கவும், சேதமடைந்த 185 சிறுபாலங்கள், 115 மின் கம்பங்கள், 3.5 கி.மீ நீளமுள்ள மின் கம்பிகள் மற்றும் 6 மின் மாற்றிகள் ஆகியவற்றை உடனடியாக மறுசீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட 55 இடங்களில், 31 இடங்கள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவழிப்போக்குவரத்திற்கு ஏதுவாக சீரமைக்கப்பட்ட 24 சாலைகளில், இருவழிப் போக்குவரத்திற்கு ஏற்ப சீரமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேதமடைந்த உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க தேவைப்படும் நிதி தொடர்பான முன்மொழிவுகளை விரைந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணத்திற்காக ரூபாய் முப்பது கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல