முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 18-ம் தேதி வரை நீட்டிப்பு

புதன்கிழமை, 6 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

காத்மாண்டு : நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு வரும் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் கொரோனா வைரசால் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இன்றுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், நேற்று பிரதமரின் இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவை வரும் 18-ம் தேதி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உயர்மட்டக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது 2 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்த வாரம் மட்டும் 23 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதும் இல்லை.கடந்த ஆறு வாரங்களாக ஊரடங்கை பயன்படுத்த அரசாங்கம் தவறி விட்டது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து