எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடத்தப்பட்ட மதராசபட்டினம் விருந்து - வாங்க ரசிக்கலாம், ருசிக்கலாம் என்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
நாம் உட்கொள்ளும் உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மதராசபட்டினம் விருந்து - வாங்க ரசிக்கலாம். ருசிக்கலாம் என்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
உணவே மருந்து, மருந்தே உணவு என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் இன்று உணவு என்பது அலங்காரப் பொருளாக மாறி விட்டது. வெவ்வேறு நாட்டின் உணவு வகைகளுக்கும், விதவிதமான சமையல் வகைகளுக்கும், நமது நாக்கு அடிமையாகி விட்டது. ஆனால் நாம் ஆரோக்கியமான வாழ்வு வாழ நமது முன்னோர்கள் உட்கொண்ட ஆரோக்கியமான சத்தான உணவுகளையே, உட்கொள்ள முன் வரவேண்டும்.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல, துய்க்க துவரப் பசித்து என்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். அதாவது முன்னர் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்தபின், நம் தன் உடம்பிற்கு ஏற்ற உணவினை நன்கு அறிந்து, பசியெடுத்த பின்னரே உண்ண வேண்டும். இதை நாம் தவறாது கடைப்பிடித்தால், நோய்கள் நம்மை அண்டாது. இந்தியா முழுவதும் அமலுக்குக் கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்புத் தரங்கள் சட்டம் 2006-ன்படி பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, சத்தான, சுகாதாரமான, செறிவூட்டப்பட்ட, சரிவிகித உணவைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அக்கறையோடு தமிழ்நாடு அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வரும் ஞாயிறு மாலை வரை நடைபெறவிருக்கின்ற ‘மதராசபட்டினம் விருந்து வாங்க ரசிக்கலாம், ருசிக்கலாம்’ என்ற நிகழ்ச்சியை துவக்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இப்பொழுதெல்லாம் இளம் வயதிலேயே மக்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை பெருகி வருவதற்கு முதல் காரணம், நமது உணவுப் பழக்க வழக்கமே. நமது முன்னோர்கள் பாரம்பரிய உணவு வகைகளான சாமை, கேழ்வரகு, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற இதர நவதானியங்களை அன்றாட உணவில் பயன்படுத்தியதனாலும், அதற்கேற்ப உடல் உழைப்பை மூலதனமாக கொண்டு வாழ்ந்ததினால்தான், அன்றைக்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு நோய் போன்றவை அரிதாக காணப்பட்டது.
நமது அன்றாட வாழ்வில் பாரம்பரிய உணவுப் பழக்கத்தோடு உடற்பயிற்சியும் மேற்கொண்டு நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் உடற்பயிற்சி எவ்வாறு உடலுக்கு வலிமையாக்குகிறதோ, அதுபோன்றே மனதை புத்துணர்ச்சியூட்ட யோகா மற்றும் தியான பயிற்சிகள் அவசியமாகிறது. இதனை நமது பாரத பிரதமர் பிட் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
மத்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையரகம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தேச பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் பல திட்டங்களை அறிவித்தது. தமிழ்நாட்டில் நடைபெற்ற இப்பயணத்தில், வழியெங்கும் உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து குறைந்த உப்பு, குறைந்த சர்க்கரை, குறைந்த கொழுப்பு என்ற தாரக மந்திரத்தினை அடிப்படையாக கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அம்மாவின் அரசு எடுத்த சிறந்த நடவடிக்கைகளுக்கு மகுடம் சூட்டும் வகையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை இந்தியாவில் முதல் சிறந்த மாநிலமாகவும், சிறந்த நகரமாக மதுரையும் மற்றும் சிவகாசியும் தேர்வு செய்யப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு உணவு வணிகர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஒருங்கிணைத்து அவர்களது உணவின் சிறப்பை பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தின் முக்கிய அம்சமாக அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு சுவைகளை நமக்கு படைக்க 160 உணவு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுய உதவி குழுக்கள் / அங்கன்வாடி பணியாளர்களின் உணவு அரங்கங்கள் மற்றும் பல்வேறு மாவட்டத்தை சார்ந்த சிறப்பு உணவு அரங்கங்கள் இடம் பெறுகின்றன. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வினாடி வினா, கலந்தாய்வு மற்றும் செய்முறை விளக்கங்கள், முக்கிய பிரமுகர்களின் உரைகள், பட்டிமன்றம் மற்றும் சமையல் வல்லுநர்களின் ஆரோக்கியமான சமையல் செய்முறைகள் குறித்த விளக்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்பெல்லாம் கேப்பைக் களி, வரகரிசி சோறு, கம்பு தோசை, தேன் கலந்த தினைமாவு போன்ற சிறு தானியங்கள்தான் பெருவாரியான நம் மக்களின் உணவாக இருந்தது. வரகு, சாமை, கம்பு, சோளம், தினை, குதிரைவாலி போன்ற தானியங்களைச் சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பு சத்து குறையும். உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும். உடல் நலன் பாதுகாக்கப்படும். எனவே நமது முன்னோர்கள் வழங்கிச் சென்ற உணவு வகைகளை மீண்டும் உட்கொள்ள ஆரம்பித்தால், நாம் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற்று சுகமாக வாழ முடியும். நமது உடல் நலத்திற்காக பின்பற்றப்பட வேண்டிய வாழ்க்கை முறைகள், உண்ண வேண்டிய சத்தான உணவு வகைகள், உடல் ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்குவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு, ஆலோசனைகளைப் பெற்று, ஆரோக்கியமான தமிழ்நாட்டினை சமுதாயத்தினை உருவாக்க வேண்டும்.
அதே வேளையில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப, யார் ஒருவருக்கு நோய் இல்லையோ, அவர் மிகுந்த செல்வந்தராக வாழ முடியும். எவ்வளவு தான் செல்வம் நம்மிடத்திலே இருந்தாலும், சர்க்கரை நோய் வந்து விட்டால், சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களை வேடிக்கை தான் பார்க்க முடியும். உண்ண முடியாது. ஆனால், சர்க்கரை நோய் இல்லாத ஒரு ஏழையாக இருந்தாலும் கூட, சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களை அள்ளி, அள்ளி வயிறு நிரம்ப சாப்பிடலாம். எனவே, தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று பழமொழியில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதேபோல, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவை வருவதற்கு முன்பு நான் சொன்னவற்றையெல்லாம் பின்பற்றினால் இவை வராமல் தடுக்கலாம், வந்து விட்டால் அதை நாம் கட்டுப்பாட்டுக்குள் தான் வைத்திருக்க முடியும். ஆகவே, வராமல் இருப்பதற்கு என்னென்ன வழிமுறைகள் தேவையோ அதை அரங்கிலே ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதே போல, மழைநீர் சேகரிப்பைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், டெங்கு ஒழிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விழைகின்ற மிகப் பிரம்மாண்ட பேரணி துவக்கி வைக்கப்படுகிறது. நாம் மறந்து கைவிட்ட நமது முன்னோர்களின் பாரம்பரிய உணவை நமது அன்றாட வாழ்வில், இனிமேல் தினசரி எடுத்துக் கொண்டு நலமுடன் வாழ உறுதி ஏற்போம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், விஜயபாஸ்கர், சரோஜா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை செயலாளர் மதுமதி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விருந்தின் முக்கிய அம்சமாக அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு சுவைகளை நமக்கு படைக்க 160 உணவு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வினாடி வினா, கலந்தாய்வு மற்றும் செய்முறை விளக்கங்கள், முக்கிய பிரமுகர்களின் உரைகள், பட்டிமன்றம் மற்றும் சமையல் வல்லுநர்களின் ஆரோக்கியமான சமையல் செய்முறைகள் குறித்த விளக்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
பிரதமரின் வழிகாட்டுதலில் தேர்தல் ஆணையம்: மம்தா
15 May 2024புதுடில்லி : பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
16 May 2024 -
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார