எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் : கொல்லைப்புற வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் ஸ்டாலின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது என்றும், வரும் 2021-ம் ஆண்டிலும் அ.தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்கும் என்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
உற்சாக வரவேற்பு
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 21-ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் 2 தொகுதிகளிலும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது சூறாவளி பிரச்சாரத்தை துவக்கினார். முதலில் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள முண்டியம்பாக்கத்தில் அவர் பிரச்சாரம் செய்தார். முன்னதாக அவருக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திறந்த வேனில் நின்றபடி அவர் பிரச்சாரம் செய்தார். அவரது அருகில் அமைச்சர் சி.வி. சண்முகம், அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் இருந்தனர். இந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் பேசியதாவது,
திமிராக பேசுகிறார்
1989-ம் ஆண்டில் தனது தந்தையின் செல்வாக்கில் எம்.எல்.ஏ. ஆனவர்தான் மு.க. ஸ்டாலின். ஆனால் ஒரு சாதாரண தொண்டன் எம்.எல்.ஏ.ஆவது என்பது மிக கடினம். எங்களை பற்றி மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். அவ்வாறு விமர்சிக்க அவருக்கு என்ன தகுதி உள்ளது. நாங்கள் தந்தையின் நிழலில் பதவிக்கு வரவில்லை. உழைப்பால் வந்தவர்கள். உழைப்பே இல்லாத ஒருவர் மிகவும் திமிராக பேசுகிறார். உண்மைக்கு புறம்பான செய்திகளை பேசி வருகிறார். இந்த ஆட்சி 10 நாளில் போய் விடும் என்றார். ஆனால் 2 ஆண்டுகளாக மிக சிறப்பாக இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. கொல்லைப்புற வழியாக உங்களால் பதவிக்கு வரவே முடியாது. எங்களுக்கு வெறும் 5 எம்.எல்.ஏ.க்கள் தான் அதிகம் இருப்பதாக சொல்கிறார். 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நான் முதலமைச்சராகி இருக்கிறேன்.
நன்மை எதுவும் இல்லை
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் இந்த இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. ஒரு தொண்டனை கூட அசைத்து பார்க்க முடியாது. எனவே திமிர் பேச்சை ஸ்டாலின் விட வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பிற்காலத்தில் கிடைக்காது. தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது. எதுவும் இல்லை.
வழிகாட்டியாக தமிழகம்
இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் முதலிடம் வகிக்கிறது. 48 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியிருக்கிறோம். இது சாதனை இல்லையா? கல்வியின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கல்வியை மையமாக வைத்துதான் பொருளாதாரம் உயரும். அதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். நான் ஒரு விவசாயி. இந்த பகுதி ஒரு விவசாய பகுதி. விவசாயிகளுக்கு பல நன்மைகளை செய்திருக்கிறோம். நீர் மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாறப்பட்டு வருகின்றன. முதலில் இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கினோம். பிறகு 2019-ல் 500 கோடியில் 1829 ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இத்திட்டத்திற்கு மேலும் நிதி ஒதுக்கப்படும். இந்தியாவுக்கு வழிகாட்டியாக தமிழகம் திகழ்கிறது.
கோதாவரி - காவிரி இணைப்பு
விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நீரை கொடுக்கும் திட்டம்தான் நீர் மேலாண்மை திட்டம். விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டவன் நான். அதனால்தான் பொறியாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். ஒரு சொட்டு நீர் கூட வீணாக கூடாது. கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கிய அரசு அம்மாவின் அரசு. பயிர் காப்பீட்டு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். விவசாயிகள் பயிரிடும் காய், பழங்களுக்கு நியாய விலை கிடைக்க உணவு பூங்கா அமைக்கவிருக்கிறோம். ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய அரசு அம்மாவின் அரசு. அம்மா இருந்த போது வழங்கப்பட்ட அரை பவுன் பிறகு ஒரு பவுனாக உயர்த்தப்பட்டது. நிதியுதவியும் அதிகரிக்கப்பட்டது. இப்படி பல சாதனைகள் செய்திருக்கிறோம்.
பொய்யான வாக்குறுதிகள்
ஆனால் தி.மு.க.வினர் நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டார்கள். முழு பூசணி காயை சோற்றில் மறைத்து ஓட்டு வாங்கியவர்கள் இவர்கள். விவசாயிகளுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் என்றும் வருடத்திற்கு ரூ. 72 ஆயிரம் தருவோம் என்று கூறி ஓட்டு வாங்கியவர்கள். தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசும் போது, அ.தி.மு.க.வில் ஊழல் என்று கூறியுள்ளார். ஆனால் நான் சொல்கிறேன். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். அப்போது தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதெல்லாம் வழக்கு போடப்பட்டது. இவர்கள் எப்படி சம்பாதித்தார்கள். பிறக்கும் போதே டாடா, பிர்லாவாக பிறந்தார்களா. எல்லாமே மக்கள் பணம்தானே. ஊழலில் திளைத்த கட்சி தி.மு.க. தி.மு.க. பிரமுகர்கள் பலரும் கல்லூரி கட்டியிருக்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2012-லும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். எனவே பொய் பேசும் இவர்களுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவர் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் திரண்டு வந்து அவரது பேச்சை ஆர்வமாக கேட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.