எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு காரணமே கருணாநிதியும், ஸ்டாலினும்தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த பிரச்சாரத்தின் போது குற்றம் சாட்டினார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முத்தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே இத்தொகுதியில் 2 நாள் பிரச்சாரம் செய்தார். நேற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் முதல்வர் எடப்பாடி தும்பூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். திறந்த வேனில் நின்றபடி அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,
தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க. ஸ்டாலின் பேசும் போது, நாங்கள் பொய் சொல்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நாங்கள் புள்ளி விவரத்தோடு பேசுகிறோம். அரசின் சாதனைகளை ஆதாரத்தோடு பட்டியலிட்டு பேசி வருகிறேன். அருமையான சாலைகளை அமைத்திருக்கிறோம். உள்கட்டமைப்பு வசதிகள் இங்கு சிறப்பாக உள்ளது. ஆனால் மு.க. ஸ்டாலினோ பச்சைப் பொய்களை அவிழ்த்து விடுகிறார்.
நீட் தேர்வுக்கு தி.மு.க. - காங்கிரசே காரணம்:
நீட் தேர்வை நாங்கள் அறிவித்ததாக சொல்கிறார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் நாங்களோ அதற்கு முழு விலக்கு கேட்டு போராடினோம். தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அது நிலுவையிலும் இருக்கிறது. ஆக, நீட் தேர்வுக்கு எதிராக அத்தனை நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்துள்ளது. ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிதான். இதை ஸ்டாலினால் மறுக்க முடியுமா?
கருணாநிதியும், ஸ்டாலினும் காரணம்
அது மட்டுமல்ல, அம்மா மரணத்தை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று கூசாமல் பொய் சொல்கிறார். மறைந்த முதல்வர் அம்மா மீது பொய் வழக்குகளை போட்டது தி.மு.க.தான். அதனால்தான் அவரது உடல்நலமே பாதிக்கப்பட்டது. அம்மாவை பழிவாங்க பல நடவடிக்கைகளை எடுத்தது தி.மு.க.தான். எனவே அம்மாவை பற்றி பேச தி.மு.க.வுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. ஆடு நனையுதே என்று ஓணாய் அழுத கதையாக உள்ளது. அம்மாவின் இறப்புக்கு காரணமே அன்றைய தி.மு.க. தலைவர் கருணாநிதியும், இன்றைய தி.மு.க. தலைவர் ஸ்டாலினும்தான். நிரபராதி என்று கோர்ட்டில் அறிவிக்கப்பட்ட பிறகும் மேல்முறையீடு செய்தவர்கள் இவர்கள். ஆனால் நாங்கள் அம்மா மரண விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைத்தோம். எனவே ஸ்டாலின் அரசியல் ஆதாயத்துக்காக மக்களை குழப்புகிறார். பொய் பேசுவது தி.மு.க.வுக்கு கைவந்த கலை.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியவர் ஸ்டாலின். 5 சவரனுக்கு கீழே உள்ள அடமான நகைகள் திருப்பி தரப்படும் என்று சொன்னார். அப்படி சொன்னவாறு திருப்பி தந்தாரா? தேர்ந்தெடுக்கப்பட்ட 38 தி.மு.க. எம்.பி.க்களும் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என்கிறார். ஆனால் 26.09.2016 அன்று உள்ளாட்சி தேர்தல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டோம். ஆனால் தி.மு.க. இட ஒதுக்கீட்டை காரணம் காட்டி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடை வாங்கியது. ஆக, உள்ளாட்சி தேர்தல் தாமதமாக நாங்கள் காரணமல்ல.
2019-ம் ஆண்டு இறுதிக்குள்...
2019-ம் ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்பார்கள். இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவே தாமதம் ஏற்பட்டது. மேலும் எல்லாமே சரி செய்யப்பட்டு விட்டது. ஆனால் மு.க. ஸ்டாலின் போகிற இடமெல்லாம் தோல்வி பயத்தில்,தோல்வியின் விளிம்பில் ஏதேதோ பேசுகிறார்.
அ.தி.மு.க ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லையாம். நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏரிகள் அனைத்தும் நிரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சொட்டு நீர் கூட வீணாகாத வகையில் பாடுபட்டு வருகிறோம். ஆனால் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது என்ன செய்தார்? தேர்தல் வரும்போதுதான் அவருக்கு திண்ணை ஞாபகம் வருகிறது. எனவே அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.