எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர் வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
2003-ம் ஆண்டு அம்மாவின் தலைமையிலான அரசால் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித் தடம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித் தடம் என இரு வழித்தடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
18,380 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்துவதற்கு தேவையான மாநில அரசின் நிலங்கள் மற்றும் நிதி பங்களிப்பினை வழங்கிய பெருமை அம்மாவையே சாரும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செம்மையாக செயல்படுத்துவதற்காக, தொடர் ஆய்வுகளை நடத்தி, கீழ்க்கண்டவாறு பணிகளையும், பயணிகள் சேவைகளையும் அம்மா துவக்கி வைத்துள்ளார்.
29.6.2015 அன்று, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் பயணிகள் சேவை துவக்கப்பட்டு, கோயம்பேடு பணிமனையுடன், கோயம்பேடு, சென்னை புறநகர் பேருந்து நிலையம் (CMBT), அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.
23.7.2016 அன்று வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான 3770 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 9.05 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்ட நீட்டிப்புத் திட்டத்திற்கான பணிகள் துவக்கப்பட்டன.
21.9.2016 அன்று சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான 8.6 கிலோ மீட்டர் நீளத்திலான வழித்தட பகுதி மற்றும் ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையில் 1.2 கிலோ மீட்டர் நீளத்திலான வழித்தடப் பகுதிகளில் பயணிகள் சேவை துவக்கப்பட்டு, சென்னை விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலை ஆகிய 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.
சென்னை பெருநகர் பகுதியில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு 54 கி.மீ நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-I மற்றும் கட்டம்-Iன் நீட்டிப்பு வழித்தடங்கள் போதாது என்பதால், கட்டம்-II க்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு செப்டம்பர் 2014-ல் ஆணைகள் வழங்கப்பட்டன.
அம்மாவை தொடர்ந்து அம்மாவின் அரசும், 14.5.2017 அன்று கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான 7.4 கிலோ மீட்டர் நீளத்திலான முதல் சுரங்க வழித்தடப் பகுதியில் பயணிகள் சேவை துவக்கப்பட்டு, திருமங்கலம், அண்ணாநகர் கோபுரம், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மற்றும் நேரு பூங்கா ஆகிய 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.
25.5.2018 அன்று, நேரு பூங்கா முதல் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான 2.5 கிலோ மீட்டர் நீளத்திலான சுரங்க வழித்தடத்திலும், சின்னமலை முதல் ஏ.ஜி.-டி.எம்.எஸ் வரையிலான 4.35 கிலோ மீட்டர் நீளத்திலான சுரங்க வழித்தடத்திலும் பயணிகள் சேவை துவக்கப்பட்டு, எழும்பூர் மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ, சைதாப்பேட்டை மெட்ரோ, நந்தனம், தேனாம்பேட்டை மற்றும் ஏ.ஜி.-டி.எம்.எஸ் ஆகிய 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.
10.2.2019 அன்று திருப்பூரில் நடைபெற்ற விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் காணொலிக் காட்சி மூலம் ஏ.ஜி.-டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான 10.9 கிலோ மீட்டர் நீளத்திலான சுரங்க வழித்தடத்தில் பயணிகள் சேவை துவக்கப்பட்டு, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி, அரசினர் தோட்டம், சென்ட்ரல் மெட்ரோ, உயர்நீதிமன்றம், மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.
கட்டம்-IIல் மாதவரம் முதல் சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மொத்தம் 118.9 கி.மீ நீளத்திலான மூன்று வழித்தடங்கள் மற்றும் 128 மெட்ரோ நிலையங்களுடன் 61,843 கோடி ரூபாய் செலவு மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி பங்களிப்பு கோரப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - கட்டம்-I-ன் கீழ், ஆலந்தூர் மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ மற்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. மேற்கண்ட மெட்ரோ நிலையங்களின் பெயர்களை நமது மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மற்றும் டாக்டர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் மாற்றி அமைக்கலாம் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஏற்று, சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப் போல், ஆலந்தூர் மெட்ரோ – Alandur Metro என்பது அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ - Alandur Metro என்றும்,
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் வைத்ததைப் போல சென்ட்ரல் மெட்ரோ - Central Metro என்பது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ - “Puratchi Thalaivar Dr.M.G.Ramachandran Central Metro என்றும், அம்மாவின் ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர் பேருந்து நிலையத்தையும், அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும் திறந்து வைத்ததாலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும் வகையில், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ (CMBT Metro) என்பது புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ Puratchi Thalaivi Dr.J.Jayalalithaa CMBT Metro என்றும் பெயர் மாற்றங்கள் செய்து நான் ஆணையிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
விசாரணைக்கு ஆஜராகுவதில் பாபா ராம்தேவுக்கு விலக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 Apr 2024புதுடெல்லி : விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து பாபா ராம்தேவுக்கு விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.