எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கல்வி என்பது மனிதனை சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏ.சி.எஸ். கன்வென்ஷன் மையத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக பல்கலைக் கழகம் சார்பில் முதல்வருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதை, ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகம், நிறுவனத்தின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் ஆகியோர் வழங்கினர். மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவர் எஸ். ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை ஷோபனா ஆகியோருக்கும் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியதற்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் முதல்வர் பழனிசாமி பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
தரமான கல்வி நிறுவனங்கள் மூலம் மனித வள மேம்பாட்டை ஊக்குவித்து, உயர்தரம் வாய்ந்த கல்வியாளர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவதும், பல்கலைக்கழகக் கல்வியில் தமிழ்நாட்டை ஒரு பன்னாட்டு மையமாக உருவாக்குவதுமே எனது அரசின் லட்சியம் என்றார் மறைந்த முதல்வர் அம்மா.
புதிய பாடத்திட்டங்கள்
கல்வி என்பது எழுத்தறிவை மட்டும் கொடுக்காமல், மனிதனை சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த அம்மாவின் அரசு, 12-ம் வகுப்பு வரையில் புதிய பாடத் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கென மிக அதிக அளவில் 28 ஆயிரத்து 957 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளில் 50 சதவீதத்தினருக்கும் மேல் கல்வி, பயில வகை செய்தல் எனது நோக்கமாகும் என்று கூறிய அம்மா, தமிழ்நாட்டில் 65 கல்லூரிகளை துவக்கினார். அம்மாவின் வழியில் வந்த எங்கள் அரசும், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவக்கியுள்ளதுடன், 5 பாலிடெக்னிக் கல்லூரிகளையும் துவக்கியுள்ளது. சமீபத்தில் ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அம்மாவின் அரசால் துவக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல் மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் 6 சட்டக்கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன.
2019-2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்காக 4 ஆயிரத்து 584 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில் நமது மாணவர்கள் பின் தங்கி விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அம்மாவின் மனதில் உதித்த திட்டம் தான் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் 2011-2012 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 6,813 கோடி ரூபாய் செலவில் 48 லட்சத்து 17 ஆயிரத்து 195 மடிக்கணினிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கல்வி தொலைக்காட்சி
கல்விக்கென தனியாக கல்வித் தொலைக்காட்சி ஒன்றினை தமிழ்நாடு அரசு துவக்கி, அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 100 மாணாக்கர்களுக்கு 15 நாட்கள் அயல்நாட்டில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1,350 கூடுதல் மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளன. 1,213 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 6 மாவட்ட தலைநகரங்களில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்க வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு அந்தக் கோரிக்கையினை தற்போது பரிசீலித்து வருகிறது.
ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி படிக்கும் வகையில் கலை அறிவியல் கல்லூரிகள் மட்டுமல்லாது, சட்டக்கல்லூரிகளையும், தொழிற் கல்வி கற்பிக்கும் பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகளையும் அதிக அளவில் திறந்து, எண்ணற்ற சாதனைகளை கல்வித் துறையில் அம்மாவின் அரசு நிகழ்த்தி வருகிறது. இதன் காரணமாகத்தான், உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் சதவீதம் 49 என உயர்ந்து, இந்தியாவிலேயே உயர் கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
பல்கலைக்கழகங்கள் அறிவுலகின் கோயில்கள். பொருளாதாரத் தேவைகளை எதிர்கொள்ளக் கூடிய ஆராய்ச்சி மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்களை, பணியாளர்களை, இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதால்தான், சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான முக்கியமான அமைப்புகளாக பல்கலைக்கழகங்கள் கருதப்படுகின்றது. தற்போது தமிழ்நாடு அரசு, திறன் மேம்பாடு பயிற்சித் திட்டங்களின் மூலம் முக்கிய மனிதவளத் தேவையைப் பூர்த்தி செய்து வருவதால், நாட்டிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாகியுள்ளது. கல்வி என்பது எழுத்தறிவை மட்டும் கொடுக்கக் கூடியதாக இருத்தல் கூடாது. அது மனிதனைச் சிந்திக்க வைக்கக் கூடியதாகவும், புரிந்து கொள்ள வைப்பதாகவும், பொறுமையை வளர்ப்பதாகவும் இருத்தல் வேண்டும் என்றார் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். ஒரு சமூகத்தின் வளர்ச்சி, பொருளாதார பரிணாம வளர்ச்சியுடன் மட்டும் நின்று விடுவதில்லை. உணவு, கல்வி, மருத்துவம், குடியிருப்பு, உடை ஆகியவற்றுக்கு வகை செய்யும் பொருள் வசதி மிக முக்கியமானதுதான். அதே நேரம், வாழ்க்கையை கற்க, மனிதனின் அகம் மேன்மையடைய, இலக்கியம், சிந்தனைகள், நீதிக் கதைகள் ஆகியவை வழியே கிடைக்கும் விவேகம் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்வதும் மிகவும் முக்கியமானது. இது இரண்டையும் ஒருங்கே கற்பவனே ஒரு முழு மனிதன் ஆவான்.
ஏ.சி. சண்முகத்திற்கு பாராட்டு
இங்கே ஏ.சி.சண்முகம் பேசுகின்றபொழுது, இந்தக் கல்லூரியினுடைய சிறப்பை எடுத்துச் சொன்னார். அவர் பெங்களூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலே ஒரு லட்சம் நபர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்த காரணத்தினாலே ஒரு லட்சம் நபர்களை பிழைக்க வைத்த பெருமை ஏ.சி.சண்முகத்தையே சாரும். பணம் இருந்தால் போதாது, மனம் இருக்க வேண்டும். அந்த மனமும், ஈகையும் கொண்டவர் ஏ.சி.சண்முகம். அதுமட்டுமல்ல, அவர் அண்மையிலே வேலூர் நாடாளுமன்றத் தொகுதியிலே போட்டியிடுகின்ற போது, நான் அவரோடு தேர்தல் பிரச்சாரத்திலே ஈடுபட்டிருந்தேன். அப்போது தேர்தல் பிரச்சாரத்திலே ஒன்றை குறிப்பிட்டார், அதாவது, இந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 100 நபர்களுக்கு என்னுடைய கல்லூரியிலே இலவசமாக படிக்க வைப்பேன், அனைத்து செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்வேன் என்று அப்போது சொன்னார். 6 சட்டமன்றத் தொகுதிகள் என்கின்ற பொழுது 600 நபர்களை இலவசமாக படிக்க வைப்பேன் என்று சொன்னால், எந்த அளவுக்கு பெருமைக்குரியது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதற்காக அவரை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டவர்கள் யாரேனும் நோய்வாய்ப்பட்டால் பெங்களூரிலுள்ள மருத்துவமனையில் நான் இலவசமாக அந்த சிகிச்சைக்குரிய முழு செலவையும் அளிப்பேன் என்ற உறுதியையும் கொடுத்தார். ஆகவே, ஒருவர் அரசியலிலே இருப்பது பெரிதல்ல, இருக்கின்ற காலத்திலே என்ன உதவி செய்தார் என்பது தான் பெரிது. அப்படி உதவி செய்கின்ற மனம் ஏ.சி.சண்முகத்திற்கு இருக்கின்றது,
அவர் முயற்சி செய்த காரணத்தினாலே இன்றைக்கு 35,000 மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்திருக்கிறார். ஏறத்தாழ 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறார். இந்த பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் ராணுவத்திற்கு உதவியாக பல்வேறு சாதனங்களை தயாரித்து கொடுத்து, ராணுவத்தில் பயன்படுத்துகின்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை எண்ணி இந்த பல்கலைக்கழகத்தை பாராட்டுகிறேன். உங்கள் ஆராய்ச்சி தொடர வேண்டும், இந்த நாட்டிற்கு உங்களது பங்களிப்பு இருக்க வேண்டும், மென்மேலும் வெற்றியை குவிக்க வேண்டும். இந்த நாடு வளர, உங்களுடைய இல்லம் சிறக்க வாழ்த்தி, பட்டம் பெற்ற அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகின்றேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.