எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 517 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், 39 துணை மின் நிலையங்களில் 712 எம்.வி.ஏ. அளவிற்குத் திறன் அதிகரிக்க 141 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 40 எண்ணிக்கையிலான திறன் மின்மாற்றிகளின் செயல்பாட்டினையும் அவர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் எவ்வித தடையுமின்றி மின்சாரம் கிடைக்கச் செய்யும் நோக்குடன், அதிகரித்து வரும் மின் தேவைக்கு ஏற்றவாறு தற்போது உள்ள மின்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டும், தரம் உயர்த்தப்பட்டும் மின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டும் வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின் பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, தேவைப்படுகின்ற உச்சபட்ச மின்தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், சரியான மின் அழுத்தத்துடன் கூடிய சீரான மின்சாரத்தை வழங்கிடவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதல் துணை மின் நிலையம் அமைப்பது சீரான மின் விநியோகத்திற்கு அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைகேற்ப புதிய மற்றும் தரம் உயர்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைத்தல், இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் / மின்மாற்றிகளின் திறன் அதிகரித்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - துவாக்குடி, சென்னை மாவட்டம் – மாம்பலம் (தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்), திருப்பத்தூர் மாவட்டம் – திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 357 கோடியே 98 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 230 கி.வோ துணை மின் நிலையங்கள்,
சென்னை மாவட்டம் – புளியந்தோப்பு (தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்), செங்கல்பட்டு மாவட்டம் – நல்லம்பாக்கம் (விகிதாசார அறிமுகம்), கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஈருடையாம்பட்டு, தூத்துக்குடி மாவட்டம்- சன்னதுபுதுக்குடி (விகிதாசார அறிமுகம்), திருவண்ணாமலை மாவட்டம் – வெம்பாக்கம் (விகிதாசார அறிமுகம்), திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மேட்டுப்பட்டி (தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்) மற்றும் வேங்கைமண்டலம் (விகிதாசார அறிமுகம்) ஆகிய இடங்களில் 84 கோடியே 76 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஏழு 110 கி.வோ துணை மின் நிலையங்கள்,
செங்கல்பட்டு மாவட்டம் – வேதாச்சல நகர் (வெளிப்புற ஆளில்லா துணை மின் நிலையத்தை உட்புற ஆளுள்ள துணை மின் நிலையமாக மாற்றுதல்), காஞ்சிபுரம் மாவட்டம் – காவனூர் (உட்புற துணை மின் நிலையம்), திருமுடிவாக்கம் (உட்புற துணை மின் நிலையம்), கிருஷ்ணகிரி மாவட்டம் –மரிக்கம்பள்ளி, ராணிப்பேட்டை மாவட்டம் – அரக்கோணம் (ஆளில்லா துணை மின் நிலையத்தை ஆளுள்ள துணை மின் நிலையமாக மாற்றுதல்), சேலம் மாவட்டம் – பூமனூர், தஞ்சாவூர் மாவட்டம் – திருநீலக்குடி, திருவள்ளூர் மாவட்டம் – அடையாளம்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் – அரட்டவாடி, பெரம்பலூர் மாவட்டம் – கூடலூர் ஆகிய இடங்களில் 74 கோடியே, 62 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பத்து 33 கி.வோ துணை மின் நிலையங்கள் என மொத்தம் 517 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்களை தமிழக முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், அரியலூர் மாவட்டம் - அரியலூர், செங்கல்பட்டு மாவட்டம் – இராமாபுரம், சென்னை மாவட்டம் – அன்னை நகர் மற்றும் கிண்டி, கடலூர் மாவட்டம் – சித்தரசூர் மற்றும் பி.முட்லூர், திண்டுக்கல் மாவட்டம் – கள்ளிமந்தையம் மற்றும் வத்தலக்குண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் – பழையசீவரம், வையாவூர், முசரவாக்கம், குன்னவாக்கம், பூணிமாங்காடு, சிறுசேரி, திருமுடிவாக்கம் மற்றும் தாமல், கள்ளக்குறிச்சி மாவட்டம் – கள்ளக்குறிச்சி மற்றும் காரணைபெருச்சானூர், கன்னியாகுமரி மாவட்டம் – கருங்கல், கரூர் மாவட்டம் – வேப்பம்பாளையம் மற்றும் பஞ்சப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் – சூசூவாடி மற்றும் குருபரப்பள்ளி, இராமநாதபுரம் மாவட்டம் – கமுதி, சேலம் மாவட்டம் – கே.ஆர். தோப்பூர், தேனி மாவட்டம் – வண்ணாத்திப்பாறை, திருவாரூர் மாவட்டம் – பேரளம், கப்பல் நகர், உள்ளிக்கோட்டை மற்றும் மன்னார்குடி, திருவள்ளூர் மாவட்டம் – திருமழிசை, திருவள்ளூர் மற்றும் பண்டி காவனூர், திருநெல்வேலி மாவட்டம் – மேலப்பாளையம், திருப்பூர் மாவட்டம் – கருவலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – குணசீலம், தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம், விழுப்புரம் மாவட்டம் – திருப்பாச்சனூர், விருதுநகர் மாவட்டம் – காரியாப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள 39 துணை மின் நிலையங்களில் 712 எம்.வி.ஏ. அளவிற்கு திறன் அதிகரிக்க 141 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 40 எண்ணிக்கையிலான திறன் மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
மேற்கண்ட 659 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மின்திட்டங்கள் மூலம் பகுதி வாழ் மக்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாய பெருமக்களுக்கு தரமான, தடையில்லா மின்சாரம் வழங்க வழிவகை ஏற்படும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப