முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது நிலைப்பாட்டை அவ்வப்போது ஓ.பன்னீர்செல்வம் மாற்றி வருகிறார் : தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு

புதன்கிழமை, 29 ஜூன் 2022      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சென்னை : ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றி வருவதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். 

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவுக்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாகவும் ஒற்றைத் தலைமை வேண்டுமென்றும் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை அ.தி.மு.க. பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் பொதுக்குழு உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று ஜூலை 11-ம் தேதி மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடிவெடுக்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்துகின்றனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளனர். இவ்வாறு அந்த மனுவில் பழனிசாமி தரப்பு கூறியுள்ளது.

கடந்த 23-ம் தேதி நடந்து முடிந்த அ.தி.மு.க., பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்திருந்தார். இதற்கு விளக்கம் அளித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து