எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக, வடகிழக்கு பருவமழை-2019 முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (ம) தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் முனைவர். கே.சத்யகோபால், மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை , தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் உதயகுமார் கூறியதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரின் மேலான ஆணைக்கிணங்க, தமிழகத்தில் மாறி வருகின்ற பருவமாற்றத்திற்கேற்ப பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசால் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் நமக்கு வடகிழக்கு பருவமழைக் காலமாகும். இந்த காலங்களில் நமக்கு கிடைக்கக்கூடிய மழையின் அளவில் 48 சதவிகிதம் மட்டுமே குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இராமநாதபுரத்தில் மழையின் அளவு சராசரியை விட குறைந்து காணப்படுகிறது. எனவே, பற்றாக்குறை மழைப்பொழிவை நாம் எதிர்த்து போராடி வறட்சியை சமாளித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அரசு பேரிடர் மேலாண்மை என்பது மழை வெள்ளம், புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் மட்டுமே வழங்கக்கூடிய நிலையிலிருந்து, தொழில்நுட்ப வளர்ச்சியினால்; பல்வேறு உபகரணங்கள் மற்றும் வழிமுறைகள் மூலம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்த சுற்றறிக்கையின்படி, பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் துரிதமாக அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 நிலைகளில் முன்னேற்பாடுகள் பணிகளானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி பேரிடர் காலத்திற்கு முன், பேரிடரின் போது, பேரிடர் காலத்திற்கு பின் அனைத்து துறைகளின் வாயிலாக நிவாரண மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மாட்டங்களிலும் நான்கு நிலைகளில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிய மிகப் பாதிப்பு, பாதிப்பு, மிதமான பாதிப்பு மற்றும் பாதிப்பு குறைந்த பகுதிகள் என பிரித்து அலுவலர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளுக்கும் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, குழுக்கள் மூலம் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அதனை ஒரு வரைபடத்தினை தயாரித்து அதன் மூலம் பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். அனுபவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் புது, புது யுத்திகள் மக்களின் நல்வாழ்விற்கு பயன்படக் கூடியதாக அமைக்கப்பட்டு வருகிறது.
கஜா புயலின் பாதிப்பின்போது கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை தடுப்பு செய்திகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட போது அதனை பொதுமக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 32 மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டதின் பெயரில் அனைத்து முன்னேற்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் இடம் மாற்றம் செய்யப்பட்டு தங்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொதுக்கள் அதனை மறுத்து விட்டனர். பின்னர் மாண்;புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்க கொண்டு செல்லப்பட்டு, காவல் துறையினர் உதவியுடன் பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர். இரண்டு மணி நேரத்தில் 80,000-ம் பொதுமக்கள் இரவோடு இரவாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட காரணத்தினால் ஒரு மனித உயிரிழப்புக் கூட ஏற்படவில்லை. இது பொதுமக்களுக்கு முழுமையான விழிப்புணர்ச்சி ஏற்படாமல் இருப்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும். வானிலை எச்சரிக்கையினை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வினை அரசு அலுவலர்கள் உரிய வழிமுறையாக ஏற்படுத்த அனைத்து விதத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். சில காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகும்போது வலுவிழக்கவும் செய்யும், வலுப்பெறவும் செய்யும். அவ்வாறு வலுப்பெறும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். முழுமையான பேரிடர் தடுப்பு என்பது ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் இருப்பதே உண்மையான பேரிடர் தடுப்பு மேலாண்மையாக இருக்கும். இழப்பு ஏற்பட்டப்பின் நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாமல் இழப்பே இல்லாமல் இருப்பது தான் உண்மையான பேரிடர் மேலாண்மையாகும். இழப்பே ஏற்பாடமல் தடுப்பது, தனிப்பது, குறைப்பது என்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கூற்றிற்கிணங்க தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்கள்.
அனைத்து பகுதிகளிலும் முதல் நிலை பொறுப்பாளர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக தயார் நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு களப்பணிகளை ஆற்றுவதற்கு உள்ளனர் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டு, அவர்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவது சிறப்பாக உள்ளது. அனைத்து முதல்நிலை அரசு அலுவலர்கள் முதல் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் என அனைவரும் தங்கள் பணிகளை களத்தில் மேற்கொள்வதற்கு அனைத்து விதத்திலும் தங்களை தயார் நிலையிலும், பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலர்கள், பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து வாடும் தருவாயில், அவர்களை சமாதான அடையச் செய்து அவர்களுக்கு இணக்கமாக ஆறுதல் கூறி மனிதாபமானம் அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும்;. இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.கருணாஸ் (திருவாடானை), என்.சதன்பிரபாகர் (பரமக்குடி), எஸ்.சரவணன் (மதுரை தெற்கு), ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.