எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : 3000 ஆண்டுகளுக்கு முன்பு யுகி சித்தரால் உருவாக்கப்பட்ட கபசுர குடிநீரை தீர்க்க தரிசனமாக மக்களுக்கு வழங்கி, வாழும் தன்வந்திரியாக முதல்வர் திகழ்ந்து வருகிறார் என்று அனைத்து தரப்பு மக்களும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த நான்கு மாதங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த கொடிய வைரஸ் நோயால் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இதில் 5 லட்சம் மேற்ப்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் நோயை குணப்படுத்தும் மருந்தினை கண்டுபிடிக்க சீனாவில் 49 முறை ஆய்வும், அமெரிக்காவில் 50 முறை ஆய்வும், பிரிட்டனில் 10முறை ஆய்வும், ஜெர்மனியில்13 முறை ஆய்வும் தொடர்ந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யுகி என்ற சித்தர், மனிதருக்கு வரும் 64 வகையான காய்ச்சலுக்கு அப்பொழுது இதற்குரிய சித்த மருத்துவத்தை கண்டுபிடித்துள்ளார். அதில் ஒன்றுதான் இந்த கபசுரக் குடிநீர் ஆகும்.
இந்தக் கபசுர குடிநீரில் சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறிவேர், அக்காரம், முள்ளிவேர், கடுக்காய்தோல், ஆடாதொடாஇலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்டத்திருப்பிவேர், கோரைக்கிழங்கு என 15 வகை மூலிகைகளை 35 கிராம் எடுத்து முறைப்படி எடுத்து சுத்தம் செய்து இடித்து இதை பொடி செய்துள்ளனர். இதுமட்டுமல்ல நிமோனியா, பன்றிக்காய்ச்சலுக்கு கூட இந்தக் கபசுர குடிநீர் சிறந்த மருத்துவமாக திரும்புகிறது. இந்த மருந்து இருமல், சளி, சுவாசப்பாதை ஆகியவற்றில் உள்ள தொற்றுநோயை எளிதில் குணப்படுத்தி விடும். இந்த மருந்தைப் பற்றி சிந்தாமணியில் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த மனித குலத்தைக் காக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்த இந்த கபசுரக் குடிநீரை முதல்வர் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் மாநில அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர், மருத்துவத் துறையினர், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி துறையினர், பொதுப்பணித்துறையினர் என்று அனைத்து அரசு தரப்பினருக்கும் மேலும் நகர மற்றும் கிராம பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று கபசுர குடிநீரை வழங்கி வருகிறார்.
இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:
மனித இனத்தை அழிக்கும் இந்த கொடிய வைரஸ் நோயிலிருந்து மக்களை காக்கும் வண்ணம் நமது முதல்வர் போர்க்கால அடிப்படையில் இரவு பகல் பாராது தொடர்ந்து மக்களுக்காக உழைத்து வருகிறார். ஜனவரி மாதமே இந்த நோயின் தாக்கத்தை முன்கூட்டியே நமது முதல்வர் தீர்க்கதரிசனமாக அறிந்து பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இன்றைக்கு தமிழகத்தில் இறப்பு சதவீதம் மிகவும் குறைவுதான். அதுமட்டுமல்லாது மக்களுக்கு இந்த நோயிலிருந்து விடுபடவும் நோய் எதிர்ப்பு சக்தி அறிவிக்கவும் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி இந்த கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தினை முதல்வர் தனது பொற்கரங்களால் தொடங்கி வைத்தார் அதுமட்டுமல்லாது மத்திய அரசின் ஆயுஷ் என்ற அமைச்சகமும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழிகாட்டுதல் படி அம்மா பேரவை சார்பில் கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 35 லட்சம் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் அனைவருக்கும் இதை வழங்குவதுதான் நோக்கமாகும். இதுவரை 5 லட்சம் குடும்பங்களுக்கு இந்தக் கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
மக்களும் இதை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். மேலும் மக்களாகிய நீங்கள் இந்த கபசுர குடிநீர் பருகுவது மட்டும்மட்டுமல்லாது முதல்வர் அறிவுரையான முககவசம்அணிய வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் இது நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால் இந்த தொற்று நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
இது குறித்து பெண் காவலர் ஒருவர் கூறுகையில், இன்றைக்கு நாட்டையே அச்சுறுத்தும் இந்த கொடிய வைரஸ் நோயிலிருந்து மக்களைக் காக்கும் புனித பணியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரை எங்கள் காவல்துறையினர் எல்லாம் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் குடும்பத்தை மறந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
இதுபோன்ற நேரங்களில் இந்த நோயில் இருந்து எங்களை காப்பாற்ற பல்வேறு அறிவுரைகளை முதல்வரும், காவல்துறை உயர் அதிகாரி எங்களுக்கு வழங்கி வருகின்றனர். தற்பொழுது பணியிலிருக்கும் எங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கபசுர குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. தற்பொழுது இதை நான் தொடர்ந்து அருந்துவது மட்டுமல்லாது என் குடும்பத்தினர் அருந்துகின்றனர். இதன் மூலம் எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு உள்ளது. எங்கள் நலனில் அக்கறை கொண்டு இதை வழங்கிய முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
தூய்மைப் பணியாளர் பேச்சி கூறுகையில், கடந்த நான்கு மாதங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறோம் எங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பல்வேறு மருந்துகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் தினந்தோறும் மூன்று வேளை அருந்துகிறோம். இதன் மூலம் தொற்றுநோயிலிருந்து நாங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறோம். இதனை வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
ராமு என்பவர் கூறுகையில், மிகவும் பழமை வாய்ந்த சித்த மருத்துவம் என்று கூறப்பட்டு வருகிறது. பொதுவாக வீட்டில் நலம் இல்லை என்றால் தன்வந்திரி ஹோமம் வீட்டில் செய்வார்கள். அதுபோல இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் மக்களை காக்கும் வண்ணம் இதுபோன்ற மருந்துகளை வழங்கி வரும் நமது முதல்வர் தன்வந்திரியின் மறு உருவம் என்று கூறினார்.
பாண்டிஸ்வரி என்பவர் கூறியதாவது; எங்களைப் போன்ற 60 வயதை கடந்தவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் அவசியம். தற்பொழுது இந்த நோயிலிருந்து எங்களைப் பாதுகாத்திட முதல்வர் ஆணைப்படி அமைச்சர் உதயகுமார் எங்களுக்கு வழங்கியுள்ளார். நாங்கள் தினந்தோறும் இதை அருந்துகிறோம். இதன் மூலம் நான் ஆரோக்கியமாக உள்ளேன். இதை வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
காங். சார்பில் லால் ஷர்மா போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி
03 May 2024லக்னோ : கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.