முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக குத்துச்சண்டை போட்டி: பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பரிசு - மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ வழங்கினார்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : ரஷ்யாவில் நடைபெற்ற பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரிசுகளை வழங்கினார்.

ரஷ்யாவில் உலன் உடே நகரில் பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் மஞ்சு ராணி வெள்ளிப் பதக்கமும், மேரி கோம், லாவ்லினா மற்றும் ஜமுனா போரா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்  கிரண் ரிஜ்ஜுவை தலைநகர் டெல்லியில் நேற்று சந்தித்தனர். பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி வென்ற மஞ்சு ராணிக்கு 14 லட்சம் ரூபாயும், வெண்கலம் வென்ற மேரி கோம், லாவ்லினா மற்றும் ஜமுனா போரா ஆகியோருக்கு தலா 8 லட்சம் ரூபாயும் பரிசாக அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து