எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மதுரை மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
கொரோனா தடுப்பூசி போடும் பணி இந்தியா முழுவதும் வருகிற 16-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் கோவேக்சின் தடுப்பூசியும் அடுத்தகட்டமாக பயன்பாட்டுக்கு வர உள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக கோவிஷீல்டு தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள், மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் என 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை ஏற்கனவே ஆந்திரா, பஞ்சாப், அசாம், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் முதலில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை ஒரே நேரத்தில் நடத்தி பார்க்கப்பட்டது. அதன் பிறகு 2-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை 226 இடங்களில் நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், இட வசதிகள் ஆகியவை எவ்வாறு உள்ளன என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேர்தல் சமயத்தில் கியூவில் வந்து முறைப்படி பதிவு செய்து ஓட்டு போடுவதுபோல் தடுப்பூசி போட வருபவர்களுக்கும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
சென்னையில் தடுப்பூசி போடும் பணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் வந்து பார்வையிட்டார். சென்னை மற்றும் செங்கல்பட்டில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கும் சென்று கொரோனா தடுப்பூசிக்கான ஆயத்த பணிகளை ஆய்வு செய்தார். சென்னை பெரிய மேட்டில் உள்ள மத்திய அரசு மருந்து சேமிப்பு கிடங்கையும் பார்வையிட்டார்.
இந்த நிலையில் தடுப்பூசி ஒத்திகையில் கிடைத்த அனுபவங்களை ஒவ்வொரு மாநில அரசும் மத்திய சுகாதாரத்துறைக்கு விரிவாக அறிக்கை அளித்து இருந்தது. தற்போது இந்த ஒத்திகையில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் வருகிற 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போட தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை ‘கோ-வின்’ இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவாமல் இருப்பது குறித்தும், தடுப்பூசிகளின் தயார் நிலை குறித்தும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் உயர் மட்ட குழுவினருடன் ஆய்வு செய்தார். அப்போது தடுப்பூசி போடுவதற்கு செய்யப்பட்டு இருந்த ஏற்பாடுகளை அதிகாரிகள் விளக்கி கூறினர். ஒரே சமயத்தில் நாடு முழுவதும் இதற்காக நடத்தி முடிக்கப்பட்ட ஒத்திகை திருப்தியாக இருப்பதாக அதிகாரிகள் எடுத்துரைத்தனர். சுகாதாரத்துறையின் இந்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து இருந்தார்.
தற்போது நாடு முழுவதும் பண்டிகை காலமாக உள்ளது. வடநாட்டில் மகா சங்கராந்தி, பொங்கல் பண்டிகை, லோரி, மாக்பிகு ஆகிய பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் வருகிற 16-ம் தேதி முதல் தடுப்பூசியை தொடங்குவது என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடியும் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து டுவிட்டரில் பதிவு வெளியிட்டு இருந்தார். அதில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மைல்கல் நடவடிக்கை ஒன்றை வருகிற 16-ம் தேதி இந்தியா மேற்கொள்கிறது. நாடுமுழுவதும் அன்றைய தினம் தடுப்பூசி திட்டம் தொடங்கப்படுகிறது. இதில் துணிச்சல் மிகுந்த டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறி இருந்தார்.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்குவது தொடர்பாக இன்று மாலை மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற விவரங்கள் எடுத்துரைக்கப்படும்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை தமிழகத்தில் 226 இடங்களில் நடந்து முடிந்தது. இந்த ஒத்திகையில் மத்திய அரசின் சுகாதாரத்துறை முழு திருப்தியை கொண்டுள்ளது. தமிழக மருந்து சேவை கழகம் மூலம் ஏற்கனவே 33 லட்சம் சிருஞ்சுகள், ஊசிகள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக கொரோனா தடுப்பு மருந்து விமானம் மூலம் எப்போது வரும் என்ற தகவலை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். இந்த மருந்து வந்ததும் சென்னையில் உள்ள மத்திய அரசின் மருந்து சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படும். பின்னர் அதை உடனுக்குடன் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்ப ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
இரண்டரை கோடி தடுப்பூசிகளை சேமித்து வைக்கக்கூடிய அளவுக்கு நம்மிடம் வசதிகள் உள்ளன. 2-ம் கட்டமாக மாவட்ட அளவில் 2,880 இடங்களிலும் சேமித்து வைப்பதற்கு குளிர்சாதன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு கடை கோடி கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லக்கூடிய சிறிய கூலர் பெட்டிகளும் தயார் நிலையில் உள்ளது.
தடுப்பூசி போடுவதற்கு 46 ஆயிரம் இடங்களை கண்டறிந்த போதிலும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தான் இந்த மருந்தை செலுத்த இருக்கிறோம். எனவே ஒரே சமயத்தில் அத்தனை இடங்களிலும் தடுப்பூசி போடப்படாது. இதுவரை 226 இடங்களில் தடுப்பூசிக்கான ஒத்திகை முடிந்துள்ளது.
தமிழகத்தில் 300 முதல் 500 இடங்களில் தடுப்பூசியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏற்கனவே தடுப்பூசி போடுவதற்கு 6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் யார்-யார்? முன் வருகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் தடுப்பூசி போடப்படும். யாருக்கும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடப்பட மாட்டாது.
இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் தான் போலியோ சொட்டு மருந்து முகாமை தேதி குறிப்பிடாமல் மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. பிரதமர் மோடி இன்று மாநில முதல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தியதற்கு பிறகு கொரோனா தடுப்பூசிக்கான மேலும் பல வழிமுறைகள் வெளியிடப்படும்.
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் அவர் மதுரையில் இருப்பதால் அங்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வரும் 16-ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்து பார்வையிடுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.