முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடியை சந்தித்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். 

கடந்த 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் மட்டும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், தியேட்டர் அதிபர்கள், ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பல கோடி வருவாய் முடங்கியுள்ளது. இந்நிலையில் தியேட்டர் அதிபர்கள், அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து பேசினர்.

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் வரும் 22-ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படும் என கூறப்படுகிறது ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து