எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பவானி ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஈரோடு வேளாளர் பெண்கள் கல்லூரியின் பொன்விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஈரோடு, பெருந்துறை, காங்கேயம் சாலையில், திண்டல் சந்திப்பிலிருந்து வில்லரசம்பட்டி வழியாக ஊட்டி, கோத்தகிரி, சத்தி, ஈரோடு சாலையில் கண்ராத்தாங்குளம் அருகே சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள இணைப்புச் சாலை பல்வழித் தடமாக ரூபாய் 22.50 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்தவுடன் விரைவில் பணி துவங்கப்படும்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி மற்றும் நாமக்கல் மாவட்டம் புள்ளிக்கல் பாலத்தை இணைக்கும் வகையில் காவேரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்தவுடன் விரைவில் பணி துவங்கப்படும்.
மாநிலச் சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரோட்டிலிருந்து பவானி, மேட்டூர் வழியாக தொப்பூர் வரை உள்ள சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் பணி விரைவில் தொடங்கப்படும்.
மேட்டுப்பாளையம் முதல் பவானி வரை ஏற்கனவே உள்ள இரு மாநில நெடுஞ்சாலைகளை இணைத்து மாவட்ட நெடுஞ்சாலை (15) மற்றும் மாவட்ட நெடுஞ்சாலை (82), சுமார் 98 கி.மீ. நீளத்திற்கு மேம்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 77 கி.மீ. நீளமுள்ள பவானி முதல் கரூர் வரையுள்ள மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் கொள்கையளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சாலையும் விரைவில் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும். ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 67.76 கோடி மதிப்பீட்டில் உயர் சிகிச்சையுடன் கூடிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.
ஈரோடு மாவட்ட மருத்துவமனை மூலம் ரூபாய் 84.50 கோடி மதிப்பீட்டில் 18 பணிகள் நடைபெற்று வருகின்றன. கணக்கம்பாளையம் கிராமத்தில் ரூபாய் 64 கோடி மதிப்பீட்டில் ஏரி அமைக்கும் பணி துவங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 500 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதியும், 1800 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் மறைமுக கிணறுகள் நீர் செறிவூட்டுவதன் மூலம் பயன்பெறும். பவானி வட்டம், ஜம்பைக்கு அருகில் பவானி ஆற்றின் குறுக்கே ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படவுள்ளது. ஈரோடு, ஊராட்சிக் கோட்டையிலிருந்து தண்ணீர் எடுத்து ஈரோடு மாநகராட்சிக்கு வழங்குவதற்கான குடிநீர் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. எஞ்சியுள்ள பணிகளும் மூன்று அல்லது நான்கு மாத காலங்களுக்குள் நிறைவு பெற்று என்னால் துவக்கி வைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்க விரும்புகின்றேன். மேலும், ஈரோடு மக்கள் வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
செல்வத்தில் சிறந்த செல்வம் கல்விச் செல்வம், அழியாச் செல்வம் கல்விச் செல்வம் ஒன்று தான். ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை பாதுகாத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மற்றவர்கள் களவாடி விடுவார்கள். நம் உயிர் இருக்கின்றவரை ஒட்டி இருக்கின்ற ஒரே செல்வம் கல்விச் செல்வம் மட்டும் தான். அப்படிப்பட்ட கல்விச் செல்வத்தை வேளாளர் மகளிர் கல்லூரி உங்களுக்குத் தந்து கொண்டிருக்கின்றது. அதனை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன். பொருள் இருப்பவர்களுக்கு அந்த ஊரில் தான் செல்வாக்கு இருக்கும். ஆனால், கல்வி கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் பெருமை, சிறப்பு இருக்கும். அந்தச் சிறப்பை இந்தக் கல்லூரியின் மூலமாக நீங்கள் பெறவேண்டும்.
நாங்கள் படிக்கின்றபொழுது நடந்தே சென்று பள்ளியிலே படித்தோம். நான் படிக்கின்றபொழுது எங்கள் ஊரிலேயிருந்து ஆற்றைக் கடந்து பவானி வந்து நான் படித்துக் கொண்டிருந்தேன். ஆற்றிலே தண்ணீர் நிறைந்துவிட்டால் பரிசலில் சென்று படிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல. ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இருக்கின்றது. குறித்த காலத்தில் நீங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியும், சிறந்த கல்வியை கற்க முடியும். அதுமட்டுமல்லாமல், இப்பொழுது அரசாங்கம் நிறைய சலுகைகளை கொடுக்கிறது.
யூடியூப், ட்விட்டர், வாட்ஸ்ஆப் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளாகிய நீங்கள் மிகுந்த கவனமாகவும், தன்னம்பிக்கையோடும், படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ வேண்டும். மாணவிகள் உயர்கல்வி படித்து, மென்மேலும் வளர்ந்து உங்கள் பெற்றோர்களுக்கும், தேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தி, பொன்விழா கொண்டாடுகின்ற வேளாளர் கல்வி அறக்கட்டளை சிறந்து விளங்கி, நூற்றாண்டு விழா காணவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.