எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா: ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேற்கு வங்காள மாநில வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரி்க்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் மற்றொரு வீட்டில் மேலும் ரூ.29 கோடியை அமலாக்கத்துறையின் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையில் நடிகை அர்பிதா முகர்ஜி பல தகவல்களை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநில வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014-ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டார். அப்போது அவர் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.
கடந்த 22-ந்தேதி மந்திரி பார்த்தா சட்டர்ஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல் தெற்கு கொல்கத்தாவில் அவரது உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கு ரூ.2 ஆயிரம், ரூ.500 என ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக மலைபோல குவிந்து கிடந்தது. அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே மந்திரி பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து கொல்கத்தா அமலாக்கத்துறை அலுவலகத்தில் மந்திரி பார்த்தா சட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகியோரிடம் விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் நடிகை அர்பிதா முகர்ஜியின் இன்னொரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். கொல்கத்தாவில் பெல்காரியா பகுதியில் உள்ள அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான வீட்டை அதிகாரிகள் திறந்து ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். அங்கும் கட்டுக்கட்டாக பணம் குவிந்து கிடந்தது. ஏற்கனவே ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில் இருந்தது போலவே இந்த வீட்டிலும் 2000, 500 ரூபாய் நோட்டுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தங்க கட்டிகளும் இந்தது.
இதையடுத்து பணம் எண்ணும் எந்திரங்களை எடுத்து வருமாறு வங்கி அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். பின்னர் வீட்டில் இருந்த பணத்தை எண்ணும் பணி தொடங்கியது. இப்பணி விடிய விடிய நடந்தது. இதில் சுமார் ரூ.29 கோடி இருப்பது தெரிய வந்தது. இந்த பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 5 கிலோ தங்க நகைகளும் சிக்கியது. சுமார் 18 மணிநேரம் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ரூ.29 கோடி பணம் 10 பெட்டிகளில் வைக்கப்பட்டன. அந்த பெட்டிகளுடன் நேற்று அதிகாலை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
தங்க நகைகளும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே நடந்த சோதனையில் ரூ.21 கோடி சிக்கியபோது அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தற்போது மேலும் ரூ.29 கோடி பணம் குவிக்கப்பட்டு இருப்பதை கண்டு திகைத்துவிட்டனர். அர்பிதா முகர்ஜியின் இரண்டு வீட்டில் இருந்தும் ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் அர்பிதா முகர்ஜி வீட்டில் நடந்த சோதனையில் டைரி ஒன்று சிக்கியது. அதில் முக்கிய தகவல்கள் உள்ளது என்றும் அதன் மூலம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப் படுகிறது.
இதற்கிடையே அமலாக்கத்துறை விசாரணையில் நடிகை அர்பிதா முகர்ஜி பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது:- 2016-ம் ஆண்டு பெங்காலி நடிகர் மூலம் மந்திரி பார்த்தா சட்டர்ஜி எனக்கு அறிமுகமானார். எனது வீட்டிலுள்ள அறையில் அவர் பணத்தை பதுக்கி வைத்து இருந்தார். இது அவர் வாங்கிய லஞ்ச பணமாக இருக்கலாம். அவர் நேரடியாக அந்த பணத்தை வாங்கவில்லை. உதவியாளர்கள் மூலம் அந்த பணத்தை அவர் பெற்றார் என கருதுகிறேன்.
சட்ட விரோதமாக பெறப்பட்ட பணத்தை அவர் எனது வீட்டில் வைத்து இருந்தார். அந்த அறையில் எவ்வளவு பணம் இருந்தது என்று எனக்கு தெரியாது. வாரத்துக்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை அவர் எனது வீட்டுக்கு வருவார். அவருக்கு நெருக்கமான பெண் ஒருவரும் வருவார். மேலும் மந்திரிக்கு நெருக்கமானவர்களும் வருவார்கள். அந்த அறையில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது
எனது வீட்டையும், இன்னொரு பெண்ணின் வீட்டையும் மந்திரி பார்த்தா சட்டர்ஜி மினி வங்கி போல பயன்படுத்தி வந்தார். பணத்தை எப்போதும் மற்றவர்கள் தான் கொண்டு வருவார்கள். அந்த அறைகளில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்து மந்திரி ஒரு போதும் என்னிடம் கூறியது இல்லை. இவ்வாறு அர்பிதா முகர்ஜி வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிப்பு
05 May 2024சென்னை : தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
யாரையும் பழிவாங்க வேண்டாம் : நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் சிக்கின
05 May 2024நெல்லை : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்
05 May 2024சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வை தமிழகத்தில் நேற்று 1.50 லட்சம் பேர் பங்கேற்று ஆர்வமுடன் எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 13 மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது : 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
05 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் பதிவுமுறை துவங்கியது
05 May 2024கொடைக்கானல் : சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு முறை நேற்று இரவு முதல் தொடங்கியது.
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டராக இருக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட் கருத்து
05 May 2024புதுடெல்லி : நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக இருக்கக்கூடாது என்று வழக்கு ஒன்றின் தீரப்பில
-
காலவரையின்றி சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா?
05 May 2024புதுடில்லி : ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ) காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்
-
நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
05 May 2024பெங்களூரு : எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று குஜராத்தை வீழ்த்திய பிறகு பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் த
-
மதுரை சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி : 536 மதிப்பெண்கள் பெற்று ஒருவர் சாதனை
06 May 2024மதுரை : நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மதுரை மத்திய சிறையில் உள்ள 15 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
-
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: தமிழகத்தில் 94.56 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி : மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : * தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 9-ம் தேதி வழங்கப்படும்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் -2 தேர்வு முடிவுகளில் 94.56 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் : பெர்காம்பூர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
06 May 2024புவனேஷ்வர் : ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.