எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் தொடர்ந்து
உழைத்துக்கொண்டே இருப்பேன் என்று சுதந்திர தினவிழாவில் முதல்வர் எடப்பாடி தெரிவித்தார். மேலும் சுதந்திரத்துக்காக தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். அதன்படி தியாகிகளின் ஓய்வூதியம் 16 ஆயிரம் ரூபாயிலிருந்து 17 ஆயிரமாக உயரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
கொடி ஏற்றிய முதல்வர்:-
சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடி ஏற்றினார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் பெருமக்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய முதல்வர் அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது,
தமிழர்களின் நாகரீக தொன்மையை உலகுக்கு பறைசாற்றும் கீழடியில் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலகத் தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் அமைக்கும் பணிக்கு நான் சமீபத்தில் அடிக்கல் நாட்டியுள்ளேன். அப்பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
5 புதிய மாவட்டங்கள் உதயம் :-
தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 புதிய மாவட்டங்களை ஒரே ஆண்டில் தொடங்கிய பெருமை அம்மாவின் அரசையே சாரும். நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து புதிய மயிலாடுதுறை மாவட்டம் துவங்க பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன என்பதையும் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
100 யூனிட் இலவச மின்சாரம் :-
அம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்கும்போது இருண்டு கிடந்த தமிழ்நாட்டை, தனது அயராத முயற்சியினால் பல்வேறு திட்டங்களை தீட்டி, அவற்றை நிறைவேற்றியதன் காரணமாக, இன்று தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
அம்மா அவர்கள், 2016-ல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், ஒவ்வொரு வீட்டு மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க ஆணையிட்டார்கள். இதன்மூலம் சுமார் 2.1 கோடி குடும்பங்களுக்கு மேல் பயன்பெற்று வருகின்றனர்.
குறிப்பாக, 100 யூனிட்டிற்குள் மின் நுகர்வு செய்யும் சுமார் 70 லட்சம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு இன்று வரை தொடர்ந்து விலையில்லா மின்சாரமே வழங்கப்பட்டு வருகிறது. இச்சலுகையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு கடந்த 4 வருடங்களாக 11,512 கோடி ரூபாய் மானியமாக வழங்கி உள்ளது.
குடிசையில்லா தமிழ்நாட்டினை உருவாக்க, கடந்த 9 ஆண்டுகளில், சுமார் 2 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் 7,540 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 11 நகரங்களில், 10,451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் பலகட்ட முன்னேற்ற நிலையில் உள்ளன.
ஒரு நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டுமானால், அதற்கு முக்கியமாக விளங்குவது காவல் துறையின் பணியாகும். குற்றங்கள், களவுகள் மற்றும் விபத்துகள் குறைந்து, சமூக விரோதிகளை சட்டத்தின் பிடியில் நிறுத்தி, பாதுகாப்பான அமைதியான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு :-
கடந்த ஆண்டுகளில் இரண்டு முறை நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாகவும், நான் கடந்த ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு நேரடியாகச் சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்ததன் வாயிலாகவும், தொடர்ந்து தமிழ்நாடு புதிய முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
இம்முயற்சிகளால், கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு 54 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான 107 திட்டங்கள் வந்துள்ளன. இதன் மூலம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 849 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை கொரோனா பாதிப்பிலிருந்து மீட்டெடுத்து, மறுகட்டமைப்பு செய்ய புகழ்பெற்ற வல்லுநரும், நமது முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருமான முனைவர். ரங்கராஜன் அவர்கள் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவையும் அம்மாவின் அரசு அமைத்துள்ளது.
அம்மா அவர்களின் அரசு முனைந்து எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக, மும்பையைச் சேர்ந்த, ப்ராஜெக்ட்ஸ் டுடே என்ற நிறுவனம், கோவிட் காலத்திலும், அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் புதிய முதலீடுகளை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளதால், தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தினைப் பிடித்துள்ளது என்று தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் மட்டும், இதுவரை மொத்தம் 41 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தொழில் நிறுவனங்களுடன் கையெழுத்தாகியுள்ளது.
இதன் மூலம் 30ஆயிரத்து 664 கோடி ரூபாய் முதலீடும், 67 ஆயிரத்து 212 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பெருமளவிலுள்ள தொழில்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய, இதுவரை 7,043 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டு, தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது.
எனவே, தமிழ்நாடு பொருளாதாரத்தில் தனது இயல்பு நிலையை வெகு விரைவில் அடைந்து, தொடர்ந்து முன்னிலையில் இருக்கும்.
“அம்மா வழியில் ஆட்சி, அனைத்து துறைகளிலும் வளர்ச்சி” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்த அரசு பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து, ஒவ்வொரு துறையிலும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வளர்ச்சிப் பாதையில் பீடு நடைபோட்டு வருகிறது.
ஓய்வு ஊதியம் உயர்வு:-
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களது இன்னுயிரை ஈந்த தியாக செம்மல்களை சிறப்பிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 16,000 ரூபாயிலிருந்து 17,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஊதியம் 8,000 ரூபாயிலிருந்து 8,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் முழு ஆரோக்கியத்துடனும், நலமும், மகிழ்ச்சியும் நிறைந்து வாழ்வதற்காக பொருளாதார, சமூக, சட்ட ரீதியாக உங்களின் அரசு, துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது மக்களுக்கான அரசாக, மக்களுடன் என்றென்றும் இணைந்திருக்கும் என்பது உறுதி. உங்களின் அன்பையும், ஆதரவினையும் பெற்றுள்ள நான், தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, அல்லும் பகலும் உங்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று இந்த நன்னாளில் நான் மீண்டும் உறுதிபட கூறுகிறேன்.
இன்று கொரோனா வைரஸ் தொற்றினால் உலக மக்கள் அனைவரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றின் பிடியிலிருந்து அனைவரும் விரைவில் மீண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இந்நந்நாளில் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது சுதந்திர தின நல் வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன் இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 10 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 6 hours ago |
ஆனியன்ப்ரை6 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 97.75 சதவீதம் பேர் தேர்ச்சி
14 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் 25-ந் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்தது.
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
கென்யாவில் வெள்ளம்: 40 டன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா
14 May 2024புதுடெல்லி : கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு 40 டன் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மீட்பு உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவ
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
14 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டத்தின் விளைவாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண