முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய மொபைல் போன் சேவைகளை பதிவு செய்பவர்களுக்கு சீனா கட்டுப்பாடு விதிப்பு

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

ஷாங்காய் : சீனாவில் புதிய மொபைல் போன் சேவைகளைப் பதிவுசெய்யும் மக்கள் தங்களின் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

சீன மக்களில் அதிகமானோர் தங்களின் மொபைல் வழியாகதான் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் புதிய மொபைல் போன் சேவைகளைப் பதிவு செய்யும்  மக்கள் தங்களின் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த  புதிய விதிமுறைகளை சீனா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தியுள்ளது, இது மோசடியைத் தடுக்கும் நோக்கில் இருப்பதாக சீன அரசு கூறி உள்ளது. நாட்டிலுள்ள  லட்சக்கணக்கான  இணையதள பயனாளர்களின் அடையாளங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதற்கு இது அவசியமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த புதிய விதிமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலாகி உள்ளது. இணையத்தில் உலவும் மக்களின்  சட்டப்பூர்வ உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க விரும்புவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக  சீன அரசு தெரிவித்து உள்ளது.

சீனாவில் மக்களை கண்காணிக்க முகத்தை அடையாளங்காணும் தொழில்நுட்பத்தை அந்நாட்டு அரசு ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. பல்பொருள் அங்காடிகள், சுரங்கப்பாதை அமைப்புகள் மற்றும் விமான நிலையங்கள் ஏற்கனவே முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

சீனா டெலிகாம், சீனா யூனிகாம் மற்றும் சீனா மொபைல் ஆகியவை சீன அரசுக்கு சொந்தமான மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகும். புதிய இணையதள சேவை அல்லது புதிய தரவுகளை பதிவிறக்கும் போது  மக்கள் அவர்களின் தேசிய அடையாள அட்டையை வழங்க வேண்டும். அவர்கள் புகைப்படமும் எடுக்கப்படுகிறார்கள். ஆனால், மக்கள் வழங்குகின்ற அடையாள அட்டையோடு, அவர்களது அடையாளங்கள் ஒத்து போகின்றனவா என்பதை பார்க்க அவர்களின் முகம் இப்போது ஸ்கேன் செய்யப்படுகிறது. சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகள், செல்பேசி சேவையை பயன்படுத்துகிறவர்களை கண்டறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து