எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகமதாபாத் / ஷிம்லா: குஜராத்தில் வரலாற்று வெற்றியுடன் 7-வது முறை பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 2022-ஆம் ஆண்டின் கடைசித் தேர்தலாக அமைந்துவிட்ட குஜராத் சட்டப்பேரவை, இமாச்சலப் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வும், காங்கிரஸும் தலா ஒரு வெற்றியோடு நிறைவு செய்துள்ளன.
குஜராத் - இமாச்சலில்...
மொத்தம் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1ம் தேதியும், 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை...
இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. நேற்று அவை திறக்கப்பட்டு, பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் தொடங்கியது. குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. குஜராத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி உள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டது. காங்கிரஸ் 179 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும் போட்டியிட்டது. ஆம் ஆத்மி 181 தொகுதிகளில் போட்டியிட்டது.
கடந்த தேர்தலில்....
இந்நிலையில் குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பா.ஜ.க. பெரும்பான்யான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு அமோக வெற்றியை தந்துள்ளது. குஜராத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க. தனது சொந்த வரலாற்று சாதனையை உடைத்தது மட்டுமல்லாமல், புதிய வரலாற்றையும் படைத்துள்ளது. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு க்ளீன் ஸ்வீப் என்று சொல்லும் அளவிற்கு வெற்றி வாய்ப்பு அமையவில்லை. அதற்கு காரணம் தேர்தலுக்கு சமீபமாக நடந்து முடிந்திருந்த பட்டிதார் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டம். ஹர்திக் படேல் முன்னெடுத்த அந்தப் போராட்டம் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பலைகளை உருவாக்கியது. அதனால் 99 இடங்களைக் கைப்பற்றியது.
வரலாற்று வெற்றி...
100-க்கும் கீழான தொகுதிகளில் மட்டுமே வெற்றி என்பது பா.ஜ.க. தனிப்பட்ட முறையில் சறுக்கலாகவே கருதியது. ஆனால், இந்த முறை வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது பா.ஜ.க.. கடந்த முறை வாக்குகள் சிதறக் காரணமாக இருந்த ஹர்திக் படேல் இந்த முறை பா.ஜ.க. வேட்பாளர். அந்த அளவுக்கு தேர்தல் உத்திகளை சிறப்பாக வகுத்து சொன்னபடியே வரலாற்று வெற்றியை பா.ஜ.க. பதிவு செய்துள்ளது.
வரலாற்றுச் சாதனை...
இதுவரை குஜராத் அரசியல் வரலாற்றில் பா.ஜ.க.வின் கோல்டன் பீரியட் என்றால், அது 2002-ல் அக்கட்சி 127 இடங்களைப் பிடித்ததுதான் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை வசப்படுத்தி வரலாற்றுச் சாதனையை பா.ஜ.க. பதிவு செய்துள்ளது. குஜராத் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்னதாக காங்கிரஸ் 1985-ல் 182 தொகுதிகளில் 149 தொகுதிகளைக் கைப்பற்றியதே அதிகபட்ச வெற்றியாக இருந்தது.
சூறாவளிப் பிரச்சாரம்...
குஜராத் தேர்தலுக்காக பிரதமர் மோடி தொடர்ச்சியாக பலகட்டப் பிரச்சாரங்கள், பேரணிகள், ரோட் ஷோக்கள் என்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் வெற்றி பெற்ற பின்னர் அடுத்த நாள் அதற்கான வெற்றிப் பேரணியை மோடி குஜராத்தில் தான் நடத்தினார். உண்மையில் அவர் அப்போதே குஜராத் தேர்தலுக்கான முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி அலை...
'நான் உருவாக்கிய குஜராத்' என்று அவர் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால், எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி மோடி அலை மங்கவில்லை. இன்னும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வின் முகமாக தாமே இருப்பேன் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தேய்ந்துபோன காங்கிரஸ்: 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் 14 எம்எல்ஏக்கள் பா.ஜ.க.விற்கு தாவினர். அதனால் அதன் பலம் சட்டப்பேரவையில் எடுபடவில்லை. இந்நிலையில், இந்தத் தேர்தலில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் களத்தில் இறங்கி வேலை செய்வதில் விறுவிறுப்பைக் காட்டவில்லை. தோல்வியை முன் கூட்டியே கணித்துக் கொண்டதுபோல் நாங்கள் அமைதியாக காய் நகர்த்துகிறோம் என்று பகிரங்கமாகவே அறிவித்தது. சொல்லப்போனால் 1985க்குப் பின்னர் காங்கிரஸ் குஜராத்தில் தொடர்ந்து தேய்ந்து கொண்டேதான் இருக்கிறது.
காலூன்றிய ஆம் ஆத்மி...
இந்தத் தேர்தலில் குஜராத்தில் ஆம் ஆத்மி தனது இருப்பை உறுதி செய்தவிதம் வரவேற்பைப் பெற்றுள்ளது. பா.ஜ.க.வை எதிர்த்து பிரதமர், உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலத்திலேயே அரவிந்த் கெஜ்ரிவாலும், பகவந்த் மானும் மேற்கொண்ட துணிச்சலான பிரச்சாரம் தான் அதற்கு 4 முதல் 7 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.
இமாச்சல்லில் காங்.,..
இமாச்சலப் பிரதேச தேர்தலைப் பொறுத்தவரை பா.ஜ.க.விடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ். கடந்த 2017 தேர்தலில் பா.ஜ.க. 44 என்ற எளிதான வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் மட்டுமே வென்றது. சிபிஎம் ஒரு தொகுதியிலும் சுயேட்சைகள் இருவரும் வென்றிருந்தனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் கூட ஆரம்பக்கட்ட முடிவுகள் ஒரு எளிதான வெற்றியை நோக்கி காங்கிரஸை இட்டுச் செல்லவில்லை.
39 தொகுதிகளில்...
நீண்ட இழுபறிக்குப் பின்னர் பிற்பகலில் இருந்தே காங்கிரஸின் வெற்றி உறுதியானது. காங்கிரஸ் 39 தொகுதிகளில் வெற்றி பெற்று அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க. 26 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளனர். 68 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட இமாச்சலில் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான் கிடைத்துவிடும்.
காங்., எச்சரிக்கை...
இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. சுயேட்சைகளின் ஆதரவைக் கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே, காங்கிரஸில் இருந்து தாவும் எம்எல்ஏக்கள் ஆதரவையும் திரட்டலாம் என்பதால், காங்கிரஸ் முன்னெச்சரிக்கையாக தனது எம்எல்ஏக்களை பத்திரப்படுவதாக தெரிகிறது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஹரியாணா முதல்வர் பூபீந்திர சிங் ஹூடாவிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
27 ஆண்டுகளாக....
குஜராத்தில் 1995ல் இருந்து பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. 1995ல் அக்கட்சியின் கேசுபாய் படேல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அடுத்து நரேந்திர மோடி அதிகபட்சமாக 12 ஆண்டுகள் 227 நாட்கள் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு அடுத்து ஆனந்தி பென் படேல் 2 ஆண்டுகள் 77 நாட்களும், விஜய் ரூபானி 5 ஆண்டுகள் 37 நாட்களும் முதல்வர்களாக இருந்துள்ளனர். பூபேந்திர படேல் சுமார் 15 மாதங்களாக முதல்வராக இருந்து வருகிறார். தற்போது 7-வது முறை அமோக வெற்றியுடன் குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.
BOX - 1
குஜராத் தேர்தல் (மொத்தம் - 189):
கட்சி தொகுதிகள்
1) பா.ஜ.க. 156
2) காங்கிரஸ் 17
3) ஆம் ஆத்மி 5
4) பிற 4
BOX - 2
இமாச்சல் தேர்தல் (மொத்தம் - 69):
கட்சி தொகுதி
1) காங்கிரஸ் 40
2) பா.ஜ.க. 25
3) பிற 3
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.