எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கோதாவரி-காவிரி இணைப்பு திட்ட அறிக்கைக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று ஆந்திரா-தெலுங்கானா அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும், காவிரி, கோதாவரியை இணைத்தால் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வரை தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு நதிகள் இணைப்பு திட்டத்தில் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அமைத்துள்ள சிறப்பு குழுவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு கோதாவரி (ஈச்சம்பள்ளி, ஜனம்பேட்டை-காவிரி (கல்லணை) ) இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அனுப்பி வைத்தது. அதன் மீதான கருத்துக்களையும் கேட்டது.
தமிழ்நாடு நீர் பற்றாக்குறை மாநிலமாக உள்ளதால் கூடுதல் நீரை வழங்கவும் ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில் இருந்து இணைப்பு கால்வாய் உயர்மட்டத்தில் அமைக்கப்பட்டு காவிரியில் கல்லணைக்கு பதிலாக கட்டளை கதவணையில் சேரும் வகையில் இணைக்கப்பட்டால் மிக தேவை உள்ள இடங்களுக்கு தண்ணீரை வழங்கவும், காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாயில் தண்ணீரை எடுத்து செல்லவும் ஏதுவாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசு கோதாவரி- கிருஷ்ணா, பெண்ணாறு-காவிரி இணைப்பின் விரிவான திட்ட அறிக்கையை மீதான கருத்துக்களை ஏற்கனவே தேசிய நீர் மேம்பாட்டு முகமை தலைமை இயக்குனருக்கு அனுப்பி வைத்தது. அதில் முக்கியமாக இந்த இணைப்பு கால்வாயை தமிழ்நாட்டில் உயர்மட்டத்தில் அமைத்து கல்லணைக்கு பதிலாக கட்டளைகதவணையில் இணைக்குமாறு கோரப்பட்டு இருந்தது. தேசிய நீர் மேம்பாட்டு முகமை இந்த விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து இதில் தொடர்புடைய அனைத்து மாநிலங்களின் கருத்துக்களுடன் அனுப்பி உள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை பரிசீலனையில் இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தபோது கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் தமிழக அரசின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை மனு கொடுத்திருந்தார். அதேபோல் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த ஜூலை மாதம் மத்திய ஜல்சக்தி துறை மந்திரியை கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்து இந்த திட்டத்துக்கு விரைவில் மற்ற மாநிலங்களின் ஒப்புதலை பெற்று விரைந்து செயல்படுத்த மனு கொடுத்தார்.
இந்த நிலையில் இந்த திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. கோதாவரி, காவிரி இணைப்பு திட்டம் கருணாநிதி முதல்வராக இருக்கும்போதே முதல் கட்ட பணிகள் கரூர் மாவட்டம் மாயனூரில் தடுப்பணை கட்டி தொடங்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசு ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இணைப்பு திட்டம் தொடரவில்லை. மாயனூர் தடுப்பணையில் இருந்து கால்வாய் வெட்டி திருச்சி, கரூர் மாவட்டங்களுக்கு கட்டளைகால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
இப்போது அந்த கால்வாய் மீண்டும் தி.மு.க. ஆட்சியில் தூர்வாரப்படுகிறது. இந்த திட்டத்தின் 2-ம் பகுதியாக கட்டளை கால்வாயில் இருந்து புதுக்கோட்டை வரை கால்வாயை கொண்டு செல்லும் பணி கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அடுத்த கட்டமாக புதுக்கோட்டையில் இருந்து குண்டாறு வரை கால்வாயை இணைக்கவும் அதன் பிறகு ராமநாதபுரம் வரை கொண்டு செல்லவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
காவிரி, கோதாவரியை இணைத்தால் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வரை தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். 250 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநில அரசுகளுடன் பேசி வருகிறோம். எனவே காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.