முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      ஆன்மிகம்
thirupathi-2022 11 23

Source: provided

திருப்பதி : திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பதியில் கடந்த வாரம் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக குறைந்த அளவு பக்தர்கள் வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன் ரத சப்தமி எனும் ஒரு நாள் பிரமோற்சவ விழா நடந்தது. ஒரே நாளில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வருவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். இதனால் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சுமார் 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்களின் கூட்டம் குறையாததால் வைகுந்தம் காம்ப்ளக்சில் அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து