எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியின் அனைத்து பெட்ரோல் நிலையங்கள் முன்பும் திரண்டுவந்த காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக 10 நாட்களுக்குத் தொடர்ந்து, கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரியில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் கண்டித்து, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்க் முன்பும் கையெழுத்து இயக்கம் 7-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுச்சேரி முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு இன்று (ஜூலை 7) காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி சைக்கிள் ஓட்டிவந்து பங்கேற்று தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியம், மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து பெட்ரோல் பங்க்கில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி பொதுமக்களிடம், மத்திய அரசுக்கு எதிராகக் கையெழுத்து பெற்றனர்.
பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து விண்ணைத் தொட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.35, டீசல் விலை ரூ.93. சமையல் எரிவாயு விலை ரூ.850 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.65, டீசல் விலை ரூ.53, சமையல் எரிவாயு ரூ.350க்கு கொடுக்கப்பட்டது. அப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 130 டாலர் இருந்தது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் உலக சந்தையில் 70 டாலராக உள்ளது.
ஆனாலும், மோடி தலைமையிலான அரசில் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தாண்டிவிட்டது. தேர்தல் சமயத்தில் சதம் அடிக்கும் என்று நாங்கள் கூறினோம். அது தற்போது நடந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியின்போது 17 பைசா பெட்ரோல் கட்டணம் உயர்ந்தபோது, கண்டனம் தெரிவித்து பாஜக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போராட்டம் நடத்தினார்.
ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் கடந்த 6 மாதத்தில் 93 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 16 முறை விலை உயர்வு நடைபெற்றுள்ளது. கரோனா காலத்தில் கடைகள் மூடல், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள இந்நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிகப்பெரிய அளவில் மக்களை பாதித்துள்ளது. இல்லத்தரசிகளையும் பாதித்துள்ளது.
இந்த விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை தொடர் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மோடி தலைமையிலான மத்திய அரசைக் குறை கூறுகின்றனர். மத்திய அரசு தவறான கொள்கையில் இருக்கின்றனர் என்கின்றனர்.
எனவே மோடி அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர் போராட்டமாக இருக்கும். தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல், டீசல், சமையல் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.
தற்போது, பெட்ரோல் விலை உயர்வுக்கு அவர் என்ன பதில் கூறுவார் எனத் தெரியவில்லை. புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர்களில் யாருக்கு எந்த இலாகா என்பது தெரியாமல் உள்ளனர். அலுவலகம் வந்து கண்ணைக் கட்டிவிட்டது போல் அமர்ந்திருக்கின்றனர். பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நம்பிக்கை கிடையாது. இலாகாவை ஒரே நாளில் பிரித்துக்கொடுக்கலாம்.
பாஜக முக்கிய இலாகாவைக் கேட்பதால் காலதாமதம் ஏற்படுவதாக கூறுகின்றனர். அது அவர்களின் உட்கட்சி விவகாரம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. ஒரு பக்கம் ஆளுநர் ஆளுகிறார். முதல்வர் அலுவலகம் வந்து செல்கிறார். அவரால் ஒன்றும் செய்ய முடியுவில்லை.
கரோனா நிவாரணம் ரூ.3,000 அறிவிக்கப்பட்டு, ரூ.1,500க்கு மேல் கொடுக்க முடியவில்லை. நிதிப் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், புதுச்சேரியில் ஒரு பணியும் நடைபெறவில்லை. எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், அமைச்சர்கள் சட்டப்பேரவைக்கு வந்து உட்கார்ந்துவிட்டுச் செல்வது மட்டுமே நடக்கிறது.
அமைச்சரவை அமைத்து 2 மாதங்கள் ஆகும் நிலையில் இலாகாக்கள் பிரிக்காதது கூட்டணிக்கே மிகப்பெரிய அவப்பெயர். ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய கேள்விக்குறி. ஆகவே, உடனே அமைச்சர்களுக்கு இலாகாக்களை அறிவித்து போர்க்கால அடிப்படையில் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.’’
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.