முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பீகார் முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா: சுற்று சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பீகார் முதல்வர் மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டியுள்ளார்.

நாடு முழுவதும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ரக்சா பந்தன் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.  இதனை முன்னிட்டு பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் சகோதரர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டி ஆசிகளை பெறுவர்.

நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களும் இதனை சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சுற்று சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டினார்.  இதுபற்றி அவர் கூறும்போது, கடந்த 2012-ம் ஆண்டு முதல் ரக்சா பந்தன் தினம் ஆனது விருட்ச ரக்சா திவாஸ் (மரம் பாதுகாப்பு தினம்) ஆக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  மக்களை பாதுகாப்பது போன்று பொதுமக்கள் மரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து