எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று வரை அதி கனமழைக்கு வாய்ப்பு: மீண்டும் வெள்ளக்காடானது சென்னை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கியது. எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலுமே கனமழை தொடர்ந்து நீடித்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை பெய்து வரும் வேளையில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பொழிவு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த மாதத்தில் இதுவரை 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி பெருமழையை கொடுத்துள்ளன. சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே மழை பெய்ய தொடங்கியது. தீபாவளியையொட்டியும் கனமழை பெய்து வெள்ளம் தேங்கியது.
இந்த நிலையில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மாநகரில் மிக கன மழை பெய்தது. 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக சென்னையில் பெய்த மழையால் மாநகரம் வெள்ளக்காடாக மாறியது. இந்த நிலையில் கடந்த வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2-வதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அப்போது சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு பெரிய அளவில் மழை பொழிவு கொடுக்காமல் கருணை காட்டி விட்டு ஆந்திரா நோக்கி சென்றது. இருப்பினும் அப்போது புதுவை மாநிலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக மழை பெய்தது.
இந்த நிலையில் 3-வதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாகவும் அதுவும் சென்னைக்கு மிக கனமழை கொடுக்கும் எனவும் சென்னை வானிலை மையம் கடந்த வாரம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வானிலை மையம் அறிவிப்பில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பில்லை என தெரிவித்தது. ஆனால் காற்றழுத்தம் காரணமாக சென்னையில் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவித்து இருந்தது.
இதன்படி சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இருந்தே மழை பெய்தது. பிற்பகலுக்கு பிறகு கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை இரவு முழுவதும் நீடித்தது. இடி-மின்னலுடன் 10 மணி நேரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று காலையிலும் மழை நீடித்தது. இதன் காரணமாக சென்னையில் வெள்ளம் வடிந்து இருந்த பகுதிகளில் மழை நீர் மீண்டும் தேங்கி உள்ளது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகரம் மீண்டும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் 300 தெருக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
தி.நகர், கே.கே.நகர், மாம்பலம், மேற்கு மாம்பலம், கோயம்பேடு, வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, புரசைவாக்கம், புளியந்தோப்பு, எழும்பூர், வேளச்சேரி, மேடவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், வேப்பேரி உள்ளிட்ட மாநகரின் அனைத்து இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் வெளுத்து வாங்கிய மழையால் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் அதிகளவில் தேங்கி உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை கமிஷனர் அலுவலகம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி உள்ளது.
புளியந்தோப்பு, ஓட்டேரி, மாதவரம் வடபெரும்பாக்கம், விளங்காடுபாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் அதிகளவில் வீடுகளை சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடர்ந்து பெய்த மழையால் சென்னை மக்கள் மீண்டும் கடுமையான அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னை மாநகரில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. இதில் தாழ்வான இடங்களில் உள்ள 300 தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர். கடந்த முறை மழை வெள்ளம் தேங்கிய இடங்களிலேயே மீண்டும் மழை நீர் தேங்கி உள்ளது.
சென்னையில் பெய்த மழை காரணமாக 63 பகுதிகளில் உள்ள 151 தெருக்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த தெருக்களில் 47 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதற்கிடையே அதி கனமழை இன்று வரை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மழை நீடித்தால் சென்னையில் வெள்ளம் தேங்கி உள்ள இடங்களில் தண்ணீர் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.