எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த இடமாக தமிழகம் உயர்வடைய வேண்டும் என்று ஜெயலலிதா நிர்ணயித்த இலக்கை நோக்கி, அரசு பயணித்து வருகிறது என்று பொன்னேரியில் ரூ. 217 கோடியில் அமையவிருக்கும் பாலிமர் தொழிற்பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி முதல்வர் எடப்பாடி பழனி்சாமி பேசினார்.
பொன்னேரியில் ரூ.217 கோடி முதலீட்டில் அமையவிருக்கும் பாலிமர் தொழிற்பூங்காவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழர்கள் பண்டைய காலத்தில் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினர். தமிழ்நாட்டிலுள்ள கயல், கொற்கை, பூம்புகார், வஞ்சி போன்ற பண்டைய துறைமுகங்களின் வழியாக கிரேக்கம், சீனா, ரோமானியம் உள்ளிட்ட நாடுகளில் உள்ளவர்களுடன் தமிழ்நாடு அன்றைய காலக்கட்டத்திலே வாணிகம் செய்தது என்பதை பெருமையுடன் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். பன்னெடுங்காலமாக விவசாயம், தொழிற்சாலைகள், கல்வி, கலாச்சாரம், வணிகம் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பிடம் பெற்று நல் ஆளுமையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது. அமைதி, வளம், வளர்ச்சி என்று அம்மா வகுத்த பாதையில் பயணித்து, சட்டம் ஒழுங்கை செம்மையாகப் பராமரித்து, சமூக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி என அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திருக்கும் இந்தியாவின் ஒரே மாநிலம், தமிழ்நாடுதான்.
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமான தமிழ்நாடு, இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இங்குள்ள நான்கு பெரும் துறைமுகங்கள் மற்றும் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் மூலமாக, உலகெங்கும் ஏற்றுமதி செய்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வரும் இடமும் தமிழ்நாடுதான். உலகெங்கும் உள்ள தொழில் முனைவோரை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்க்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பின்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் நிறுவனங்கள் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ள உறுதியளித்துள்ளன. இவற்றில், 59 நிறுவனங்கள் ஏற்கனவே தமது வணிக உற்பத்தியை துவங்கி விட்டன. மேலும் 219 நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. வணிகம் புரிதலை எளிதாக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள், இணையவழி ஒற்றைச் சாளர முறை, பசுமை வகைப்பாட்டு தொழில் நிறுவனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெறும் வழிவகைகளை எளிதாக்குதல், முதலீடுகளைக் கண்காணித்து விரைவுபடுத்த, தொழில் துறையை ஊக்குவிக்க எனது தலைமையிலான உயர்மட்டக் குழு மூலம் பல நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வந்துள்ளது. எனது தலைமையிலான உயர்மட்ட குழுவினர், அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சென்றதன் பயனாக 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டுள்ளன. இதில் பல திட்டங்கள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தற்போது துவக்கி வைத்துள்ள ஜோஹோ ஹெல்த் நிறுவனம் உறுதியளித்த முதலீட்டை விட 16 மடங்கு அதிக முதலீட்டை மேற்கொண்டுள்ளது. கொரியாவின் ஹெனான் மற்றும் ஜப்பானின் மிட்சுபா சைகால் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளை இங்கு அமைத்துள்ளது தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழிற் சூழலுக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது. தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்கா, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்காவில் 250 ஏக்கர் பரப்பளவில் 217 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிட்கோ மற்றும் சிப்காட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் அமைக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய இப்பூங்கா 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்து சுமார் 7000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அரசின் இதுபோன்ற சிறப்பான முயற்சிகளுக்கு உறுதுணையாக உங்களைப் போன்ற வெளிநாடுகளின் தூதுவர்கள் பலர் ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பை மறக்க முடியாது.
போர்டு, ஹுண்டாய், யமஹா போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுவதற்கும், புதிய பல முதலீடுகளை தமிழகத்தில் செய்வதற்கும், இங்குள்ள வெளிநாடுகளின் தூதரகங்கள் சிறப்பான வழிகாட்டுதல்களையும், பெரும் பங்களிப்பையும் வழங்கி வருகின்றன. ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் தமிழ்நாடு அரசு கூட்டுப்பணி குழுக்களை ஏற்படுத்தியுள்ளது. இக்குழு, குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி, அந்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைந்து வருகிறது. பிரான்ஸ், அமெரிக்கா, கொரியா, ஆகிய நாடுகளின் தூதரகங்களும் தொழில் துறையுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றன. உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வந்திருக்கும் நீங்கள், தமிழ்நாட்டிற்கும் உங்கள் நாட்டிற்கும் நல்லதொரு இணைப்புப் பாலமாக திகழ வேண்டும். தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, உங்கள் நாட்டின் அரசு நிறுவனங்களும், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு நீங்கள் உதவிகரமாக இருக்க வேண்டும். சூழல் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் நம் நாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை வரவேற்க ‘‘யாதும் ஊரே” என்ற திட்டத்தை நியூயார்க் நகரில் நான் துவக்கி வைத்துள்ளேன். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மின்சார வாகனப் பூங்கா, வானூர்தி தொழில் பூங்கா, நிதி சேவைகளுக்கான நகரம், பாலிமர் பூங்கா, உணவுப் பூங்கா என முதலீடுக்குப் பல வாய்ப்புகள் இங்கு உள்ளன. ஆழ்கடல் மீன்பிடி திட்டங்கள் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்கியுள்ளது. தகவல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறையிலும் அம்மாவின் அரசு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் Saas Capital of India என்று கூறும் அளவிற்கு பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையில் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய நிறுவனங்களும் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன. இதற்குக் காரணம், தமிழ்நாடு ஒரு அமைதியான மாநிலமாகவும், நவீன தொழில்நுட்பத் தேவைகளை நிறைவேற்றுகின்ற அளவிற்கு மனிதவள ஆற்றல் கொண்ட மாநிலமாகவும் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை முடித்து விட்டு, திறமை மிக்க பொறியாளர்களாக வெளி வருகின்றனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அடுத்த கட்டமாக தொழில் பெருந்தடத் திட்டங்கள் அமையும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சியில் நவீன உலக சூழலுக்கு ஏற்ப, அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற்றும் சூழலை இத்திட்டங்கள் உருவாக்கும். சென்னை – பெங்களூர் தொழில் பெருந்தட திட்ட செயலாக்கத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக தேசிய தொழில் பெருந்தட மேம்பாட்டுக் கழகத்திற்கும், தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியை கொண்டுள்ள இந்தியாவின் வளர்ச்சி, உலகத்தை புதிய யுகத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு பெரும் பங்கினை வகித்து வருகிறது. எனவேதான், ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த இடமாக தமிழகம் உயர்வடைய வேண்டும் என்று அம்மா நிர்ணயித்த இலக்கை நோக்கி, அரசு பயணித்து வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் க. சண்முகம், இந்திய வெளியுறவுத் துறையின் செயலாளர் திருமூர்த்தி, இந்திய வெளியுறவுத் துறையின் கூடுதல் செயலாளர் ஹரிஷ்,தேசிய தொழில் பெருந்தடத் திட்ட மேம்பாடு மற்றும் செயலாக்கக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சஞ்சய் மூர்த்தி, தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், கைடென்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நீரஜ் மித்தல், டிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, இந்திய வெளியுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், தொழில் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்